மேலும் அறிய

புதுக்கோட்டை: 4 மாதத்தில் ரூ.48 லட்சம் மதிப்புள்ள 3 டன் குட்கா, 15 கிலோ கஞ்சா பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் ரூ.48 லட்சம் மதிப்பில் 3 டன் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக மொத்தம் 174 பேர் கைது .

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 4 மாதங்களில் ரூ.48 லட்சம் மதிப்பில் 3 டன் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக மொத்தம் 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் ரூ.1.61 லட்சம் மதிப்புள்ள 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா, சட்டவிரோத மது விற்பனை, மணல் கடத்தல் போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்பி வந்திதா பாண்டே பொறுப்பேற்றவுடன் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட விற்பனையை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பல இடங்களில் சோதனை செய்து தடைசெய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து இதற்கு காரணமானவர்களை கைது செய்தனர். இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2022 ஜூலை 8ம் தேதி முதல் நவம்பர் 12ம்தேதி வரையிலான வழக்குகள் தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. 


புதுக்கோட்டை: 4 மாதத்தில் ரூ.48 லட்சம் மதிப்புள்ள 3 டன் குட்கா, 15 கிலோ கஞ்சா பறிமுதல்

இதன்படி, மதுவிலக்கு போலீசார் கடந்த 4 மாதங்களில் 1,375 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 1,354 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்குகளில் 21,978 உள்ளூர் உற்பத்தி மது பாட்டில்களும், 229 புதுச்சேரி மது பாட்டில்களும், 44 லிட்டர் கள்ள சாராயமும், 1,120 லிட்டர் சாராய ஊறல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 37 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தொடர்புள்ள 62 பேரில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.1.61 லட்சம் மதிப்புள்ள 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 18 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 144 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் தொடர்புள்ள 174 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.48.04 லட்சம் மதிப்புள்ள 3,109 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 29 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மணல் கடத்தல் தொடர்பாக 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 125 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


புதுக்கோட்டை: 4 மாதத்தில் ரூ.48 லட்சம் மதிப்புள்ள 3 டன் குட்கா, 15 கிலோ கஞ்சா பறிமுதல்

இந்த வழக்குகள் தொடர்பாக 51 மாட்டு வண்டிகளும், 11 இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களும், 88 நான்கு சக்கர வாகனங்களும் என மொத்தம் 150 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 4 மாதங்களில் மொத்தம் 15 பேர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள், 9 பேர் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள், தலா ஒருவர் சட்டம் ஒழுங்கு பிரிவிலும், போதைத் தடுப்புப் பிரிவிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த தகவலை மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget