மேலும் அறிய

மியான்மர் வேலைவாய்ப்பு மோசடி..மீட்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்..2 இடைத்தரகர்களை கைதுசெய்த போலீஸ்!

மியான்மர் நாட்டில் இந்தியர்களிடம் நடைபெற்ற வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக 2 இடைத்தரகர்களை மகாராஷ்டிர காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

மியான்மர் நாட்டில் இந்தியர்களிடம் நடைபெற்ற வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக 2 இடைத்தரகர்களை மகாராஷ்டிர காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மியான்மர் நாட்டிலிருந்து மீட்டு வரப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ள பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

மியான்மரில் நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு எனக்கூறி இளைஞர்களை ஏமாற்றிய 2 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மியான்மரில் இருந்து திரும்பிய இளைஞர் ஒருவரின் புகாரில் மஹாராஷ்டிரா டோங்கரியில் நவாஸ்கான், உமர் காதர் என்ற இரண்டு ஏஜெண்டுகளை மகாராஷ்டிர காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பல பேர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற அடிப்படையிலும் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த புதுக்கோட்டை அப்துல்லா, தென்காசி விக்னேஷ், கோயம்புத்தூர் வெஸ்லி, குமார், வேலூர் அகமது, சச்சின், ஊட்டி சிவசங்கர், பொள்ளாச்சி செளந்தர், அரியலூர் செல்வி, கன்னியாகுமரி பிரசாந்த, ஜெனிகாஸ், கரூர் மணிக்குமார், திருச்சி செபாஸ்டின் ஆகிய 13 பேர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.  அவர்களை சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சால்வை அணிவித்து வரவேற்றார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் , தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து தகவல் தொழில்நுட்ப வேலைகளுக்கென்று பல்வேறு ஏஜென்டுகள் மூலம் அழைத்து சென்று தாய்லாந்து நாட்டிற்கு அழைத்து சென்று பக்கத்தில் இருக்கும் மியான்மர் நாட்டிற்கு அவர்களுக்கு சொன்ன வேலையை தவிர்த்து மற்ற வேலைகளை கொடுத்துள்ளனர். அதனை செய்ய மறுத்துள்ளனர்.

அங்கு சிக்கி தவித்த நபர்கள் குறித்த செய்தியின் வாயிலாக தமிழக முதலமைச்சருக்கு தகவல் கொடுத்து பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதினார். தாய்லாந்தில் இருந்து விமானம் மூலம் தற்போது அழைத்து வந்துள்ளனர். அவர்களை இல்லம் செல்ல வழிவகை செய்துள்ளோம். சுமார் 50 தமிழர்கள் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வருகிறது. 
 
அழைத்து சென்ற ஏஜென்ட்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என கேட்டதற்கு முறையான தகவல்கள் கிடைக்கவில்லை, வெளிநாட்டிற்கு வேலை செல்வோர் தமிழக அரசில் பதிவு செய்து விட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டார். ஒவ்வொருவரையும் அழைத்து பேசி இருக்கிறோம். அவர்கள் நிலை குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று பொருளாதார ரீதியான உதவிகள் செய்யபடும். இது குறித்து மியான்மரில் சிக்கித் தவித்தவர்கள் பேசுகையில் தகவல் தொழில்நுட்ப வேலை இல்லாமல் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய வைக்கும் வேலையை செய்ய வேண்டும் என நிர்பந்தித்தாகவும் செய்ய மறுத்தவர்களை அடித்து துன்புறுத்தியதாகவும், அதற்கு தண்டனைகளை கொடுத்ததாகவும் தெரிவித்தனர். மீட்டு வந்த அரசிற்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget