மேலும் அறிய

சாலையோரம் வைத்து ஷவர்மா விற்பனை செய்யக்கூடாது - புதுக்கோட்டையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை

புதுக்கோட்டையில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாட்டில் காலாவதியான பொருள்களை முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்கிறது, உணவுப் பாதுகாப்புச் சட்டம். ஆனால், சில கடைகளில் காலாவதி தேதியை மாற்றிவிட்டுப் பொருள்களை விற்பனை செய்கிறார்கள். அதை வாங்கிப் பயன்படுத்தும் மக்கள் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகிறார்கள். மேலும் உணவகங்களில் சமைக்க பயன்படுத்தபடும் பொருட்கள், சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அதேசமயம் இறைச்சி வகைகள் சமைக்க பயன்படுத்தும் போது நல்லதாக பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் உயிரிழப்புகள் நடந்து வருகிறது. ஆகையால் தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் விதிமுறைகளை பின்பற்றி சரியான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றனவா, உணவுகளை பாதுகாக்க முறையான பிரீசர் வசதி உள்ளதா என்று ஆய்வு செய்யவேண்டும். மேலும் இவ்வாறு உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத மற்றும் தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சாலையோரம் வைத்து ஷவர்மா விற்பனை செய்யக்கூடாது  - புதுக்கோட்டையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை

குறிப்பாக நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் இறந்த சம்பவத்தை தொடா்ந்து புதுக்கோட்டையில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரவீன்குமார் தலைமையில் அதிகாரிகள் நகரப்பகுதியில் புதிய பஸ் நிலையம் அருகே, பழைய பஸ் நிலையம், அண்ணா சிலை அருகே, டி.வி.எஸ். கார்னர் அருகே உள்ளிட்ட இடங்களில் உள்ள அசைவ ஓட்டல்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சமையல் செய்யும் இடம் மற்றும் கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். மேலும் சிக்கன்களை தயார் செய்து வைத்திருந்ததையும் பார்த்தனர். மேலும் ஷவர்மா கடைகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சாலையோர கடைகளிலும் சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது கெட்டுப்போன சிக்கன்கள் பயன்படுத்தப்பட்டதை கண்டறிந்தனர். இதில் சுமார் 30 கிலோ சிக்கன்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார். மேலும் அதனை பினாயில் மற்றும் ஆசிட் ஊற்றி அழித்தனர். இதேபோல ஷவர்மா கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். சாலையோரம் வைத்து ஷவர்மா விற்பனை செய்யக்கூடாது என எச்சரித்தனர். ஒரு ஓட்டலுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தொிவித்தனர். மாவட்டம் முழுவதும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றனர். இந்த சோதனையின் போது நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்களும் உடன் இருந்தனர்.

மேலும் அனைத்து உணவங்களிலும் உணவின் தரத்தை பற்றி உடனடியாக பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் உணவு பாதுக்காப்பு துறை சார்பாக தொலைபேசி எண், மற்றும் புகார் எண் என தனி தனியாக ஒட்டவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து இனி வரும் காலங்களில் தரமில்லாத பொருட்களை பயன்படுத்தும் உணவங்கள் மீதும், உரிமையாளர் கடுமையான சட்டரீதியான நடவடிக்கை எடுக்கபடும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Rahul Slams BJP, EC: “தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது“ - புகார்களை அடுக்கிய ராகுல் காந்தி
“தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது“ - புகார்களை அடுக்கிய ராகுல் காந்தி
PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
7ஆம் நாளாய் போராட்டம்; தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
7ஆம் நாளாய் போராட்டம்; தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kaliyammal In TVK | திமுக - அதிமுகவிற்கு NO.. தவெகவில்  காளியம்மாள்? தேதி குறித்த விஜய்!
சங்கீதா - கிரிஷ் விவாகரத்து? INSTAGRAM-ல் பெயர் மாற்றம்! கோலிவுட்டில் அடுத்த பூகம்பம்  | Sangeetha Kirsh Divorce
”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rahul Slams BJP, EC: “தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது“ - புகார்களை அடுக்கிய ராகுல் காந்தி
“தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது“ - புகார்களை அடுக்கிய ராகுல் காந்தி
PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
PM Modi On Tariff: நாங்க ரெடி, என்ன வந்தாலும் பாத்துக்கலாம்.. ட்ரம்புக்கு வார்னிங் கொடுத்த பிரதமர் மோடி
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.?
7ஆம் நாளாய் போராட்டம்; தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
7ஆம் நாளாய் போராட்டம்; தூய்மைப் பணியாளர்கள் வாக்குறுதிகளை முதல்வர் நிறைவேற்றுவாரா?- அன்புமணி கேள்வி
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களே… இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்- வாங்கிட்டீங்களா? எப்படி?
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களே… இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்- வாங்கிட்டீங்களா? எப்படி?
TNEA 2025: பொறியியல் 3ஆம் சுற்று கலந்தாய்வு சாய்ஸ் ஃபில்லிங் இன்று முதல்! உங்களுக்கான வாய்ப்பு இதோ!
TNEA 2025: பொறியியல் 3ஆம் சுற்று கலந்தாய்வு சாய்ஸ் ஃபில்லிங் இன்று முதல்! உங்களுக்கான வாய்ப்பு இதோ!
திருப்பூர் SSI கொலை வழக்கில் பரபரப்பு! தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
திருப்பூர் SSI கொலை வழக்கில் பரபரப்பு! தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!
EV Discounts: லைஃப் டைம் செட்டில்மெண்ட் - ரூ.10 லட்சம் வரை தள்ளுபடி, மின்சார கார்களுக்கு அதிரடி ஆஃபர்
EV Discounts: லைஃப் டைம் செட்டில்மெண்ட் - ரூ.10 லட்சம் வரை தள்ளுபடி, மின்சார கார்களுக்கு அதிரடி ஆஃபர்
Embed widget