மேலும் அறிய

திருச்சியில் அதிரவைக்கும் கஞ்சா புழக்கம்... சிறுவர்கள், மாணவர்கள் சீரழியும் அவலம்: தவிக்கும் பெற்றோர்

காஜாபேட்டை பசுமடம் பகுதியில் கஞ்சா, போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகளின் புழக்கம் அதிகரித்துள்ளது. மாணவர்கள், சிறுவர்களை ஏஜெண்டுகளாக்குகின்றனர் என்று திருச்சி கலெக்டரிடம் மனு

தஞ்சாவூர்: திருச்சி காஜாபேட்டை பகுதியில் கஞ்சா, போதை மாத்திரை புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள், சிறுவர்கள் தவறான பாதையில் செல்லும் நிலை உள்ளதால் உடன் நடவடிக்கை என்று வலியுறுத்தி திருச்சி கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாபேட்டை பசுமடம் பகுதியில் கஞ்சா, போதை ஊசி மற்றும் போதை மாத்திரைகளின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் இன்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் திரண்டு வந்து புகார் மனு அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மனு அளித்த பின் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் தரப்பில் கூறுகையில், நாங்கள் கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக காஜாபேட்டை பசுமடம் பகுதியில் பாரம்பரியமாக வாழ்ந்து வருகிறோம். ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் குடியேறிய ஒரு பெண்மணி, போதை மாத்திரைகள், கஞ்சா மற்றும் போதை ஊசிகளை விற்பனை செய்து வருகிறார். வெளியில் இருந்து வரும் நபர்களால் எங்கள் பகுதி இளைஞர்கள், சிறுவர்கள் என ஒட்டுமொத்த இளம்தலைமுறையும் சீரழிந்து வருகிறது. 

நன்றாக வேலைக்குச் சென்று கொண்டிருந்த வாலிபர்களை, இதை விற்றால் உங்களுக்கு 500 ரூபாய் தருகிறேன் என ஆசை காட்டி இந்த போதை கும்பல் தங்களது ஏஜென்ட்டுகளாக மாற்றி அவர்களின் வாழ்க்கையையே பாழாக்கியுள்ளது. முக்கியமாக போதை மாத்திரைகளைப் பயன்படுத்தும் இளைஞர்கள், தங்களது சொந்த தாயாரையே அடித்து துன்புறுத்துகின்றனர். இதுகுறித்து போதைப்பொருட்கள் விற்பவர்களை தட்டிக் கேட்டால், வீடுகளின் மீது நள்ளிரவில் கற்களை வீசி தாக்குதல் நடத்துகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் போது, வீட்டின் ஓடுகளை உடைத்ததால் மக்கள் வீட்டுக்குள் இருக்க முடியாமல் தவித்துள்ளனர். மேலும், வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியும், உடைத்தும் இந்த கும்பல் அட்டகாசம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து திருச்சி மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. புகார் அளிக்கச் சென்ற பொதுமக்களிடம், நீங்கள் ஏன் அங்கு இருக்கிறீர்கள்? இடத்தை காலி செய்துவிட்டுப் போக வேண்டியதுதானே?" எனப் போலீசார் அலட்சியமாகப் பேசுகின்றனர். புகார் கொடுத்துவிட்டு வந்த சில மணி நேரத்திற்குள், சம்பந்தப்பட்ட நபர்கள் தெருவுக்குள் வந்து, யார் போலீசுக்குச் சென்றார்களோ, அவர்களின் வீடுகள் மீது கல் வீசுவோம் என வெளிப்படையாக மிரட்டல் விடுக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும், மாநகர காவல் துறையும் உடனடியாகத் தலையிட்டு, காஜாபேட்டை பசுமடம் பகுதியில் போதைப்பொருள் சப்ளை செய்யும் பிரதான குற்றவாளியான அந்தப் பெண்ணை அப்பகுதியை விட்டு அப்புறப்படுத்த வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என தெரிவித்தார். 

இந்த புகார் மனுவால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிறுவர்களை குறிவைத்தும், பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா பழக்கத்தை ஏற்படுத்தி அவர்களை கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. தவறான வருமானம் மற்றும் போதைக்கு இப்பகுதி சிறுவர்கள், மாணவர்கள் அடிமையாவதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
Trichy power cut: திருச்சியில் நாளை (01-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட பட்டியல்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சி அரசு மருத்துவமனையில் எலி கடித்த சம்பவம்... தூய்மைப்பணிகளை தீவிரப்படுத்திய நிர்வாகம்
திருச்சியில் தீவிரமடையும் குடிநீர் நெருக்கடி: நீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால் மாநகராட்சி அவசர நடவடிக்கை
திருச்சியில் தீவிரமடையும் குடிநீர் நெருக்கடி: நீர் ஆதாரங்கள் வறண்டு வருவதால் மாநகராட்சி அவசர நடவடிக்கை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Upcoming Powerful SUVs: SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
SUV வாங்குற பிளான் இருக்கா.? அடுத்த 3 மாதங்களில் வரும் 3 பவர்ஃபுல் கார்கள்; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget