மேலும் அறிய

திருச்சி- ஸ்ரீரங்கம் காவிரி இணைப்பு பாலம் அருகே புதிய பாலம்!

திருச்சி- ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவேரி பாலத்திற்கு அருகில் புதிய பாலம் கட்ட திட்டம். அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக நகரப்புற அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சியையும், ஸ்ரீரங்கத்தையும், தரைவழி மார்க்கமாக இணைப்பது காவிரி பாலம் ஆகும். பரந்து விரிந்து கடல்போல் காட்சியளிக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே இந்த பாலம் கடந்த 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது. 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.  காவேரி பாலம் 1971 ஆம் ஆண்டு கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 1976ஆம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 540 மீட்டர், அகலம் 15 மீட்டர் ஆகும் .இந்த காவேரி பாலம்  திருச்சி மாவட்ட மக்களுக்கு ஒரு சுற்றுலா தளமாகவும் திகழ்ந்து வருகிறது. பாலத்தின் மீது காலை , மாலை என இருவேளைகளிலும் மேற்க்கொண்டு வருகிறார். அதுமட்டும் இல்லாமல் திருச்சி  மக்களுக்கு  ஒரு முக்கியமான சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. தினந்தோறும் மாலை நேரத்தில் மக்கள் தங்களது குடும்பத்துடன் பொழுது கழித்து வருகிறார்கள். மெலும் விடுமுறை, பண்டிகை நாட்கள் என அனைத்து விதமான நாட்களிலும்  தன் நண்பர்களுடன் உரையாடுவது, குடும்பத்துடன் சுற்றி பார்ப்பது என ஒரு தவிர்க்கமுடியாத  சுற்றுலாத் தளமாக திருச்சி மாவட்டத்தில் காவிரி பாலம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. மேலும்  இந்த பாலத்தை தாங்கி நிற்கும்  தூண்களில் ஏற்பட்டுள்ள இடைவெளி மற்றும் விரிசல் காரணமாக வாகன போக்குவரத்திற்கு அவ்வப்போது இடையூறு ஏற்படுகிறது. பேருந்து,சரக்கு லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்லும்போது பாலத்தில் ஒருவித அதிர்வு ஏற்படுவதை வாகன ஓட்டிகளால் உணரமுடிகிறது என மக்கள் தொடர்ந்து  தெரிவித்து வருகிறார்கள்.


திருச்சி- ஸ்ரீரங்கம் காவிரி இணைப்பு பாலம் அருகே புதிய பாலம்!

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விரிவாக்க தூண்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அவை முழுமையான பலனை தரவில்லை என்கிறார்கள் வாகன ஓட்டுநர்கள் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி மக்கள். நவீன தொழில்நுட்ப முறையில் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த திருச்சி மாவட்ட மக்களின் கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த பாலத்தை சீரமைக்க அதற்காக கடந்த  2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1.35 கோடியும், மார்ச் மாதம் 2018ஆம் ஆண்டு 35 லட்சமும், செப்டம்பர் மாதம் 2018 ஆம் ஆண்டு 15 லட்சம், நவம்பர் 2018 ஆம் ஆண்டு 80 ஆயிரம் ரூபாயும் சிறு மீட்கும் பணிக்காக செலவிடப்பட்டுள்ளது.


திருச்சி- ஸ்ரீரங்கம் காவிரி இணைப்பு பாலம் அருகே புதிய பாலம்!

மேலும் ஆய்வு செய்தபோது பாலத்தை தாங்கி நிற்கும் ஆறு தூண்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கியது. அந்த பணிகள் தற்போது நிறைவு பெற்று உள்ளன. ஆனாலும் இன்னும் சில தூண்களிலும் விரிசல் ஏற்பட்டு இருப்பதால் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக ஒரு பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைத்து உள்ளனர்.மேலும் காவிரி பாலத்தை தாங்கி நிற்கும் சில தூண்கள் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டு இருப்பது உண்மையே. சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையின் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் முடிந்து விட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.  இதற்காக இந்த பாலத்தை முழு அளவில் புனரமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. காவிரி ஆற்றுக்குள் பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களில் அடிப்பகுதியிலிருந்து ஆய்வு செய்து புதிதாக புனரமைக்க ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தவிர புதிதாக ஒரு பாலம் கட்டவும் திட்டமிட்டு உள்ளோம்.



திருச்சி- ஸ்ரீரங்கம் காவிரி இணைப்பு பாலம் அருகே புதிய பாலம்!

இந்த பாலத்தின் வடிவமைப்பு தொடர்பான பணிகள் தற்போது நடந்து வருகிறது. அந்த பணிகள் நிறைவடைந்ததும் அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும். அதன் பின்னர் கட்டுமான பணிகள் தொடங்கும் என தமிழக நகர்புற அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். மேலும்  திருச்சி-ஸ்ரீரங்கம் இடையே புதிய பாலம் கட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதனை உணர்ந்து தான் புதிய பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. புதிய பாலம் கட்டுவது நீண்ட காலத்திட்டம் ஆகும். எப்போது பணிகள் தொடங்கும் என்பது பற்றி இப்போது கூற முடியாது. அதே நேரத்தில் தற்போது உள்ள பழைய பாலத்தையும் முழு அளவில் புனரமைப்பு செய்வதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fair Delimitation : ”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
CUET UG 2025: மாணவர்களே.. இன்றே கடைசி- க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? வழிகாட்டல் இதோ!
CUET UG 2025: மாணவர்களே.. இன்றே கடைசி- க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? வழிகாட்டல் இதோ!
KKR vs RCB: 17 ஆண்டுகள் தீராத வலி... மீண்டும் மோதும் RCB-KKR! 2008-ல் நடந்தது என்ன?
KKR vs RCB: 17 ஆண்டுகள் தீராத வலி... மீண்டும் மோதும் RCB-KKR! 2008-ல் நடந்தது என்ன?
Coimbatore Airport: பிரமாண்டமாகும் கோவை விமான நிலையம், சர்வதேச பயணங்களுக்கான வசதிகள் - ஓட்டல் டூ சாலை
Coimbatore Airport: பிரமாண்டமாகும் கோவை விமான நிலையம், சர்வதேச பயணங்களுக்கான வசதிகள் - ஓட்டல் டூ சாலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivaangi Krishnakumar | சன் டிவியில் இணைந்த சிவாங்கிவிஜய் டிவி உடன் சண்டையா?அடுத்தடுத்து வெளியேறும் பிரபலங்கள்Ambur Accident News | ஒரே SPOT... 3 விபத்துகள் சுக்கு நூறாய் போன Tourist Van திகில் CCTV காட்சிகள்Velmurugan | திமுக கூட்டணிக்கு Bye! அன்புமணி ராமதாசுக்கு தூது! வேல்முருகன் ப்ளான் என்ன?Ilayaraja : இளையராஜாவிற்கு பாரத ரத்னா? சிம்பொனி-யால் உயரிய இடம்! ரசிகர்கள் உற்சாகம்! | Bharat Ratna

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fair Delimitation : ”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
”அழைத்த மு.க.ஸ்டாலின் – தமிழ்நாட்டில் குவிந்த தலைவர்கள்” யார், யார் தெரியுமா..?
CUET UG 2025: மாணவர்களே.. இன்றே கடைசி- க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? வழிகாட்டல் இதோ!
CUET UG 2025: மாணவர்களே.. இன்றே கடைசி- க்யூட் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? வழிகாட்டல் இதோ!
KKR vs RCB: 17 ஆண்டுகள் தீராத வலி... மீண்டும் மோதும் RCB-KKR! 2008-ல் நடந்தது என்ன?
KKR vs RCB: 17 ஆண்டுகள் தீராத வலி... மீண்டும் மோதும் RCB-KKR! 2008-ல் நடந்தது என்ன?
Coimbatore Airport: பிரமாண்டமாகும் கோவை விமான நிலையம், சர்வதேச பயணங்களுக்கான வசதிகள் - ஓட்டல் டூ சாலை
Coimbatore Airport: பிரமாண்டமாகும் கோவை விமான நிலையம், சர்வதேச பயணங்களுக்கான வசதிகள் - ஓட்டல் டூ சாலை
KKR vs RCB: வருண் Vs கோலி - பெங்களூருவை பந்தாடும் கொல்கத்தா..! நேருக்கு நேர், படிதார் சாதிப்பாரா?
KKR vs RCB: வருண் Vs கோலி - பெங்களூருவை பந்தாடும் கொல்கத்தா..! நேருக்கு நேர், படிதார் சாதிப்பாரா?
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
Amit shah: ”தமிழ் மொழியின் பெயரால் விஷம், உங்கள் குட்டு உடையும்” திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய அமித் ஷா
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
CM Stalin Delimitation: தொகுதி மறுவரையறை - இன்று கூட்டுக்குழு கூட்டம், சென்னையில் எதிர்க்கட்சி சி.எம்.,கள் - ஸ்டாலின் மூவ்
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்
Embed widget