மேலும் அறிய

24 மணிநேரத்தில், என் கேள்விக்கு தங்கம் தென்னரசு பதிலளிக்க வேண்டும் - எச்.ராஜா ஆவேசம்

திமுகவின் மூத்த தலைவர்கள், ஆட்சியில் இருக்கும் போது ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்தாலே தமிழ்நாட்டின் கடனை முழுமையாக அடக்க முடியும் - எச்.ராஜா பேட்டி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் திருச்சி பாஜக விவசாய அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா பேசியது.. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பாஜக சார்பாக தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறை, குறைகளை குறித்து கருத்து கேட்பு நடத்தி கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்று திருச்சியில் விவசாயிகளை சந்தித்து கருத்து கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகளின் சில முக்கிய கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். 

மத்திய அரசு  விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டை பெருமைப்படுத்தும் அளவிற்கு வேளாண்மையில் புரட்சி செய்த விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது, என்பது நாம் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை தொடர்ந்து இந்திய நாட்டில் விவசாயிகளுக்கும் மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் சிறப்பாக மக்களுக்காக பணியாற்றிய தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்தே நாம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம் பாஜக, மக்களுக்காக செயல்படக்கூடிய அரசாகும். வேறுபாடு, பிரிவினை இல்லாமல் திறமையானவளுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.


24 மணிநேரத்தில், என் கேள்விக்கு தங்கம் தென்னரசு பதிலளிக்க வேண்டும் - எச்.ராஜா ஆவேசம்

மேலும், சிறு,குறு விவசாயிகளுக்கு உதவிட மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனால் பல ஆயிரம் கோடி விவசாயிகள் பயனடைந்து வருகிறார்கள். ஆனால் மாநில அரசு விவசாயிகளுக்கு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தேர்தல் நெருங்குவதால் மக்களிடையே பொய்யான பிரச்சாரத்தை காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடங்கியுள்ளனர். மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தேவையான அனைத்து நிதிகளையும், முழுமையாக வழங்கி உள்ளது. ஆனால் பொய்யான தகவல்களை மக்கள் மத்தியில் திமுக ,காங்கிரஸ் ,பரப்பி வருகிறது. கடந்த முறை 32 சதவீதமாக இருந்த நிதியை, 2014 ஆண்டு மோடி பிரதமர் பதவி ஏற்ற உடன் 42 சதவீதமாக நிதிய உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்கி வருவதால் பொய்யான தேர்தல் பிரச்சாரத்தை இவர்கள் இப்போது இருந்தே தொடங்கியுள்ளனர். 

தமிழ்நாட்டில் 4,000 கோடி ரூபாய் நிதி சாலைகள் கால்வாய்கள் அமைக்கப்பட்டதாக திருச்சி அமைச்சர் கே. என்.நேரு தெரிவித்தார். ஆனால் பாதிப்பு அதிகமானதால் 42% நிதி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் நேரு கூறியுள்ளார். அப்போது மீதம் உள்ள 58 % பணம் என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பினார். 


24 மணிநேரத்தில், என் கேள்விக்கு தங்கம் தென்னரசு பதிலளிக்க வேண்டும் - எச்.ராஜா ஆவேசம்

திமுகவின் மூத்த தலைவர்கள், ஆட்சியில் இருக்கும் போது ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்தாலே தமிழ்நாட்டின் கடனை முழுமையாக அடக்க முடியும் என்றார்.

GST என்பது மத்திய,  மாநில ஆகிய 2 வகைபடும். அதில் மாநில நிதியை மத்திய அரசுக்கு கொடுக்கவில்லை. ஆனால் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அதை முழுமையாக கொடுத்துள்ளனர். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டிற்கு குறைவாக தான் கொடுத்துள்ளனர் என்று கூறுகிறார்கள். நான் கேட்கும் கேள்விக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 24 மணி நேரத்தில் பதில் அளிக்க வேண்டும். தமிழ்நாட்டில் அதிக வருவாய் ஈட்டக்கூடிய மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர், சென்னை ஆகிய 3 மாவட்டங்களில் பெறப்படும் வருவாயை மற்ற எந்த மாவட்டத்திற்கும் செலவு செய்யக்கூடாது என அப்பகுதி மக்கள் கூறினால் அதை அமைச்சர் தங்கம் தென்னரசு அல்லது திமுக அரசு ஏற்றுக்கொள்ளுமா?

இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (இன்று) காலைக்குள் பதில் அளிக்க வேண்டும் என எச்.ராஜா தெரிவித்தார்.


