மேலும் அறிய

திருச்சி முக்கொம்பு மேலணை, கல்லணையில், காவிரி ஒழுங்காற்றுக்குழு நேரில் ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் நீர் இருப்பு குறித்து திருச்சி முக்கொம்பு மேலணை, கல்லணையில் காவிரி ஒழுங்காற்றுக்குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களுக்கு காவிரி நீரைப் பகிர்ந்தளிக்கும் வகையில் சுப்ரீம்கோர்ட்டு உத்தரவின்பேரில், கடந்த 2018- ல் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் 61-வது கூட்டம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் திருச்சி மண்டல தலைமைப்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு தலைவர் நவீன்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தமிழகம் சார்பில் நீர்வள ஆதார அமைப்பின் திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் எஸ்.ராமமூர்த்தி மற்றும் புதுச்சேரி மாநில பொதுப்பணித் துறை தலைமைப்பொறியாளர் வி.சத்திய மூர்த்தி, கேரள மாநில பாசனத்துறை தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ், கர்நாடக மாநில நீர்ப்பாசனத் துறை மேலாண் இயக்குனர் கே.ஜெய்பிரகாஷ், காவிரி தொழில்நுட்பக்குழுவின் தலைவர் சுப்பிரமணியன் உள்பட 4 மாநிலங்களைச் சேர்ந்த நீர்வள ஆதார அமைப்பின் பொறியாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது 4 மாநிலங்களிலும் பாசனத்திற்கு தேவையான தண்ணீரின் அளவு, பயிரிடப்படும் பாசன பரப்பளவு உள்ளிட்ட விவரங்கள் குறித்து கலந்தாய்வு செய்யப்பட்டது.


திருச்சி முக்கொம்பு மேலணை, கல்லணையில், காவிரி ஒழுங்காற்றுக்குழு நேரில் ஆய்வு

மேலும்  மேட்டூர், பவானிசாகர் மற்றும் அமராவதி அணைகளில் தற்போதைய நீர் வரத்து மற்றும் நீர் இருப்பு குறித்தும், 2021 ஜூன் மாதம் முதல் 2022 மே 3-ந் தேதி வரை பிலுகுண்டுலுவில் 259 டி.எம்.சி.தண்ணீர் பெறப்பட்டுள்ளதாகவும் தமிழக அதிகாரியான ராமமூர்த்தி தெரிவித்தார். ஆய்வுக்கூட்டம் முடிந்ததும், காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழுவினர் திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணை, தஞ்சை மாவட்டம் கல்லணை ஆகியவற்றை பார்வையிட்டனர்.அங்கு அணைகளில் நீர் இருப்பு குறித்து ஆய்வு செய்ததுடன் குறிப்பெடுத்து கொண்டனர்.

திருச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம்.31 -ந் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. அப்போது விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். 2 ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாகவே கூட்டம் நடத்தப்பட்டது. தற்போது நேரில் வந்து காவிரிநீர் ஒழுங்காற்றுக்குழுவினர் ஆய்வு நடத்தியது விவசாயிகள் யாருக்கும் தெரிவிக்கப்பட வில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.


திருச்சி முக்கொம்பு மேலணை, கல்லணையில், காவிரி ஒழுங்காற்றுக்குழு நேரில் ஆய்வு

திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள விவசாயிகள் கோடைகாலங்களில் தண்ணீர் பற்றாக்குறை தொடர்ந்து நீடித்து  வருகிறது. மேலும்  ஆற்று பாசனம் வழியாக குறிப்பிட்ட நேரத்தில் தண்ணீர் திறந்து விடவேண்டும் எனவும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.  கோடைகால காலகட்டத்தில் அந்த சமயங்களில் விவசாயம் செய்யும் பயிர்களுக்கு ஏற்றவாறு தண்ணீர் பாசனம் திறந்துவிட வேண்டும் என தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகிறோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.  இந்நிலையில் பல இடங்களில் தடுப்பணைகளை அமைக்க வேண்டும் தண்ணீரை அதிகளவில் சேமித்து வைக்க வேண்டும் அவ்வாறு சேமித்தால் விவசாயிகள் மிகவும் பயன் அடைவார்கள் என தொடர்ந்து வலியுறுத்தபட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்திற்கு விவசாயிகளை அழைக்காமல் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் ஆலோசனை செய்தது மிகவும் வருத்தமடைய செய்வதாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Embed widget