மேலும் அறிய

திருச்சி அருகே கறவை மாடுகளுடன் பால் உற்பத்தியாளர்கள் மறியல் போராட்டம்

திருச்சி அருகே கறவை மாடுகளுடன் சாலை மறியல் செய்த பால் உற்பத்தியாளர்கள், பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி ஆவின் ஒன்றியம் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கொட்டப்பட்டு பகுதியில் செயல்படுகிறது. இதில் 634 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 லட்சத்து 49 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 45 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. சுமார் 26 ஆயிரம் பேர் மாதாந்திர அட்டைகள் மூலம் பால் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். மீதமிருக்கும் பால், கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு லிட்டருக்கு ரூ.7 முதல் ரூ.10 வரை கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், இல்லை என்றால் ஆவினுக்கு பால் வழங்காமல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் கடந்த 2 நாட்களாக திருச்சி மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஆவினுக்கு பால் வழங்காமல் சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே கோடை காலம் தொடங்கிவிட்டதால் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், உற்பத்தியாளர்களின் போராட்டம் காரணமாக மேலும் கொள்முதல் குறைந்து ஆவின் பாலுக்கு கூடுதல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் பால் வினியோகம் செய்வதில் கடந்த சில வாரங்களாக தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் தனியார் பால் பாக்கெட்டுகளை வாங்கிச்செல்ல தொடங்கினர். இதன்காரணமாக ஆவின் பால் விற்பனை ஆகாமல் தேங்க தொடங்கியது.



திருச்சி அருகே கறவை மாடுகளுடன்  பால் உற்பத்தியாளர்கள் மறியல் போராட்டம்

இதனை தொடர்ந்து  நேற்று அதிகாலையிலேயே முகவர்களுக்கு வரவேண்டிய பால் பாக்கெட்டுகள், குறித்த நேரத்துக்கு வரவில்லை. இதனால் கடைகள் மற்றும் வீடுகளுக்கு குறித்த நேரத்தில் வினியோகம் செய்ய முடியவில்லை. இதன் காரணமாக நேற்று அதிகாலை 4½ மணி அளவில் பால் முகவர்கள் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் பால் பண்ணையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ேமலும் 4 மணிக்கு புறப்பட வேண்டிய பால்வேன்கள் நேற்று காலை 7 மணிக்கு பிறகே பண்ணையில் இருந்து புறப்பட்டன. இதனால் முகவர்கள், பால் வேனை மறித்து பால் அனுப்ப வேண்டாம் என்று வாக்குவாதம் செய்தனர். அப்போது, ஒரு வேனை தடுத்தபோது, முகவருக்கும் வேன் டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர், போலீசாரும் அதிகாரிகளும் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


திருச்சி அருகே கறவை மாடுகளுடன்  பால் உற்பத்தியாளர்கள் மறியல் போராட்டம்

இதற்கிடையே திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நொச்சிமேடு என்ற இடத்தில் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கறவை மாடுகளுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் கந்தசாமி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தின்போது பாலை சாலையில் கொட்டி கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள். அப்போது, ஒரு லிட்டர் பாலுக்கு உற்பத்தியாளர்கள் சுமார் ரூ.25 வரை செலவு செய்யும் நிலையில், விவசாயிகளுக்கு ஒரு நாளைக்கு ரூ.60 மீதம் கிடைப்பதே அரிது என்ற நிலை உள்ளது. தீவனங்களின் விலை உயர்வு, மாடுகள் பராமரிப்பு என அதிக செலவுகள் உள்ள நிலையில், பால் கொள்முதலுக்கு லிட்டருக்கு ரூ.33.50-ஐ அரசு கொடுப்பது போதாது. எனவே கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி தர வேண்டும். இதற்கு முதலமைச்சர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் கந்தசாமி, பழனிசாமி, சேசுரெத்தினம் உள்பட 30 ஆண்கள் மற்றும் 30 பெண்கள் என 60 பேர் மீது மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய  மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aniket Verma | ”தடைகள் எதையும் மகனே வென்று வா” தாய்க்கு செய்த சத்தியம்! யார் இந்த அனிகேத் வர்மா?ADMK BJP Alliance | ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?செங்கோட்டையனை வைத்து செக்! BACK அடிக்கும் எடப்பாடி | Sengottaiyan | Edappadi Palanisamy | Amishah | Rajiya Sabha SeatSengottaiyan | செங்கோட்டையனுக்கு V. K. Pandian:

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய  மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
IPL 2025 MI vs KKR: கொல்கத்தாவிற்கு குழி தோண்டிய மும்பை! அசால்டா அடிச்சு ஜெயிச்ச பல்தான்ஸ்
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
Pakistan Earthquake: பாகிஸ்தானில்  திடீர் நிலநடுக்கம்!
Pakistan Earthquake: பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்!
சென்னையில் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வெயில் காலத்தில் ஜில் அப்டேட்! சென்னை மாநகராட்சியின் அசத்தல் ப்ளான்!
சென்னையில் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வெயில் காலத்தில் ஜில் அப்டேட்! சென்னை மாநகராட்சியின் அசத்தல் ப்ளான்!
Nidhi Tewari IFS: பிரதமர் மோடியின் புதிய தனிச்செயலாளர் நிதி திவேரி! யார் இந்த இளம் IFS அதிகாரி?
Nidhi Tewari IFS: பிரதமர் மோடியின் புதிய தனிச்செயலாளர் நிதி திவேரி! யார் இந்த இளம் IFS அதிகாரி?
சினிமா ஆசைகாட்டி வன்கொடுமை...கும்பமேளா வைரல் பெண்ணை வைத்து படம் இயக்கிவந்த இயக்குநர் கைது
சினிமா ஆசைகாட்டி வன்கொடுமை...கும்பமேளா வைரல் பெண்ணை வைத்து படம் இயக்கிவந்த இயக்குநர் கைது
Embed widget