மேலும் அறிய

ஜாகீர் உசேன் விவகாரத்தில் நடுநிலையோடு நடவடிக்கை - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

’’தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோவில்களில் இந்துக்கள் மட்டுமே அனுமதி என்கிற நடைமுறையை மாற்ற சட்ட வல்லுநர்கள், கோயில் குருமார்களிடம் கலந்து பேசி பின்னர் முடிவு எடுக்கபடும்’’

திருச்சி வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கோயில் வளாகத்தில் மராமாத்து பணிகளை நடத்துவது தொடர்பாக பல்வேறு விவரங்களை கேட்டறிந்தார். மேலும்  கோயிலுக்கு சொந்தமான மண்டபங்கள் மற்றும் திருக்குளத்தை ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர் பாபு, தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள  தேவைப்படும் நிதிகளை அந்த கோயிலின் வருமானம் வாயிலாக மேற்கொண்டு, ஆன்மீகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். குறிப்பாக பக்தர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஆய்வு மேற்கொண்டு அதனை ஏற்பாடு செய்ய முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.


ஜாகீர் உசேன் விவகாரத்தில் நடுநிலையோடு நடவடிக்கை - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

இதனை தொடர்ந்து வயலூர் முருகன் கோயிலில் பல்வேறு இடங்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள இருக்கிறது. வாரியார் மண்டபம் மற்றும் வள்ளி மண்டபத்தை முறையாக புனரமைப்பு செய்ய வழிவகை செய்ய உள்ளோம் என்றார். பின்பு தமிழகத்தில் முக்கிய கோயில்களில் இந்துக்கள் மட்டுமே அனுமதி என்கிற பலகையை அகற்றப்படுமா என்ற கேள்விக்கு ? பதில் அளித்த அமைச்சர் காலம் காலமாக சில நடைமுறைகள் உள்ளது. மேலும் இது போன்ற அறிவிப்புகளை சட்ட வல்லுனர்களிடம் கலந்து பேசி, கோயிலில் உள்ள தலைமை குருமார்களிடம் கலந்து பேசி இறுதி வடிவம் கிடைத்த பின்னர் முதல்வருடன் கலந்தாய்வு  செய்த பிறகு இதனை சரி செய்ய வழிவகை செய்வோம் என்றார். குறிப்பாக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த நடன கலைஞர் ஜாஹிர் உசேனை தடுத்த ரங்கராஜன் நரசிம்மன் விவகாரம் தொடர்பாக காவல் துறையினரிடம் கோயில் இனை ஆனையர் புகார் வழங்கி உள்ளார். அதேபோல் ஜாஹிர் உசேனும் புகார் அளித்துளார் என்றார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை ஒருபுறம் விசாரணை நடத்தி வரும் அதே நேரத்தில் இணை ஆணையர் தலைமையில் திருக்கோயிலின் சார்பில் விசாரணை நடத்தி அறிக்கை கேட்டுள்ளோம். ஓரிரு நாளில் அறிக்கை பெற்று அரசிடம் கலந்து பேசிய பிறகு நடுநிலையோடு அதில் நடவடிக்கை எடுக்கப்படும்.


ஜாகீர் உசேன் விவகாரத்தில் நடுநிலையோடு நடவடிக்கை - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

மேலும் கோயில்களில் அறங்காவலர்கள் குழு நியமனம் குறித்த கேள்விக்கு ?  10 ஆண்டுகளாக இது கிடப்பில் போடப்பட்ட விஷயம் எனவே இதனை உடனடியாக சரி செய்ய முறைப்படி நீதிமன்ற வழிகாட்டல்களோடு அரங்காவலர் குழு தலைவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஒரு சில கோயில்களில் பரம்பரை பரம்பரையாக அறங்காவலர் குழுவை சேர்ந்தவர்களாக உள்ளார்கள். சில இடங்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக அந்த பணிகள் இருந்துள்ளார்கள். எனவே இதனை அனைத்தையும் ஆய்வு செய்து தற்போது 300 கோயில்களில் மட்டும் முதற்கட்டமாக அறங்காவலர்கள் நியமிப்பது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். அதேபோல் இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை கமிட்டி ஒன்றை அமைத்துள்ளோம், அந்த கமிட்டி முறைப்படி விசாரணை செய்து இந்தக் நியமனம் குறித்த தகவல்களை அளிப்பார்கள், எனவே அறங்காவலர் குழு நியமனம் என்பது முறைப்படி நேர்த்தியாக நடைபெறும். மேலும் பி.ஆர்.ஓக்கள் மாவட்ட ஆட்சியர் வாயிலாக தான் நியமிக்கப்படுகிறார்கள். திருக்கோயிலில் நடைபெறும் நிகழ்வுகளை முறைப்படி பத்திரிக்கையாளர்களுக்கு தகவல்களை அளிக்க வழிவகை செய்யப்படும். இதில் உள்ள குறைகள் இனி வரும் நாட்களில் சரி செய்யப்படும் என்றார். தொடர்ந்து ஸ்ரீரங்கத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை ரங்கராஜன் நரசிம்மன் ஆதாரத்தோடு எடுத்துக் கூறி வருகிறார் என்ற கேள்விக்கு ? முறையான புகார்களை நாங்கள் கண்டிப்பாக ஏற்று நடவடிக்கை எடுப்போம். ஆனால் அதே நேரம் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் எந்த ஒரு கருத்தையும் இந்து சமய அறநிலைய துறை ஏற்றுகொள்ளாது. இந்த ஆட்சி பொறுப்பேற்று தமிழகம் முழுவதும் 541 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கி பணிகளை துவங்கி உள்ளோம். அதே போல் விரைவாக பணிகளை முடித்து கும்பாபிஷேகம் செய்ய ஏற்பாடுகளைச் செய்வோம் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget