மேலும் அறிய

PM Modi Visits Trichy: பிரதமர் வருகையால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 2 நாட்களுக்கு பொது தரிசனம் ரத்து

பிரதமர் மோடி திருச்சியில் இருந்து புறப்பட்ட பிறகு கடைகளை திறந்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி நாளை - 20 ஆம் தேதி காலை 9.20 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து, அங்கிருந்து தனி விமானத்தில் திருச்சி வருகிறார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 10.55 மணி அளவில் தரிசனம் செய்வதுடன், அங்கு நடைபெறும் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். தொடர்ந்து, காரில் ஹெலிகாப்டர் தளத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, மதியம் 2.05 மணிக்கு ராமேசுவரம் செல்கிறார். 2.10 மணிக்கு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் தரிசனம் செய்கிறார். அங்கு நடைபெறும் பல்வேறு வழிபாட்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இரவு 7.30 மணிக்கு அங்குள்ள ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்துக்கு செல்லும் பிரதமர், அங்கு இரவு தங்குகிறார்.  மேலும், நாளை மறுநாள் 21 ஆம் தேதி காலை, ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடும் பிரதமர் மோடி, தொடர்ந்து ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார். பின்னர், காலை 10.05 மணிக்கு சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்கிறார். அங்குள்ள கோதண்டராமர் கோயிலில் 10.25 முதல் 11 மணி வரை நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கிறார். மேலும், 11.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் வருகையை முன்னிட்டு, சென்னை, திருச்சி, ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் தங்கும் இடங்கள் மற்றும் செல்லும் வழிகளில் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.


PM Modi Visits Trichy: பிரதமர் வருகையால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் 2 நாட்களுக்கு  பொது தரிசனம் ரத்து

இந்நிலையில் திருச்சிக்கு வருகை தர உள்ள பிரதமர் மோடி அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிரமாக ஆலோசனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்யும் பிரதமர் மோடி  அங்கு சுமார் 40 நிமிடங்கள் கோயிலில் இருக்கிறார். பின்பு கோயில் பகுதிகளை பார்வையிட உள்ளதாக தெரிகிறது. கோயிலில் உழவார பணிகளையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆகையால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அருகே உள்ள அனைத்து கடைகளையும் நேற்று மாலை 6 மணி முதல் நாளை மதியம் 2.30 மணி வரை மூடபடும் என்று காவல்துறையில் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடி திருச்சியில் இருந்து புறப்பட்ட பிறகு கடைகளை திறந்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் பகுதி முழுவதையும் காவல்துறையினர் தங்களது கட்டுபாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர். 

இதனை தொடர்ந்து நாளை (20.01.2024) பாரத பிரதமர் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு நலன் கருதி இன்று (19.01.2024) காலை 06:00 முதல் நாளை (20.01.2024) பிற்பகல் 02:30 மணி வரை பக்தர்கள் பொது தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Redfort Blast: டெல்லி சாலை.. கார் வெடித்து சிதறிய தருணம் - முதன்முறையாக வெளியான க்ளோஸ்-அப் சிசிடிவி காட்சி
Redfort Blast: டெல்லி சாலை.. கார் வெடித்து சிதறிய தருணம் - முதன்முறையாக வெளியான க்ளோஸ்-அப் சிசிடிவி காட்சி
சென்னைவாசிகளே! 1 ரூபாயில் மெட்ரோ, பேருந்து, ரயிலில் இன்று முதல் போகலாம் - எப்படி?
சென்னைவாசிகளே! 1 ரூபாயில் மெட்ரோ, பேருந்து, ரயிலில் இன்று முதல் போகலாம் - எப்படி?
Bihar Exit Poll: தேர்தல் கருத்து கணிப்பு பலிக்குமா.?  2015, 2020, 2024ஆம் ஆண்டில் சொன்னது என்ன.? நடந்தது என்ன.?
மீண்டும் ஆட்சியில் பாஜக.? கருத்து கணிப்பு பலிக்குமா.? சொன்னதும் இதுவரை நடந்ததும் என்ன.?
Asim Munir: வேடிக்கை பார்த்த பாக்., பிரதமர்.. அதிகாரங்களை வாரிக்கொண்ட அசிம் முனிர் - நீதிபதிகளுக்கு ஷாக்
Asim Munir: வேடிக்கை பார்த்த பாக்., பிரதமர்.. அதிகாரங்களை வாரிக்கொண்ட அசிம் முனிர் - நீதிபதிகளுக்கு ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cuddalore Accident | பேருந்து மீது மோதிய வேன்தூக்கி வீசப்பட்ட பெண் பகீர் சிசிடிவி காட்சிக்ள்
Priest Controversy Speech | ’’தாமரை மலர வேண்டும்’’கோயில் குருக்கள் சர்ச்சை பேச்சு வைரல் வீடியோ
PTR vs Moorthy |
Madhampatti Rangaraj vs Joy Crizilda | ’’ HELLO HUSBAND!தைரியம் இருந்தா வாங்க’’மாதம்பட்டி vs ஜாய்
அமைச்சர்கள் திடீர் ஆய்வு பினாயில் ஊற்றி வரவேற்பு மருத்துவமனையில் வேடிக்கை | Madurai Goverment Hospital

