மேலும் அறிய

திருச்சி: கட்டிலுக்கு அடியில் மனைவி உடல்.. கொலை செய்துவிட்டு கொரோனா கதை கூறிய கணவர்!

திருச்சி அருகே பெண் கொலை வழக்கில் கணவர்-மாமியார் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக அளித்த வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல் வௌியாகி உள்ளது.

திருச்சியை அடுத்த நெ.1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சி சாய் நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ் (வயது 37). இவரது மனைவி சிவரஞ்சனி (27). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். நரசிம்மராஜியின் தாய் வசந்தகுமாரி (55) என்பவரும் இவர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி நள்ளிரவு நரசிம்மராஜ் தனது மனைவி சிவரஞ்சனியை கொலை செய்து பிளாஸ்டிக் பையில் சுருட்டி வீட்டின் படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு தப்பிச்சென்று தலைமறைவானார். இந்த கொலை சம்பவம் குறித்து சிவரஞ்சனியின் தந்தை கோபிநாத் கொள்ளிடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நரசிம்மராஜ், அவரது தாய் வசந்தகுமாரி ஆகியோரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் நரசிம்மராஜ் நெ.1 டோல்கேட் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் நரசிம்மராஜ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- சமயபுரம் பகுதியில் இருந்த எங்களுக்கு சொந்தமான வீட்டை விற்பனை செய்துவிட்டு, தாளக்குடி சாய் நகரில் உள்ள ஒரு மாடி வீட்டில் ரூ.6 ஆயிரம் வாடகையில் குடியேறினோம். வீடு விற்ற பணத்தில் கடனை அடைத்தது போக மீதமுள்ள தொகையை எனது மனைவி வங்கி கணக்கிலும், எனது வங்கி கணக்கிலும் செலுத்திவிட்டோம். என்னிடம் இருந்த பணத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை இழந்துவிட்டேன்.


திருச்சி: கட்டிலுக்கு அடியில் மனைவி உடல்.. கொலை செய்துவிட்டு கொரோனா கதை கூறிய கணவர்!

மேலும் வயதான எனது தாய் வசந்தகுமாரிக்கு அடிக்கடி மருத்துவ செலவுகள் செய்து வந்தேன். இதனையறிந்த சிவரஞ்சனி அவ்வப்போது என்னிடம் தகராறில் ஈடுபடுவார். அப்போதெல்லாம் என் தாய் இருவரையும் சமாதானமாக செல்லும்படி வலியுறுத்துவார். இதனால் எங்கள் மீது கடும் கோபத்தில் இருந்த சிவரஞ்சனி எனது தாய் வசந்தகுமாரியை தனி குடித்தனம் வைக்கும்படி கூறியும், என்னிடம் இருந்த பணத்தை திருப்பி கேட்டும், தினசரி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் என்னிடம் தகராறு செய்துவிட்டு சிவரஞ்சனி தூங்கிவிட்டார். இதனால் நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினேன். ஒரு கட்டத்தில் எனது மன உளைச்சலுக்கு காரணமான மனைவி சிவரஞ்சனியை கொலை செய்ய திட்டமிட்டேன். சம்பவத்தன்று நள்ளிரவு பிள்ளைகள் மற்றும் தாய் வசந்தகுமாரி தூங்கிய பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மற்றொரு படுக்கை அறை கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த மனைவியை வெட்டிக் கொலை செய்தேன்.


திருச்சி: கட்டிலுக்கு அடியில் மனைவி உடல்.. கொலை செய்துவிட்டு கொரோனா கதை கூறிய கணவர்!

பின்னர் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் சுருட்டி கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு விடியும் வரை காத்திருந்தேன். விடிந்ததும் எனது தாய் வசந்தகுமாரியிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தேன். அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் எனது தாயிடம் உங்களை ஆந்திராவில் உள்ள சகோதரி வீட்டில் விட்டுவிட்டு நான் போலீசில் சரணடைகிறேன் என்று கூறினேன். பிள்ளைகளிடம் அம்மாவுக்கு கொரோனா இருப்பதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறி 3 பேரையும் ஆந்திராவிற்கு கூட்டிச்சென்று எனது சகோதரி வீட்டில் பிள்ளைகளையும், மற்றொரு இடத்தில் என் தாயையும் விட்டுவிட்டேன். பின்னர் திருச்சி நெ.1 டோல்கேட்டிற்கு வந்த நான் போலீசில் சரணடைய பயந்துகொண்டு பதுங்கியிருந்தேன். அப்போதுதான் போலீசிடம் சிக்கிக்கொண்டேன்.இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆந்திராவில் இருந்து வசந்தகுமாரியை வரவழைத்து கொலையை மறைக்க உடந்தையாக இருந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரையும் கைது செய்தனர். பின்னர் நரசிம்மராஜையும், வசந்தகுமாரியையும் சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
ABP Premium

வீடியோ

Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident
கைதாகிறாரா சீமான்? திமுக நிர்வாகி மீது அட்டாக் பாய்ந்த கொலை மிரட்டல் வழக்கு | Seeman Arrest
நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
கோவை தெற்கு: செந்தில் பாலாஜியின் அதிரடி திட்டம்! கொங்கு மண்டலத்தில் திமுகவின் ஆட்டம் ஆரம்பமா?
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
BJP vs DMK: திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
திமுகவின் மெகா பிளான்... முறியடிக்க கை கோர்க்கும் அண்ணாமலை- நயினார்.! திடீர் ட்விஸ்ட்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
IPL 2026 Unsold: பேரு பெத்த பேரு, போக இல்ல ஊரு.. ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத வீரர்கள் - சிஎஸ்கே, மும்பை ஸ்டார்ஸ்
Women Self Help Group: பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
பொங்கலுக்கு குஷி தான்.! மகளிர் சுய உதவிக்குழு எதிர்பார்த்த அறிவிப்பு.! தேதி குறித்த தமிழக அரசு
Porur - Poonamallee metro train: சென்னை மக்களுக்கு ஹேப்பி.! வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்- எப்போ தொடங்குது தெரியுமா.?
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.! வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில்- எப்போ தொடங்குது தெரியுமா.?
சிறுமிக்கு பாலியல் தொல்லை ; முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொல்லை ; முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget