மேலும் அறிய

ஜாகீர் உசேன் விவகாரத்தில் நடுநிலையோடு நடவடிக்கை - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

’’தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோவில்களில் இந்துக்கள் மட்டுமே அனுமதி என்கிற நடைமுறையை மாற்ற சட்ட வல்லுநர்கள், கோயில் குருமார்களிடம் கலந்து பேசி பின்னர் முடிவு எடுக்கபடும்’’

திருச்சி வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கோயில் வளாகத்தில் மராமாத்து பணிகளை நடத்துவது தொடர்பாக பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார். மேலும்  கோயிலுக்கு சொந்தமான மண்டபங்கள் மற்றும் திருக்குளத்தை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள  தேவைப்படும் நிதிகளை அந்த கோயிலின் வருமானம் வாயிலாக மேற்கொண்டு, ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். குறிப்பாக பக்தர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஆய்வு மேற்கொண்டு அதனை ஏற்பாடு செய்ய முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.


ஜாகீர் உசேன் விவகாரத்தில் நடுநிலையோடு நடவடிக்கை - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

இதனை தொடர்ந்து வயலூர் முருகன் கோயிலில் பல்வேறு இடங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது. வாரியார் மண்டபம் மற்றும் வள்ளி மண்டபத்தை முறையாக புனரமைப்பு செய்ய வழிவகை செய்ய உள்ளோம் என்றார். பின்பு தமிழகத்தில் முக்கிய கோயில்களில் இந்துக்கள் மட்டுமே அனுமதி என்கிற பலகையை அகற்றப்படுமா என்ற கேள்விக்கு ? பதில் அளித்த அமைச்சர் காலம் காலமாக சில நடைமுறைகள் உள்ளது. மேலும் இது போன்ற அறிவிப்புகளை சட்ட வல்லுனர்களிடம் கலந்து பேசி, கோயிலில் உள்ள தலைமை குருமார்களிடம் கலந்து பேசி இறுதி வடிவம் கிடைத்த பின்னர் முதல்வருடன் கலந்தாய்வு  செய்த பிறகு இதனை சரி செய்ய வழிவகை செய்வோம் என்றார். குறிப்பாக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த நடன கலைஞர் ஜாஹிர் உசேனை தடுத்த ரங்கராஜன் நரசிம்மன் விவகாரம் தொடர்பாக காவல் துறையினரிடம் கோயில் இனை ஆனையர் புகார் வழங்கி உள்ளார். அதேபோல் ஜாஹிர் உசேனும் புகார் அளித்துளார் என்றார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை ஒருபுறம் விசாரணை நடத்தி வரும் அதே நேரத்தில் இணை ஆணையர் தலைமையில் திருக்கோயிலின் சார்பில் விசாரணை நடத்தி அறிக்கை கேட்டுள்ளோம். ஓரிரு நாளில் அறிக்கை பெற்று அரசிடம் கலந்து பேசிய பிறகு நடுநிலையோடு அதில் நடவடிக்கை எடுக்கப்படும்.


ஜாகீர் உசேன் விவகாரத்தில் நடுநிலையோடு நடவடிக்கை - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

மேலும் கோயில்களில் அறங்காவலர்கள் குழு நியமனம் குறித்த கேள்விக்கு ?  10 ஆண்டுகளாக இது கிடப்பில் போடப்பட்ட விஷயம் எனவே இதனை உடனடியாக சரி செய்ய முறைப்படி நீதிமன்ற வழிகாட்டல்களோடு அரங்காவலர் குழு தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஒரு சில கோயில்களில் பரம்பரை பரம்பரையாக அறங்காவலர் குழுவை சேர்ந்தவர்களாக உள்ளார்கள். சில இடங்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக அந்த பணிகள் இருந்துள்ளார்கள். எனவே இதனை அனைத்தையும் ஆய்வு செய்து தற்போது 300 கோயில்களில் மட்டும் முதற்கட்டமாக அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். அதேபோல் இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை கமிட்டி ஒன்றை அமைத்துள்ளோம், அந்த கமிட்டி முறைப்படி விசாரணை செய்து இந்தக் நியமனம் குறித்த தகவல்களை அளிப்பார்கள், எனவே அறங்காவலர் குழு நியமனம் என்பது முறைப்படி நேர்த்தியாக நடைபெறும். மேலும் பி.ஆர்.ஓக்கள் மாவட்ட ஆட்சியர் வாயிலாக தான் நியமிக்கப்படுகிறார்கள். திருக்கோயிலில் நடைபெறும் நிகழ்வுகளை முறைப்படி பத்திரிக்கையாளர்களுக்கு தகவல்களை அளிக்க வழிவகை செய்யப்படும். இதில் உள்ள குறைகள் இனி வரும் நாட்களில் சரி செய்யப்படும் என்றார். தொடர்ந்து ஸ்ரீரங்கத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை ரங்கராஜன் நரசிம்மன் ஆதாரத்தோடு எடுத்துக் கூறி வருகிறார் என்ற கேள்விக்கு ? முறையான புகார்களை நாங்கள் கண்டிப்பாக ஏற்று நடவடிக்கை எடுப்போம். ஆனால் அதே நேரம் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு கருத்தையும் இந்து சமய அறநிலைய துறை ஏற்றுகொள்ளாது. இந்த ஆட்சி பொறுப்பேற்று தமிழகம் முழுவதும் 541 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கி பணிகளை துவங்கி உள்ளோம். அதே போல் விரைவாக பணிகளை முடித்து கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடுகளைச் செய்வோம் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
Rajinikanth: கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
India UK FTA: இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vaniyambadi CCTV : ’’ஏய் பிச்சை போடுறியா நீ’’டீக்கடையை நொறுக்கிய கும்பல்வாணியம்பாடியில் பரபரப்பு
உடைந்து புலம்பிய அன்புமணி! சமாதானப்படுத்திய அம்மா!தைலாபுரத்தில் நடந்தது என்ன?
கொளுத்திப் போட்ட டிரம்ப்
”சென்னைக்கு வாங்க வருண்”ஸ்டாலின் போடும் MASTERPLAN! டார்கெட் தவெக விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
அன்புமணி நடைபயணத்திற்கு ராமதாஸ் மிரட்டல்? பாமக-வில் வெடிக்கும் உட்கட்சி மோதல்! தொண்டர்கள் கொந்தளிப்பு!
Rajinikanth: கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
கூலி பட செட்டில் ரஜினிகாந்த் செய்தது என்ன.? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடுத்த முக்கிய தகவல்
India UK FTA: இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இதனால இந்தியாவுக்கு இவ்ளோ பயன்களா.?
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
MK Stalin Health: முதல்வருக்கு சீரற்ற இதயத்துடிப்பு; ஆஞ்சியோ சிகிச்சை- அப்பல்லோ பரபரப்பு அறிக்கை!
யப்பா, ஒரே ஜம்ப் தான்; 2-ல் இருந்து நேராக 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டுக்கு தாவிய கார் எது தெரியுமா.?
யப்பா, ஒரே ஜம்ப் தான்; 2-ல் இருந்து நேராக 5 ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டுக்கு தாவிய கார் எது தெரியுமா.?
காய்கறி மட்டுமே சாப்பிட்டால் உயிருக்கே கேடு: மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை
காய்கறி மட்டுமே சாப்பிட்டால் உயிருக்கே கேடு: மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை
தவெகவில் விஜயதரணி? கடுப்பாக்கிய பாஜக- விஜய் பக்கா ஸ்கெட்ச்!
தவெகவில் விஜயதரணி? கடுப்பாக்கிய பாஜக- விஜய் பக்கா ஸ்கெட்ச்!
Thailand Cambodia Dispute: மோதிக்கொண்ட தாய்லாந்து - கம்போடியா ராணுவ வீரர்கள்; 9 பேர் பலி - பிரச்னையின் பின்னணி என்ன.?
மோதிக்கொண்ட தாய்லாந்து - கம்போடியா ராணுவ வீரர்கள்; 9 பேர் பலி - பிரச்னையின் பின்னணி என்ன.?
Embed widget