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Redfort Blast: டெல்லி சாலை.. கார் வெடித்து சிதறிய தருணம் - முதன்முறையாக வெளியான க்ளோஸ்-அப் சிசிடிவி காட்சி
Redfort Blast: டெல்லி சாலை.. கார் வெடித்து சிதறிய தருணம் - முதன்முறையாக வெளியான க்ளோஸ்-அப் சிசிடிவி காட்சி
சென்னைவாசிகளே! 1 ரூபாயில் மெட்ரோ, பேருந்து, ரயிலில் இன்று முதல் போகலாம் - எப்படி?
சென்னைவாசிகளே! 1 ரூபாயில் மெட்ரோ, பேருந்து, ரயிலில் இன்று முதல் போகலாம் - எப்படி?
Bihar Exit Poll: தேர்தல் கருத்து கணிப்பு பலிக்குமா.?  2015, 2020, 2024ஆம் ஆண்டில் சொன்னது என்ன.? நடந்தது என்ன.?
மீண்டும் ஆட்சியில் பாஜக.? கருத்து கணிப்பு பலிக்குமா.? சொன்னதும் இதுவரை நடந்ததும் என்ன.?
Asim Munir: வேடிக்கை பார்த்த பாக்., பிரதமர்.. அதிகாரங்களை வாரிக்கொண்ட அசிம் முனிர் - நீதிபதிகளுக்கு ஷாக்
Asim Munir: வேடிக்கை பார்த்த பாக்., பிரதமர்.. அதிகாரங்களை வாரிக்கொண்ட அசிம் முனிர் - நீதிபதிகளுக்கு ஷாக்
Tirupati Temple: வைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போறீங்களா? ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை எப்போது?
Tirupati Temple: வைகுண்ட ஏகாதசிக்கு திருப்பதி போறீங்களா? ஆன்லைன் டிக்கெட்டுகள் விற்பனை எப்போது?
Nainar Nagendran : ”ஒரு கவுன்சிலர் கூட இல்லை... ஆதவ் பணத்தை வைத்து ஆட்சியை பிடிச்சிடுவீங்களா..” விஜய்க்கு நயினார் சுறுக் கேள்வி
Nainar Nagendran : ”ஒரு கவுன்சிலர் கூட இல்லை... ஆதவ் பணத்தை வைத்து ஆட்சியை பிடிச்சிடுவீங்களா..” விஜய்க்கு நயினார் சுறுக் கேள்வி
’10 தொகுதிகளையும் ஜெயிப்பேன்’ அமைச்சர் மூர்த்தி சூளுரை..!
’10 தொகுதிகளையும் ஜெயிப்பேன்’ அமைச்சர் மூர்த்தி சூளுரை..!
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட  ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
என் கூட இருந்தவரு முதல்வர் ஆகிட்டாரு.. என்னால் ஒரு கவுன்சிலர் கூட ஆக முடியவில்லை- கதறும் கே.டி .ராகவன்
Embed widget