மேலும் அறிய

மணிஸ் கபே..70 ஆண்டுகள்.. மல்லிப்பூ இட்லி, மணக்கும் சட்னி : Food Corner கதை இதோ..

இட்லி, கெட்டி சட்னி, பில்டர் காபி.. 5 ஆண்டு 10 ஆண்டு அல்ல 70 ஆண்டுகளாக கலக்கிக் கொண்டிருக்கும் மணிஸ் கஃபே.. இதை பற்றி பார்க்கலாம்.

ஸ்ரீரங்கம் ரயில்வே நிலையத்திற்கு எதிரில் இருக்கும் இந்த மணிஸ் கஃபே ஒரு வீடு போன்ற தோற்றத்தில் காட்சி அளிக்கின்றது. அதுவும் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வீடுகள் எப்படி இருக்குமோ அதே போன்ற ஓடு வேயப்பட்ட முற்றத்துடன் கூடிய வீட்டை உணவகமாக மாற்றி, அங்கே சுவையான உணவுகளை வழங்கி வருகின்றனர். குறிப்பாக டிபன் வகைகளான இட்லி, கெட்டிச் சட்னி, தோசை, பில்டர் காபி போன்ற உணவு வகைகள் சூடாகவும் சுவையாகவும் கிடைக்கும்போது ரயில்வே ஸ்டேஷன் செல்பவர்கள் அதை சாப்பிடாமல் செல்லவே மாட்டார்கள்.

சாதாரண இட்லி, தோசையில் அப்படி என்ன ஸ்பெஷல்? என்று யோசிக்கும்போது, நினைவுக்கு வரும் விஷயம் என்னவென்றால் 70 ஆண்டு காலமாக சுவை மாறாமல் அதுவும் விறகு அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் தோசை வார்ப்பது, மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்களும் ஆரோக்கியமாக இருப்பது போன்ற ஏராளமான சிறப்புகள் சொல்லிக்கொண்டே போகலாம். இங்கு சென்று நாம் டிபன் வகைகளை சாப்பிட்டால் அந்த சுவை மாறாமல் நாவிலேயே இருக்கும் என்று கூறுகின்றனர் இங்கு வரும் வாடிக்கையாளர்கள் அதுமட்டுமின்றி, அவற்றை சாப்பிட்டுவிட்டு இங்கு கிடைக்கும் பில்டர் காபியையும் குடித்து விட்டு சென்றால் அந்த நாளே அமோகமாக இருக்கும் என்றும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


மணிஸ் கபே..70 ஆண்டுகள்.. மல்லிப்பூ இட்லி, மணக்கும் சட்னி : Food Corner கதை இதோ..

மேலும் இங்கு தயாராகும் உணவுகள் பெரும்பாலும் நல்லெண்ணையிலும் மறுமுறை உபயோகப்படுத்தப்படாத சூரியகாந்தி எண்ணெயில் மட்டுமே தயார் செய்கின்றனர். இதன் காரணமாக நமக்கு ஆரோக்கியத்தில் எந்தவிதமான குறைபாடும் இல்லை என்றே கூறலாம். இப்பேர்பட்ட பழங்கால சிறப்பு வாய்ந்த உணவகத்தின் நிர்வாகி சங்கரன் அவர்களிடம் பேசியபோது, தனது அப்பா 1953 இந்த உணவகத்தை தொடங்கியதாகவும், அதற்குப் பிறகு தனது உடன்பிறந்தவர்கள் இந்த கடையை நடத்தியதாகவும், தற்போது 20 வருடங்களாக தான் நடத்தி வருவதாகவும் கூறினார். மேலும் சாப்பிட வருபவர்களுக்கு வீட்டில்  அமர்ந்து சாப்பிடும் உணர்வை கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கடையை தொடர்ந்து மாற்றாமல் அப்படியே நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் 70 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சுவையை எந்த விதத்திலும் மாற்றிவிடக் கூடாது என்பதன் காரணமாக அதே சுவையில் உணவு வகைகளைத் தயாரித்து வழங்கி வருவதாகவும், அதன் காரணமாகவே மக்கள் தங்களது கடையைத் தேடி வந்துகொண்டே இருக்கின்றனர் என்றும் பூரிப்புடன் அவர் தெரிவித்தார். இவற்றில் சில உணவு வகைகளை தானே சமைப்பதாகவும் சங்கரன் தெரிவித்தார். மேலும் தனது மனைவியும் தனக்கு உதவியாக இருப்பார் என்றும் அவர் கூறினார்.


மணிஸ் கபே..70 ஆண்டுகள்.. மல்லிப்பூ இட்லி, மணக்கும் சட்னி : Food Corner கதை இதோ..

மேலும் காலை 4 மணிக்கு பில்டர் காபி யில் தொடங்கி 5 மணி முதல் சூடான டிபன் உணவுகள் இங்கு கிடைக்கின்றது. ஆனால் 10 மணிக்குள் அனைத்தும் முடிந்து விடுகின்றது. அதற்குள் சுமார் 200 பேர் வரை இங்கு வந்து சாப்பிட்டு விடுகின்றனர். அதிலும் குறிப்பாக இவர்களின் உபசரிப்பே மக்கள் இவர்களை தேடி வர காரணமாக இருக்கிறது என்று கூறுகின்றனர் வாடிக்கையாளர்கள். ரயில்வே நிலையத்திற்கு அருகில் இருப்பதால் அங்கு செல்லும் பயணிகளும் இங்கு வந்து சாப்பிட்டுவிட்டு செல்கின்றனர். இதன் சுவையை ஒருமுறை ருசித்தவர்கள் அடுத்த முறை எப்படியாவது இங்கு வந்து சாப்பிட்டு விட்டுதான் செல்கின்றனர். 70 ஆண்டு காலமாக சுவை மாறாமல் மணம் மாறாமல் இயங்கி வரும் இந்த மணிஸ் கஃபே திருச்சி மக்களுக்கு மட்டுமல்லாமல், வெளியூர் செல்லும் பயணிகளுக்கும் ஒரு நினைவில் இருந்து நீங்கா கடையாக இருக்கின்றது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget