மேலும் அறிய

திருச்சி: கட்டிலுக்கு அடியில் மனைவி உடல்.. கொலை செய்துவிட்டு கொரோனா கதை கூறிய கணவர்!

திருச்சி அருகே பெண் கொலை வழக்கில் கணவர்-மாமியார் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக அளித்த வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல் வௌியாகி உள்ளது.

திருச்சியை அடுத்த நெ.1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சி சாய் நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ் (வயது 37). இவரது மனைவி சிவரஞ்சனி (27). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். நரசிம்மராஜியின் தாய் வசந்தகுமாரி (55) என்பவரும் இவர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி நள்ளிரவு நரசிம்மராஜ் தனது மனைவி சிவரஞ்சனியை கொலை செய்து பிளாஸ்டிக் பையில் சுருட்டி வீட்டின் படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு தப்பிச்சென்று தலைமறைவானார். இந்த கொலை சம்பவம் குறித்து சிவரஞ்சனியின் தந்தை கோபிநாத் கொள்ளிடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நரசிம்மராஜ், அவரது தாய் வசந்தகுமாரி ஆகியோரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் நரசிம்மராஜ் நெ.1 டோல்கேட் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் நரசிம்மராஜ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- சமயபுரம் பகுதியில் இருந்த எங்களுக்கு சொந்தமான வீட்டை விற்பனை செய்துவிட்டு, தாளக்குடி சாய் நகரில் உள்ள ஒரு மாடி வீட்டில் ரூ.6 ஆயிரம் வாடகையில் குடியேறினோம். வீடு விற்ற பணத்தில் கடனை அடைத்தது போக மீதமுள்ள தொகையை எனது மனைவி வங்கி கணக்கிலும், எனது வங்கி கணக்கிலும் செலுத்திவிட்டோம். என்னிடம் இருந்த பணத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை இழந்துவிட்டேன்.


திருச்சி: கட்டிலுக்கு அடியில் மனைவி உடல்.. கொலை செய்துவிட்டு கொரோனா கதை கூறிய கணவர்!

மேலும் வயதான எனது தாய் வசந்தகுமாரிக்கு அடிக்கடி மருத்துவ செலவுகள் செய்து வந்தேன். இதனையறிந்த சிவரஞ்சனி அவ்வப்போது என்னிடம் தகராறில் ஈடுபடுவார். அப்போதெல்லாம் என் தாய் இருவரையும் சமாதானமாக செல்லும்படி வலியுறுத்துவார். இதனால் எங்கள் மீது கடும் கோபத்தில் இருந்த சிவரஞ்சனி எனது தாய் வசந்தகுமாரியை தனி குடித்தனம் வைக்கும்படி கூறியும், என்னிடம் இருந்த பணத்தை திருப்பி கேட்டும், தினசரி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் என்னிடம் தகராறு செய்துவிட்டு சிவரஞ்சனி தூங்கிவிட்டார். இதனால் நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினேன். ஒரு கட்டத்தில் எனது மன உளைச்சலுக்கு காரணமான மனைவி சிவரஞ்சனியை கொலை செய்ய திட்டமிட்டேன். சம்பவத்தன்று நள்ளிரவு பிள்ளைகள் மற்றும் தாய் வசந்தகுமாரி தூங்கிய பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மற்றொரு படுக்கை அறை கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த மனைவியை வெட்டிக் கொலை செய்தேன்.


திருச்சி: கட்டிலுக்கு அடியில் மனைவி உடல்.. கொலை செய்துவிட்டு கொரோனா கதை கூறிய கணவர்!

பின்னர் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் சுருட்டி கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு விடியும் வரை காத்திருந்தேன். விடிந்ததும் எனது தாய் வசந்தகுமாரியிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தேன். அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் எனது தாயிடம் உங்களை ஆந்திராவில் உள்ள சகோதரி வீட்டில் விட்டுவிட்டு நான் போலீசில் சரணடைகிறேன் என்று கூறினேன். பிள்ளைகளிடம் அம்மாவுக்கு கொரோனா இருப்பதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறி 3 பேரையும் ஆந்திராவிற்கு கூட்டிச்சென்று எனது சகோதரி வீட்டில் பிள்ளைகளையும், மற்றொரு இடத்தில் என் தாயையும் விட்டுவிட்டேன். பின்னர் திருச்சி நெ.1 டோல்கேட்டிற்கு வந்த நான் போலீசில் சரணடைய பயந்துகொண்டு பதுங்கியிருந்தேன். அப்போதுதான் போலீசிடம் சிக்கிக்கொண்டேன்.இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆந்திராவில் இருந்து வசந்தகுமாரியை வரவழைத்து கொலையை மறைக்க உடந்தையாக இருந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரையும் கைது செய்தனர். பின்னர் நரசிம்மராஜையும், வசந்தகுமாரியையும் சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
நாகபந்தம்
நாகபந்தம்" திரைப்படத்தில் பார்வதி ஆக  நடிக்கும் நபா நடேஷ் – ஃபர்ஸ்ட் லுக்  வெளியானது  
Trump Machado Nobel Prize: ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
ட்ரம்ப் கைக்கு வந்த நோபல் பரிசு; எதிர்ப்பை மீறி ஒப்படைத்த வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ
Embed widget