மேலும் அறிய

Kalaignar Urimai Thogai: திருச்சியில் கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பப் பதிவு; தேதி, நேரம் விவரம் இதோ

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் உதவித்தொகைக்கான அனைத்து விண்ணப்பங்களும் பதிவு செய்ய வேண்டும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தினார்.

திருச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் சிறப்பான முறையில் செயல்படுத்துவது குறித்து அரசுத்துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எம்.சத்தியபிரியா, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ரா.அபிராமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுற்றுலா பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச்செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் க.மணிவாசன் தலைமை தாங்கி பேசுகையில், “திருச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்ட உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க இரு கட்டங்களாக முகாம்கள் நடைபெற உள்ளது. முதல் கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் வருகிற 24-ந்தேதி முதல்  4-ந்தேதி வரையும், இரண்டாம் கட்ட முகாம் வருகிற 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும் நடைபெறவுள்ளது.
 
மேலும் முகாமில் ஒரே நேரத்தில் பலர் கூட்டமாக கூடுவதை தவிர்க்க வேண்டும். அனைத்து விண்ணப்பங்களையும் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து முகாம் நாட்களிலும் காலை 9.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடத்த வேண்டும். விண்ணப்பதாரரின் ஆதார் அட்டையுடன் செல்போன் எண் இணைக்கப்பட்டு இருந்தால், அந்த செல்போனை முகாமிற்கு எடுத்து வருவது விண்ணப்ப பதிவை எளிமைப்படுத்தும் என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என தெரிவித்தார். 
 

Kalaignar Urimai Thogai: திருச்சியில் கலைஞர் மகளிர் உரிமை  தொகை விண்ணப்பப் பதிவு; தேதி, நேரம் விவரம் இதோ
 
இதைத்தொடர்ந்து, கலைஞர் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக சமயபுரம் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் நடைபெற்று வரும் பயிற்சி முகாமை அவர் நேரில் பார்வையிட்டார். பின்னர் லால்குடி தாலுகா நெருஞ்சலக்குடி பகுதியில் பொதுமக்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பங்கள் வினியோகம் செய்யும் பணியை ஆய்வு செய்ததுடன், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார். பின்னர் வாளாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள முகாமை பார்வையிட்டார். மேலும் மணப்பாறை தாலுகா பகுதியில் நேற்று டோக்கன் மற்றும் விண்ணப்பம் வழங்கும் பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி மொத்தமுள்ள 119 கடைகளுக்கு உட்பட்ட 73,149 குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த விண்ணப்பம் வழங்கும் பணி 3 நாட்கள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. தா.பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் அந்த திட்டத்தில் விண்ணப்ப படிவங்களை எந்த மையத்தில் வழங்க வேண்டும் என்பது குறித்த டோக்கன் உள்ளிட்டவற்றை வீடு, வீடாக ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கி வருகின்றனர்.
 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Ramanathapuram Accident: ராமநாதபுரத்தில் கோர விபத்து.. 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி!
Free laptop: மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
மாணவ, மாணவிகள் கையில் இலவச லேப்டாப்.! எப்போ தெரியுமா.? தேதி குறித்த ஸ்டாலின்
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Tirunelveli Halwa: நெய்க்கு பதிலாக டால்டா.. திருநெல்வேலி அல்வாவில் கலப்படம்.. ஆயிரம் கிலோ பறிமுதல்!
Embed widget