24 மணிநேரத்தில், என் கேள்விக்கு தங்கம் தென்னரசு பதிலளிக்க வேண்டும் - எச்.ராஜா ஆவேசம்

மேலும், இவர்கள் டெல்லி சென்று கூட்டம் கூடி அராஜக தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தலில் மக்களை ஏமாற்றுவதற்காகவும், பிரிவினை செய்வதற்காகவும் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஓட்டு வாங்குவதற்காக பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். பொதுசிவில் சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் போது விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் அதை எதிர்த்து பேசுகிறார். ஆனால் திமுகவுடன் இலவச இணைப்பு விடுதலை சிறுத்தை கட்சி ஆகும். தொல்.திருமாவளவன் பட்டியலின சமுதாயத்தினருக்கு துரோகி ஆவார். தமிழ்நாட்டில் வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கழித்த விவகாரத்தை குறித்து இதுவரை வாய் திறக்காத திருமாவளவன், இரண்டு சீட்டுக்காக திமுகவிடம் அடிமையாக உள்ளார்.

NIA அதிகாரிகள் சோதனை என்பது மிகத் துல்லியமான, சரியான தகவல்களை கொண்டு தான் நடைபெறும். அவர்கள் மற்றவர்களை போல சரியான தகவல் இல்லாமல் சோதனை செய்ய மாட்டார்கள். NIA அதிகாரிகளுக்கு சரியான தகவல்கள் வந்ததன் அடிப்படையிலேயே இது போன்ற சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சியில் இருப்பவர்கள் வீட்டில் NIA சோதனை நடத்தியதற்கும் அதிகாரிகளிடம் சரியான ஆதாரம் இருக்கும். இந்த ஆவணங்களை வைத்து தான் சோதனையை நடத்தி இருப்பார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Election Manifesto: திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு அளித்த திருச்சி கோர்ட்: கொத்தனாருக்கு ஆயுள் கால சிறை
போக்சோ வழக்கில் அதிரடி தீர்ப்பு அளித்த திருச்சி கோர்ட்: கொத்தனாருக்கு ஆயுள் கால சிறை
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
அக்னிபாத் திட்டத்தின் கீழ் இராணுவத்தில் சேர ஒரு சூப்பர் வாய்ப்பு.. ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியீடு- உடனே விண்ணப்பியுங்கள்!
மழைநீர் சேமிப்பு: தண்ணீர் பஞ்சத்தை விரட்டும் தீர்வு! காவேரி கூக்குரல் கருத்தரங்கில் விஞ்ஞானிகள் தகவல் | விவசாயிகள் கவனத்திற்கு
மழைநீர் சேமிப்பு: தண்ணீர் பஞ்சத்தை விரட்டும் தீர்வு! காவேரி கூக்குரல் கருத்தரங்கில் விஞ்ஞானிகள் தகவல் | விவசாயிகள் கவனத்திற்கு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்
Election commission | 3 நாளில் ரூ.42 கோடி பறிமுதல் வேட்டையில் பறக்கும் படை தேர்தல் ஆணையம் அதிரடி
MK Stalin on CV Shanmugam |
Annamalai on Vilathikulam Arrest |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Election Manifesto: திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பிடிக்கும் பிரமாண்ட அறிவிப்பு!!! எகிறும் எதிர்பார்ப்பு
Trump Warns Iran: போரை முடிச்சிக்கலாம்.. ஈரானுக்கு கடைசி சான்ஸ்.. ட்ரம்ப் வழங்கிய ஆஃபர்!
Trump Warns Iran: போரை முடிச்சிக்கலாம்.. ஈரானுக்கு கடைசி சான்ஸ்.. ட்ரம்ப் வழங்கிய ஆஃபர்!
PM Modi Meeting: மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு? - பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
PM Modi Meeting: மீண்டும் அமலுக்கு வரும் ஊரடங்கு? - பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
Fuel Shortage: இத்தனை நாளுக்கு எரிபொருள் இருக்கு.. மத்திய அரசு கொடுத்த அப்டேட்!
Fuel Shortage: இத்தனை நாளுக்கு எரிபொருள் இருக்கு.. மத்திய அரசு கொடுத்த அப்டேட்!
TVK Vijay: ’’தவெகவை சீண்டுவதாக நினைத்து பெண் குலத்தையே அவமதிப்பதா? திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!
TVK Vijay: ’’தவெகவை சீண்டுவதாக நினைத்து பெண் குலத்தையே அவமதிப்பதா? திமுக கைக்கூலி’’ கொதித்தெழுந்த விஜய்!
IPL 2026 Schedule: வெளியானது ஐபிஎல் அட்டவணை.. யாருடன் யாருக்கு மேட்ச்? - முழு விபரம் இதோ!
IPL 2026 Schedule: வெளியானது ஐபிஎல் அட்டவணை.. யாருடன் யாருக்கு மேட்ச்? - முழு விபரம் இதோ!
அதிமுகவின் முக்கிய புள்ளி தவெகவில்? பரபரப்பில் தொண்டர்கள் - பின்னணி என்ன?
அதிமுகவின் முக்கிய புள்ளி தவெகவில்? பரபரப்பில் தொண்டர்கள் - பின்னணி என்ன?
ABP EXCLUSIVE:
ABP EXCLUSIVE: "விபச்சாரிதான்.. மன்னிப்பு கேட்க முடியாது" தவெக ஆதரவு பெண்களை விமர்சித்த பொன்ராஜ் திமிர் பேச்சு!
Embed widget