மேலும் அறிய

விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்களின் விலை உயர்வு

மாண்டஸ்’ புயல் காரணமாக விசைப்படகு மீனவர்கள் கடந்த 4 நாட்களாக கடலுக்கு செல்லாததால் மீன்களின் விலை உயர்ந்தது. இறால் கிலோ ரூ.350-க்கும், நண்டு ரூ.450-க்கும் விற்பனையானது.

வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் காலையில் வெயில் அடித்தது. அதன்பின் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை வரை மழை எதுவும் பெய்யவில்லை. இதேபோல் மாவட்டம் முழுவதும் காணப்பட்டது. கடலோர பகுதிகளிலும் மழை பெய்யவில்லை. ஆனாலும் புயலின் தாக்கம் இருக்கும் என்பதால் கடந்த 4 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 
 

விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்களின் விலை உயர்வு
 
'மாண்டஸ்' புயல் காரணமாக கடந்த 4 நாட்களாக ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. இந்தநிலையில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி பகுதியில் பிடித்து வரப்பட்ட மீன்கள் இப்பகுதிக்கு விற்பனைக்கு வந்தது. இதனால் வெளியூர்களில் இருந்து மீன்களை வாங்க பொதுமக்கள் வந்திருந்தனர். மீனவர்கள் சரிவர கடலுக்குள் மீன் பிடிக்க செல்லாததால் மீன்கள் வரத்தும் குறைந்து காணப்பட்டது. இதனால் மீன்களின் விலை கிடு கிடுவென உயர்ந்தது. சாதாரண நேரங்களில் கிலோ ரூ.250-க்கு விற்பனை செய்யப்படும் இறால் தற்போது ரூ.350-க்கும், ரூ.300-க்கு விற்பனையாகும் நண்டு தற்போது ரூ.450-க்கும் விற்பனையானது. இதேபோல் அனைத்து வகையான மீன்களும் கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை கூடுதலாக விற்பனையானது. இதனால் மீன் வாங்க வந்தவர்கள் மீன்களை அதிக விலை கொடுத்து வாங்கி சென்றனர். தற்போது இயல்புநிலை திரும்பியதால் நாளை (திங்கட்கிழமை) மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீன்களின் விலையும் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget