மேலும் அறிய

Trichy: இன்னும் 3 மாதம் தான்.. விறுவிறுப்பாக நடக்கும் துவாக்குடி-பஞ்சப்பூர் மேம்பாலம் பணிகள் .. அதிகாரிகள் தகவல்

திருச்சி மாவட்டம் துவாக்குடி-பஞ்சப்பூர் சுற்றுச்சாலை மேம்பாலம் பணிகள் வரும் செப்டம்பருக்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி மாநகரின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் திருச்சி - தஞ்சாவூர், திருச்சி - புதுக்கோட்டை, திருச்சி-மதுரை, திருச்சி - திண்டுக்கல், திருச்சி - கரூர் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் துவாக்குடியிலிருந்து மாத்தூர், பஞ்சப்பூர், சோழன் நகர் வழியாக ஜீயபுரம் வரை அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி துவாக்குடி - பஞ்சப்பூர், பஞ்சப்பூர் - ஜீயபுரம் என இருகட்டங்களாக இப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
 
நிலம் கையகப்படுத்துவதில் இருந்த இடர்பாடுகள் காரணமாக பஞ்சப்பூர் - ஜீயபுரம் இடையிலான 18.43 கி.மீ சாலைப் பணி கிடப்பில் உள்ளது. இதே வேளையில் துவாக்குடி - பஞ்சப்பூர் இடையிலான 25.91 கி.மீ சாலைப்பணிகள் கடந்தாண்டே 95 சதவீதம் நிறை வடைந்து விட்டது. ஆனால் காரைக்குடி - திருச்சி ரெயில் வழித்தடத்தில் குமாரமங்கலம் ரெயில் நிலையம் அருகில் மேம்பாலம் அமைக்க தெற்கு ரெயில்வே அனுமதி தராததால் இந்த சாலைப்பணியை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
 
இதை தொடர்ந்து கால தாமதத்துக்கு தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு அபராதத்தொகையைச் செலுத்திய ஒப்பந்த நிறுவனம் நிகழாண்டில் மட்டும் 3 முறைக்கு மேல் மேம்பாலம் அமைக்க அனுமதி கேட்டு ரெயில்வே நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியது. ஆனால் ரெயில் போக்குவரத்து மின்பாதை ஆகியவற்றுக்கு போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லை எனகூறி மேம்பாலம் கட்ட அனுமதி தர ரெயில்வே நிர்வாகம் மறுத்து விட்டது.
 

Trichy:  இன்னும் 3 மாதம் தான்.. விறுவிறுப்பாக நடக்கும் துவாக்குடி-பஞ்சப்பூர்  மேம்பாலம் பணிகள் .. அதிகாரிகள் தகவல்
 
இதனை தொடர்ந்து ரெயில்வே அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி குமாரமங்கலம் பகுதியில் பாலம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் கர்டர்களை நிலைநிறுத்தும் தூண்கள் - மின்பாதை இடையேயான இடைவெளி ஆகியவை சரி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து மதுரை கோட்ட ரெயில்வே அதிகாரிகள் ஆய்வுக்குப்பிறகு மேம்பாலம் கட்ட கடந்த மாத இறுதியில் அனுமதி கிடைத்தது. இதையடுத்து கடந்த 3 நாட்களாக கான்கிரீட் கர்டர்களை ரெயில் பாதையில் நிலைநிறுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
 
இப்பணிகள் முடிவடைந்து அக்டோபர் மாதத்தில் இந்தச்சாலை பயன்பாட்டுக்கு வரும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியது.. துவாக்குடி - பஞ்சப்பூர் சுற்றுச்சாலையில் காரைக்குடி - திருச்சி ரெயில் வழித்தடத்தில் குமாரமங்கலம் ரெயில் நிலையம் அருகில் மேம்பாலம் அமைக்க ரெயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களாக ராட்சத கிரேன்கள் மூலம் கான்கிரீட் கர்டர்களை தூண்களி நிலை நிறுத்தும் பணி நடை பெற்று வருகிறது.
 
அதன்பிறகு மேம்பாலத்தின் குறுக்கே இரும்பு தூண்கள் அமைத்தல், சோதனை அடிப்படையில் போக்குவரத்து இயக்கம் உள்ளிட்டவற்றுக்கு ரெயில்வே நிர்வாகத்தின் அனுமதி கிடைத்த பிறகு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்படும். செப்டம்பர் மாதத்துக்குள் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு அக்டோபர் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார்.
 
 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget