மேலும் அறிய

திருச்சி எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கு : குற்றவாளி மணிகண்டன் மீது குண்டாஸ்

திருச்சி சிறப்பு காவல்துறை உதவி ஆய்வாளர் பூமிநாதன் கொலை வழக்கில் குற்றவாளியான மணிகண்டன் மீது குண்டாஸ் போடபட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுக்கோட்டை அருகே அதிகாலையில் ஆடு திருடர்களை விரட்டி சென்ற எஸ்.ஐ. வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகை மாவட்டம் தலைஞாயிறை சேர்ந்தவர் பூமிநாதன் (55) சிறப்பு சப் இன்ஸ்பெக்டரான இவர். திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்தார். கடந்த  மாதம் 21 ஆம் தேதி  இரவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன், நவல்பட்டு தலைமை காவலர் சித்திரைவேலுவும், தனித்தனியே இருசக்கர வாகனங்களில் இரவு ரோந்து பணியில் இருந்துள்ளனர். கடந்த மாதம்  21ஆம் தேதி அதிகாலை 1.30 மணி அளவில் பூலாங்குடி காலனி பகுதியில் இரண்டு இருசக்கர வாகனத்தில்  4 பேர்கள் வந்தனர். இதில் ஒரு இருசக்கர வாகனத்தில் ஒரு ஆடு இருந்துள்ளது, இதை பார்த்த சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அவர்கள் நின்ற பகுதிக்கு சென்றபோது மர்ம நபர்கள் ஆட்டை அங்கேயே விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பினர். ஆடு திருடர்களை பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பூமிநாதன் சித்திரைவேலுவும் விரட்டி சென்றனர்.


திருச்சி எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கு : குற்றவாளி மணிகண்டன் மீது  குண்டாஸ்

மேலும்  பூலாங்குடி காலனியில் இருந்து திருவெறும்பூர் -கீரனூர் சாலையில் சூரியூர், சின்னபாண்டூரார்பட்டி, லட்சுமணன்பட்டி,பாலாண்டார்பட்டி, வழியாக 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு துரத்திச் சென்றபோது அந்த கும்பல் பள்ளத்துப்பட்டி ஊருக்குள் சென்றனர். இதனை பின்தொடர்ந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பூமிநாதன் அவர்களை விரட்டிச் சென்றார் பள்ளத்துப்பட்டியில் இருந்து புதுக்கோட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வரும் வழியில் குறுக்கே இருந்த ரயில்வே தரைப் பாலத்தில் மழை நீர் தேங்கி இருந்ததால் அந்த கும்பல் அங்கேயே நின்று விட்டனர். 4 பேர்களையும் அழைத்து விசாரனை மேற்கொண்டார்.

இந்நிலையில் திடீரென்று பூமிநாதனை ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பி சென்றனர். எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் சம்பவ இடத்திலியே ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார்.இதனை தொடர்ந்து 4 தனிப்படை அமைத்து காவல்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர். 24 மணி நேரத்தில் தனிப்படை காவல்துறையினர் 3 குற்றவாளிகளை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆடு திருடிய மணிகண்டனின் தாய்க்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்து இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் வைத்து இருந்த ஆயுதத்தால் பூமிநாதனை பின்புறம் தாக்கினேன் என்று விசாரணையில் மணிகண்டன் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.


திருச்சி எஸ்.எஸ்.ஐ பூமிநாதன் கொலை வழக்கு : குற்றவாளி மணிகண்டன் மீது  குண்டாஸ்

இந்நிலையில் மணிகண்டன் தெரிவித்த பரபரப்பு வாக்கு மூலத்தை தொடர்ந்து எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைதான 2 சிறார்களுக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து  மணிகண்டனுக்கு ஜாமின் கோரி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, நேற்று  நடந்தது. இரு தரப்பு வாதங்களையும் ஆய்வு செய்த மாவட்ட முதன்மை நீதிபதி மணிகண்டனுக்கு ஜாமின் கோரிய மனுவை நிராகரித்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் எஸ்.எஸ்.ஐ. பூமிநாதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தற்போது புதுக்கோட்டை சிறையில் இருந்த மணிகண்டன் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget