மேலும் அறிய

திருச்சி மாவட்டத்தில் ரூ.1 கோடி நிலம் அபகரிப்பு - 4 பேர் மீது வழக்கு

ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பிரடி, பன்னீர்செல்வத்தின் நிலத்தை அபகரிப்பதற்காக திட்டம் தீட்டியுள்ளார்.

திருச்சி அருகே போலி ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து ரூ.1 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி வரகனேரி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 65). இரும்பு வியாபாரியான இவருக்கு சொந்தமான 52 சென்ட் காலி இடம் திருவெறும்பூர் அருகே எல்லக்குடி கிராமத்தில் உள்ளது. 14.06.1985 அன்று அந்த நிலத்தை ஒருவரிடம் இருந்து பன்னீர்செல்வம் வாங்கி, தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்திருந்தார். இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1 கோடி ஆகும். இந்தநிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம், பன்னீர்செல்வம் எல்லக்குடிக்கு சென்றார். அப்போது அடையாளம் தெரியாத சிலர், பன்னீர்செல்வத்தின் நிலத்தை சுற்றி புதிதாக வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். உடனே அவர், இதுபற்றி அவர்களிடம் சென்று கேட்டுள்ளார். அப்போது, அந்த நிலம் திருச்சி பெரியகம்மாள தெருவை சேர்ந்த பிரடி (56) என்பவருக்கு சொந்தமானது என்று கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் திருவெறும்பூரில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று ஆவணங்களை வாங்கி பார்த்துள்ளார். அப்போது, பன்னீர்செல்வம் பெயரில் போலி ஆதார் ஆவணங்களை தயாரித்து, ஒருவரை பன்னீர் செல்வம்போல் ஆள்மாறாட்டம் செய்ய வைத்து, நிலப்பத்திரம் தொலைந்து விட்டதாக கூறி அதே நிலத்தை தனது பெயருக்கு பிரடி 18-7-2022 அன்று பத்திரப்பதிவு செய்தது தெரியவந்தது. அத்துடன், பிரடி தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்தபோது திருச்சி அரியமங்கலம் இலந்தைபட்டி மோதிலால் தெருவை சேர்ந்த பிரகாஷ் (42), மலையப்பநகர் காமராஜர் தெருவை சேர்ந்த சுப்புலட்சுமி (51) ஆகியோர் சாட்சி கையொப்பம் போட்டுள்ளது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பன்னீர்செல்வம் திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.


திருச்சி மாவட்டத்தில் ரூ.1 கோடி நிலம் அபகரிப்பு - 4 பேர் மீது வழக்கு

மேலும் அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், மிக நேர்த்தியாக இந்த மோசடியில் பிரடி செயல்பட்டது அம்பலமானது. அதாவது, ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த பிரடி, பன்னீர்செல்வத்தின் நிலத்தை அபகரிப்பதற்காக திட்டம் தீட்டியுள்ளார். இதற்காக பன்னீர்செல்வத்தின் ஆதார் கார்டு போல், மற்றொரு நபருக்கு அதே பெயரில் போலி ஆதார் கார்டு ஒன்றை பிரடி தயாரித்துள்ளார். அதன் பின்னர் அந்த நிலத்தின் சர்வே நம்பர் உள்ளிட்ட தகவல்களை புரோக்கர்கள் மூலம் சேகரித்துள்ளார். பின்னர் அவர், அந்த வேறொரு நபரை பன்னீர்செல்வம் போல் ஆள்மாறாட்டம் செய்யவைத்து, தனது அசல் நில பத்திரம் மணப்பாறை மாரியம்மன் கோவில் பகுதியில் தொலைந்து விட்டதாக மணப்பாறை போலீசில் புகார் செய்துள்ளார்.  போலீசார் வழக்குப்பதிவு செய்து அசல் பத்திரங்கள் கிடைக்கவில்லை என்று சான்று கொடுக்கவே, அதை பயன்படுத்தி, பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் நகல் பத்திரம் வாங்கியுள்ளார். பின்னர், பன்னீர்செல்வம் தனக்கு அந்த நிலத்தை கிரயம் செய்து கொடுத்ததாக காட்ட, அதே நபரை ஆள் மாறாட்டம் செய்ய வைத்து திருவெறும்பூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் தனது பெயருக்கு அந்த நிலத்தை கிரயம் செய்து கொண்டுள்ளதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரடி, பன்னீர்செல்வம் போல் ஆள்மாறாட்டம் செய்த நபர், பிரகாஷ், சுப்புலட்சுமி ஆகிய 4 பேர் மீது திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.1 கோடி நிலத்தை போலி ஆவணங்களை தயாரித்து அபகரித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
போக்குவரத்து கழகத்தில்  வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
போக்குவரத்து கழகத்தில் வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
Annamalai: ‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி
O Panneerselvam | செப்டம்பரில் புது கட்சி.. OPS எடுத்த அஸ்திரம்! ஐடியா கொடுத்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
BJP MDMK Alliance: பாஜக கூட்டணியில் மதிமுக? உளவுத்துறை பகீர் ரிப்போர்ட்- ஸ்டாலின் மாஸ்டர் ப்ளான்
போக்குவரத்து கழகத்தில்  வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
போக்குவரத்து கழகத்தில் வேலை வேண்டுமா? மிஸ் பண்ணிடாதீங்க! எப்படி அப்ளை பண்ணுவது! முழு விவரம்
Annamalai: ‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
‘கூட்டணி ஆட்சிதான்‘; அடித்துச் சொல்லும் அண்ணாமலை - அதிமுக கூட்டணியில் மீண்டும் புயல்
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
அண்ணா பல்கலை.க்கே இதுதான் கதியா?- தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனே பணி நீட்டிப்பு  வழங்க கோரிக்கை!
அண்ணா பல்கலை.க்கே இதுதான் கதியா?- தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனே பணி நீட்டிப்பு வழங்க கோரிக்கை!
MK Stalin: இது சரியல்ல.. மரியாதையா பேசுங்க.. காமராஜர் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
MK Stalin: இது சரியல்ல.. மரியாதையா பேசுங்க.. காமராஜர் விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்
Airtel Offer: ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!
Airtel Offer: ஏர்டெல் யூசரா நீங்க? 1 ஆண்டு இதை இலவசமா பயன்படுத்தலாம்- அள்ளித்தந்த ஆஃபர்- ரூ.20 ஆயிரம் மதிப்பு!
Amarnath Ramakrishna: கீழடி; எழுத்துப் பிழைய வேணா திருத்தறேன், உண்மைய திருத்த முடியாது“ - அதிரடி காட்டிய அமர்நாத் ஐஏஎஸ்
கீழடி; எழுத்துப் பிழைய வேணா திருத்தறேன், உண்மைய திருத்த முடியாது“ - அதிரடி காட்டிய அமர்நாத் ஐஏஎஸ்
Embed widget