மேலும் அறிய

பெரம்பலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கபட்ட கல்மர படிமம் அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 7 அடி நீளமுள்ள கல்மர படிம பகுதி அங்குள்ள ஆணைவாரி கிளை ஓடையில் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் கிராமத்தில் கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சுமார் 7 அடி நீளமுள்ள கல்மர படிம பகுதி அங்குள்ள ஆணைவாரி கிளை ஓடையில் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது. பல கோடி ஆண்டுகள் தொன்மை வாய்ந்த இந்த கல்மர படிமத்தை மீட்டு பத்திரப்படுத்தி காட்சிப்படுத்த வேண்டும் என்று குன்னத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆணைவாரி கிளை ஓடையில் சாலை அமைக்கும் பணியின்போது தொன்மையான கல் மரப் படிமத்தின் மீது மண்ணை கொட்டி மூடி சாலை அமைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த குன்னம் நேரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் மற்றும் கிராம மக்கள் அரசு உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்தனர். அதன்பேரில் மண்ணில் புதைக்கப்பட்ட கல் மர படிமத்தில் மீதிருந்த மண்ணை அகற்றி பாதுகாத்தனர். இருப்பினும் அங்கிருந்து கல்மர படிமம் மீட்கப்படாமல், கடந்த 1½ ஆண்டு காலமாக பராமரிப்பின்றி இருந்தது. கல்மர படிமத்தின் மீது வாகனங்கள் சென்றதால், அந்த படிமம் நாளுக்கு நாள் சிதிலம் அடைந்தவாறு இருந்தது. இது குறித்து குன்னம் நேரு இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் மாவட்ட கலெக்டருக்கும், குன்னம் தாசில்தாருக்கும் மனு கொடுக்கப்பட்டது.


பெரம்பலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கபட்ட கல்மர படிமம் அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு

இதையடுத்து மாவட்ட கலெக்டர் பரிந்துரையின்பேரில் கடந்த 2-ந் தேதி குன்னம் கிராம நிர்வாக அலுவலர் விக்கி மேற்பார்வையில், அந்த கல் மர படிமத்தை ஆணைவாரி கிளை ஓடையிலிருந்து வெட்டி எடுத்தனர். அப்போது கல்மர படிமம் சிதிலமடைந்து இருந்ததால் 5 துண்டுகளாக எடுக்கப்பட்டது. அந்த படிமம் குன்னம் சிவன் கோவிலில் உள்ள பூங்காவில் வைத்து பாதுகாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை குன்னம் தாசில்தார் அனிதா கல்மர படிமத்தை பார்வையிட்டு, மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதலின் பேரில் அந்த படிமங்களை பெரம்பலூர் புதை படிம அருங்காட்சியகத்தில் ஒப்படைக்குமாறு தெரிவித்தார். அதன்படி நேற்று மாலை குன்னம் கிராம நிர்வாக அலுவலர் விக்கி முன்னிலையில் குன்னம் நேரு இளைஞர் நற்பணி மன்றத்தினர் கல்மர படிமத்தை வேனில் ஏற்றி வந்து பெரம்பலூர் புதைபடிம அருங்காட்சியகத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bengaluru Stampede: கொலைக்களமான கொண்டாட்டம், பெங்களூரு கூட்ட நெரிசலுக்கான ஒரே காரணம் - நடந்தது என்ன?
Bengaluru Stampede: கொலைக்களமான கொண்டாட்டம், பெங்களூரு கூட்ட நெரிசலுக்கான ஒரே காரணம் - நடந்தது என்ன?
Thug Life Review : கமல் மணிரத்னம் கூட்டணி வென்றதா ? தக் லைஃப் திரைப்பட முழு விமர்சனம் இதோ
Thug Life Review : கமல் மணிரத்னம் கூட்டணி வென்றதா ? தக் லைஃப் திரைப்பட முழு விமர்சனம் இதோ
'ஷா’ குறித்த தமிழக முதல்வர் பேச்சு.. 8-ஆம் தேதி அமித்ஷா மதுரை வர இது தான் காரணமா?
'ஷா’ குறித்த தமிழக முதல்வர் பேச்சு.. 8-ஆம் தேதி அமித்ஷா மதுரை வர இது தான் காரணமா?
"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bengaluru Stampede: கொலைக்களமான கொண்டாட்டம், பெங்களூரு கூட்ட நெரிசலுக்கான ஒரே காரணம் - நடந்தது என்ன?
Bengaluru Stampede: கொலைக்களமான கொண்டாட்டம், பெங்களூரு கூட்ட நெரிசலுக்கான ஒரே காரணம் - நடந்தது என்ன?
Thug Life Review : கமல் மணிரத்னம் கூட்டணி வென்றதா ? தக் லைஃப் திரைப்பட முழு விமர்சனம் இதோ
Thug Life Review : கமல் மணிரத்னம் கூட்டணி வென்றதா ? தக் லைஃப் திரைப்பட முழு விமர்சனம் இதோ
'ஷா’ குறித்த தமிழக முதல்வர் பேச்சு.. 8-ஆம் தேதி அமித்ஷா மதுரை வர இது தான் காரணமா?
'ஷா’ குறித்த தமிழக முதல்வர் பேச்சு.. 8-ஆம் தேதி அமித்ஷா மதுரை வர இது தான் காரணமா?
"மியூட் மோடில் திமுக அரசு" தீக்குளித்த விவசாயி.. பொங்கி எழுந்த இபிஎஸ்
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
RCB Victory Parade Stampede: ஆர்சிபி கொண்டாட்டத்தில் அநியாயமாக பறிபோன உயிர்கள்.. இவர்கள்தான் காரணமா?
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
Bengaluru Stampede: காவு வாங்கிய RCB பாராட்டு விழா..காலத்திற்கும் நீங்கா கவலையில் ரசிகர்கள்!
RCB Victory Parade Stampede: சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல்.. குழந்தை உள்பட 7 பேர் மரணம்.. தொடர் பதற்றம்
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
JEE Advanced 2025 Result: வலுவான கல்வி கட்டமைப்பை இழக்கும் தமிழ்நாடு? ஐஐடி ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்ச்சி விகிதத்தில் கடைசி!
Embed widget