மேலும் அறிய

திருச்சி: கட்டிலுக்கு அடியில் மனைவி உடல்.. கொலை செய்துவிட்டு கொரோனா கதை கூறிய கணவர்!

திருச்சி அருகே பெண் கொலை வழக்கில் கணவர்-மாமியார் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக அளித்த வாக்குமூலத்தில் பரபரப்பு தகவல் வௌியாகி உள்ளது.

திருச்சியை அடுத்த நெ.1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சி சாய் நகரை சேர்ந்தவர் நரசிம்மராஜ் (வயது 37). இவரது மனைவி சிவரஞ்சனி (27). இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். நரசிம்மராஜியின் தாய் வசந்தகுமாரி (55) என்பவரும் இவர்களுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 3-ந் தேதி நள்ளிரவு நரசிம்மராஜ் தனது மனைவி சிவரஞ்சனியை கொலை செய்து பிளாஸ்டிக் பையில் சுருட்டி வீட்டின் படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு தப்பிச்சென்று தலைமறைவானார். இந்த கொலை சம்பவம் குறித்து சிவரஞ்சனியின் தந்தை கோபிநாத் கொள்ளிடம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நரசிம்மராஜ், அவரது தாய் வசந்தகுமாரி ஆகியோரை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் நரசிம்மராஜ் நெ.1 டோல்கேட் பகுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். பின்னர் நரசிம்மராஜ் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- சமயபுரம் பகுதியில் இருந்த எங்களுக்கு சொந்தமான வீட்டை விற்பனை செய்துவிட்டு, தாளக்குடி சாய் நகரில் உள்ள ஒரு மாடி வீட்டில் ரூ.6 ஆயிரம் வாடகையில் குடியேறினோம். வீடு விற்ற பணத்தில் கடனை அடைத்தது போக மீதமுள்ள தொகையை எனது மனைவி வங்கி கணக்கிலும், எனது வங்கி கணக்கிலும் செலுத்திவிட்டோம். என்னிடம் இருந்த பணத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை இழந்துவிட்டேன்.


திருச்சி: கட்டிலுக்கு அடியில் மனைவி உடல்.. கொலை செய்துவிட்டு கொரோனா கதை கூறிய கணவர்!

மேலும் வயதான எனது தாய் வசந்தகுமாரிக்கு அடிக்கடி மருத்துவ செலவுகள் செய்து வந்தேன். இதனையறிந்த சிவரஞ்சனி அவ்வப்போது என்னிடம் தகராறில் ஈடுபடுவார். அப்போதெல்லாம் என் தாய் இருவரையும் சமாதானமாக செல்லும்படி வலியுறுத்துவார். இதனால் எங்கள் மீது கடும் கோபத்தில் இருந்த சிவரஞ்சனி எனது தாய் வசந்தகுமாரியை தனி குடித்தனம் வைக்கும்படி கூறியும், என்னிடம் இருந்த பணத்தை திருப்பி கேட்டும், தினசரி தகராறில் ஈடுபட்டு வந்தார்.

சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் என்னிடம் தகராறு செய்துவிட்டு சிவரஞ்சனி தூங்கிவிட்டார். இதனால் நான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகினேன். ஒரு கட்டத்தில் எனது மன உளைச்சலுக்கு காரணமான மனைவி சிவரஞ்சனியை கொலை செய்ய திட்டமிட்டேன். சம்பவத்தன்று நள்ளிரவு பிள்ளைகள் மற்றும் தாய் வசந்தகுமாரி தூங்கிய பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மற்றொரு படுக்கை அறை கட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த மனைவியை வெட்டிக் கொலை செய்தேன்.


திருச்சி: கட்டிலுக்கு அடியில் மனைவி உடல்.. கொலை செய்துவிட்டு கொரோனா கதை கூறிய கணவர்!

