மேலும் அறிய

திருச்சி- ஸ்ரீரங்கம் காவிரி இணைப்பு பாலம் அருகே புதிய பாலம்!

திருச்சி- ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவேரி பாலத்திற்கு அருகில் புதிய பாலம் கட்ட திட்டம். அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக நகரப்புற அமைச்சர் கே.என்.நேரு தகவல்

திருச்சியையும், ஸ்ரீரங்கத்தையும், தரைவழி மார்க்கமாக இணைப்பது காவிரி பாலம் ஆகும். பரந்து விரிந்து கடல்போல் காட்சியளிக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே இந்த பாலம் கடந்த 1976-ம் ஆண்டு கட்டப்பட்டது. 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.  காவேரி பாலம் 1971 ஆம் ஆண்டு கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு 1976ஆம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டது. இந்த பாலத்தின் நீளம் 540 மீட்டர், அகலம் 15 மீட்டர் ஆகும் .இந்த காவேரி பாலம்  திருச்சி மாவட்ட மக்களுக்கு ஒரு சுற்றுலா தளமாகவும் திகழ்ந்து வருகிறது. பாலத்தின் மீது காலை , மாலை என இருவேளைகளிலும் மேற்க்கொண்டு வருகிறார். அதுமட்டும் இல்லாமல் திருச்சி  மக்களுக்கு  ஒரு முக்கியமான சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. தினந்தோறும் மாலை நேரத்தில் மக்கள் தங்களது குடும்பத்துடன் பொழுது கழித்து வருகிறார்கள். மெலும் விடுமுறை, பண்டிகை நாட்கள் என அனைத்து விதமான நாட்களிலும்  தன் நண்பர்களுடன் உரையாடுவது, குடும்பத்துடன் சுற்றி பார்ப்பது என ஒரு தவிர்க்கமுடியாத  சுற்றுலாத் தளமாக திருச்சி மாவட்டத்தில் காவிரி பாலம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. மேலும்  இந்த பாலத்தை தாங்கி நிற்கும்  தூண்களில் ஏற்பட்டுள்ள இடைவெளி மற்றும் விரிசல் காரணமாக வாகன போக்குவரத்திற்கு அவ்வப்போது இடையூறு ஏற்படுகிறது. பேருந்து,சரக்கு லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்லும்போது பாலத்தில் ஒருவித அதிர்வு ஏற்படுவதை வாகன ஓட்டிகளால் உணரமுடிகிறது என மக்கள் தொடர்ந்து  தெரிவித்து வருகிறார்கள்.


திருச்சி- ஸ்ரீரங்கம் காவிரி இணைப்பு பாலம் அருகே புதிய பாலம்!

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விரிவாக்க தூண்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள இடைவெளியை சீரமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அவை முழுமையான பலனை தரவில்லை என்கிறார்கள் வாகன ஓட்டுநர்கள் மற்றும் ஸ்ரீரங்கம் பகுதி மக்கள். நவீன தொழில்நுட்ப முறையில் பாலத்தை சீரமைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த திருச்சி மாவட்ட மக்களின் கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை ஏற்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த பாலத்தை சீரமைக்க அதற்காக கடந்த  2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1.35 கோடியும், மார்ச் மாதம் 2018ஆம் ஆண்டு 35 லட்சமும், செப்டம்பர் மாதம் 2018 ஆம் ஆண்டு 15 லட்சம், நவம்பர் 2018 ஆம் ஆண்டு 80 ஆயிரம் ரூபாயும் சிறு மீட்கும் பணிக்காக செலவிடப்பட்டுள்ளது.


திருச்சி- ஸ்ரீரங்கம் காவிரி இணைப்பு பாலம் அருகே புதிய பாலம்!

மேலும் ஆய்வு செய்தபோது பாலத்தை தாங்கி நிற்கும் ஆறு தூண்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் உடனடியாக தொடங்கியது. அந்த பணிகள் தற்போது நிறைவு பெற்று உள்ளன. ஆனாலும் இன்னும் சில தூண்களிலும் விரிசல் ஏற்பட்டு இருப்பதால் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக ஒரு பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன்வைத்து உள்ளனர்.மேலும் காவிரி பாலத்தை தாங்கி நிற்கும் சில தூண்கள் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டு இருப்பது உண்மையே. சில ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலை துறையின் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தனர். இந்த பாலம் கட்டப்பட்டு 45 ஆண்டுகள் முடிந்து விட்டதாலும், கனரக வாகனங்கள் செல்லும்போது ஏற்படும் அதிர்வுகள் காரணமாகவும் பாலத்தை உடனடியாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.  இதற்காக இந்த பாலத்தை முழு அளவில் புனரமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டுள்ளது. காவிரி ஆற்றுக்குள் பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களில் அடிப்பகுதியிலிருந்து ஆய்வு செய்து புதிதாக புனரமைக்க ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது தவிர புதிதாக ஒரு பாலம் கட்டவும் திட்டமிட்டு உள்ளோம்.



திருச்சி- ஸ்ரீரங்கம் காவிரி இணைப்பு பாலம் அருகே புதிய பாலம்!

இந்த பாலத்தின் வடிவமைப்பு தொடர்பான பணிகள் தற்போது நடந்து வருகிறது. அந்த பணிகள் நிறைவடைந்ததும் அரசுக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்படும். அதன் பின்னர் கட்டுமான பணிகள் தொடங்கும் என தமிழக நகர்புற அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார். மேலும்  திருச்சி-ஸ்ரீரங்கம் இடையே புதிய பாலம் கட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதனை உணர்ந்து தான் புதிய பாலம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. புதிய பாலம் கட்டுவது நீண்ட காலத்திட்டம் ஆகும். எப்போது பணிகள் தொடங்கும் என்பது பற்றி இப்போது கூற முடியாது. அதே நேரத்தில் தற்போது உள்ள பழைய பாலத்தையும் முழு அளவில் புனரமைப்பு செய்வதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: கடலூர்: அகழாய்வில் சோழர்கால செப்பு நாணயம் கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு
Breaking News LIVE: கடலூர்: அகழாய்வில் சோழர்கால செப்பு நாணயம் கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
ராகுல் காந்தியின் கேள்விக்கணைகள்.. மக்களவையில் லைன் கட்டி பதில் அளித்த மத்திய அமைச்சர்கள்!
Breaking News LIVE: கடலூர்: அகழாய்வில் சோழர்கால செப்பு நாணயம் கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு
Breaking News LIVE: கடலூர்: அகழாய்வில் சோழர்கால செப்பு நாணயம் கண்டெடுப்பு - அமைச்சர் தங்கம் தென்னரசு
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
Watch Video: சாலையில் ஹாயாக சுற்றித் திரிந்த 8 அடி நீள முதலை! வீடியோ எடுத்த வாகன ஓட்டிகள்!
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
TN BJP Leader: அரசியலுக்கு டாட்டா? மீண்டும் படிப்பு... படிப்பு! லண்டனுக்கு பறக்க தயாராகும் அண்ணாமலை?
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Suryakumar Yadav: ”உலகக் கோப்பையை நெஞ்சில் பச்சைக்குத்திக் கொள்ள போகிறேன்” - சூர்யாவின் 2 காரணங்கள்!
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Embed widget