பின்னர் உடலை ஒரு பிளாஸ்டிக் பையில் சுருட்டி கட்டிலுக்கு அடியில் மறைத்து வைத்துவிட்டு விடியும் வரை காத்திருந்தேன். விடிந்ததும் எனது தாய் வசந்தகுமாரியிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தேன். அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் எனது தாயிடம் உங்களை ஆந்திராவில் உள்ள சகோதரி வீட்டில் விட்டுவிட்டு நான் போலீசில் சரணடைகிறேன் என்று கூறினேன். பிள்ளைகளிடம் அம்மாவுக்கு கொரோனா இருப்பதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறி 3 பேரையும் ஆந்திராவிற்கு கூட்டிச்சென்று எனது சகோதரி வீட்டில் பிள்ளைகளையும், மற்றொரு இடத்தில் என் தாயையும் விட்டுவிட்டேன். பின்னர் திருச்சி நெ.1 டோல்கேட்டிற்கு வந்த நான் போலீசில் சரணடைய பயந்துகொண்டு பதுங்கியிருந்தேன். அப்போதுதான் போலீசிடம் சிக்கிக்கொண்டேன்.இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஆந்திராவில் இருந்து வசந்தகுமாரியை வரவழைத்து கொலையை மறைக்க உடந்தையாக இருந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரையும் கைது செய்தனர். பின்னர் நரசிம்மராஜையும், வசந்தகுமாரியையும் சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
TN Election: உங்க தொகுதி, உங்க எம்.எல்.ஏ., 2021 தேர்தலில் தோற்றது யார் தெரியுமா? எந்த கட்சி எங்கு ஆதிக்கம்?
நீலகிரி, ஈரோடு மக்களுக்கு இனிப்புச் செய்தி... ரூ.3,685 கோடி எரிவாயு திட்டத்தால் வளர்ச்சி காத்திருக்கிறது!
நீலகிரி, ஈரோடு மக்களுக்கு இனிப்புச் செய்தி... ரூ.3,685 கோடி எரிவாயு திட்டத்தால் வளர்ச்சி காத்திருக்கிறது!
பஞ்சபூதங்கள் போல் வளர்வோம்! திமுக-விற்கு வித்தியாசமான பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்
பஞ்சபூதங்கள் போல் வளர்வோம்! திமுக-விற்கு வித்தியாசமான பதிலடி கொடுத்த நயினார் நாகேந்திரன்
புதிய ரயில் சேவைகள்...சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி பெருமிதம்
புதிய ரயில் சேவைகள்...சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு பெருகும்: பிரதமர் மோடி பெருமிதம்
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?
Vilathikulam | விளாத்திகுளம் மாணவி கொலை! 27 வயது இளைஞர் மீது சந்தேகம்! குற்றவாளியை நெருங்கிய POLICE?
TVK BJP Alliance | விஜய் பாஜகவுடன் கூட்டணி? ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தையா? உண்மைகளை உடைத்த தவெக
Thoppai Ganesan Encounter | தேர்தல் நேரத்தில் ENCOUNTER!யார் இந்த தொப்பை கணேசன்?பரபரக்கும் சென்னை
Vijay CBI Investigation | 7 மணிநேர CBI விசாரணை HAPPY-ஆ வெளியே வந்த விஜய்! பாஜக-வுக்கு SUCCESSஆ ஏமாற்றமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
TVK Vijay: சென்னையால் வந்த வினை..! விஜயை டேக் கேர் செய்யும் ஆதவ் அர்ஜுனா? வெற்றிக்காக போராடும் ஆனந்த்?
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
PAK AFG Clash: 400 பேரை கொன்று குவித்த பாகிஸ்தான் - மருத்துவமனை மீது கொடூர தாக்குதல் - நிலைகுலைந்த காபூல்
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
Rajinikanth: விஜய்க்கு எதிராக ரஜினியை களமிறக்கும் இபிஎஸ் & கோ.. அமைதி காக்கும் திமுக!
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
TN Election: அதிர்ச்சி அளித்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் மரணம் - மிரட்டிய ஈரோடு கிழக்கு, 5 ஆண்டுகளில் எத்தனை பேர்?
Parthiban Controversy: தெலுங்கில் சாதி பெருமை.. தமிழை மறக்க மாட்டேன் என பார்த்திபன் சத்தியம்!
Parthiban Controversy: தெலுங்கில் சாதி பெருமை.. தமிழை மறக்க மாட்டேன் என பார்த்திபன் சத்தியம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Puducherry Election: 21ம் நூற்றாண்டில் எட்டாக்கனியாக முதலமைச்சர் பதவி! பாண்டிச்சேரியில் திமுக பரிதாபம்!
Iran Dancing Missile: ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
ஈரானின் ‘டான்ஸிங் ரோஸ்.!‘; முதல் முறையாக செஜ்ஜில் ஏவுகணையை வீசி தாக்குதல்; சிதறிய இஸ்ரேல்
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
TANCET 2026: டான்செட், சீட்டா.. முதுநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பு- தொடங்கிய விண்ணப்பப் பதிவு!
Embed widget