மேலும் அறிய

திருச்சி விமானநிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ 1.53 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் - சுங்கதுறை அதிகாரிகள்

மலேசியாவில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த பெண் பயணியிடம் இருந்து 2,291 கிராம் தங்க நகைகள் பறிமுதல் - சுங்கதுறை அதிகாரிகள் நடவடிக்கை..

திருச்சி விமான நிலையத்திலிருந்து அதிக அளவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு  விமான சேவைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

குறிப்பாக  கடந்த சில மாதங்களாக விமான நிலைய வளாகத்திலும், அதன் நுழைவு வாயில் பகுதியிலும் சுற்றித்திரியும் நபர்களிடமிருந்து எந்தவித ஆவணமும் இல்லாத வகையில் தங்க நகைகள் வைத்து இருந்தால் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. 

மேலும் திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து கடத்தல் தங்கம் அதிகரித்து வருவதால், அவற்றை முற்றிலும் தடுப்பதற்காக சுங்கதுறை அதிகாரிகள் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்


திருச்சி விமானநிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ 1.53 கோடி  மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் - சுங்கதுறை அதிகாரிகள்

திருச்சியில் பெண் பயணிடம் இருந்து ரூ 1.53 கோடி தங்க நகைகள் பறிமதல்

இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்பொழுது பெண் பயணி ஒருவரிடம் இருந்து ஏராளமான 22 மற்றும் 24 கேரட் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

எவ்வித ஆவணமும் இன்றி சுங்க வரி செலுத்தாமலும் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 2291 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். ரூபாய் ஒரு கோடி 53 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி அவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


திருச்சி விமானநிலையத்தில் பெண் பயணியிடம் இருந்து ரூ 1.53 கோடி  மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் - சுங்கதுறை அதிகாரிகள்

கடத்தல் கூடாரமாக மாறுகிறது.  திருச்சி விமான நிலையம்..

மேலும் இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது.. சுங்கத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு பிட் தங்கத்தைக்கூட கடத்திவர முடியாது. ஆனால், திருச்சி விமான நிலையத்தில் கிலோ கணக்கில் தங்கத்தைக் கடத்திவருகிறார்கள். இது எப்படிச் சாத்தியம் என கேள்வி எழுப்பினர். மேலும் பல சிறப்புகளைக்கொண்ட விமான நிலையம், தற்போது தங்கம் கடத்திவரும் கூடாரமாக மாறியிருக்கிறது.

குறிப்பாக ஒவ்வொரு விமான நிலையத்திலும் அதிநுட்பமான ஸ்கேனர் இருக்கிறது. அது மனித உடலிலுள்ள நரம்புகள் முதல் தசைகள் வரையிலும் ஸ்கேன் செய்யும் வல்லமைகொண்டது.ஆனால், இங்கு கிலோ கணக்கில் தங்கம் சர்வ சாதாரணமாக வெளியே வருகிறது என்றால் எப்படிச் சாத்தியம்? கஸ்டம்ஸ் அதிகாரிகளின் தொடர்பு இல்லாமல் கடத்தல் தங்கம் வெளியே வர வாய்ப்பே இல்லை. இதுவும் பிரச்னைகள் நடந்த பிறகுதான் நமக்குத் தெரியவருகிறது. இதுபோல் எத்தனை கிலோ தங்கம் வெளியே சென்றது என்று தெரியவில்லை. தங்கத்தைக் கடத்தி வருவதற்குத் திருச்சியில் பெரிய நெட்வொர்க் இருக்கிறது. என தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhar Update:  ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம் தெரியுமா?
Aadhar Update: ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம் தெரியுமா?
Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jayam Ravi Divorce | Jeeva Car Accident | விபத்தில் சிக்கிய கார்!  டென்ஷன் ஆன ஜீவா! ஷாக் சம்பவம்KN Nehru issue | செருப்பை சுமந்த தொண்டர்” இது நியாயமா KN நேரு?” தீயாய் பரவும் வீடியோVinesh phogat on PT Usha | ”பாஜகவின் அரசியல்” ஒலிம்பிக்கில் நடந்தது என்ன? வினேஷ் போகத் பகீர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhar Update:  ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம் தெரியுமா?
Aadhar Update: ஆதார் கார்டை புதுப்பிக்க மீண்டும் கால அவகாசம்! எப்போ வரை டைம் தெரியுமா?
Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
Eye Drops License: மக்களே உஷார்..! கண் சொட்டு மருந்துக்கான உரிமத்தை ரத்து செய்த மத்திய அரசு - காரணம் என்ன?
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
TN Bus: தொடர் விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா? நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Breaking News LIVE: திருப்பூரில் மகாவிஷ்ணுவிடம் போலீசார் தீவிர விசாரணை
Emergency Medicine: எமர்ஜென்சி மருந்து பற்றி தெரியுமா? வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மாத்திரைகள் என்ன?
Emergency Medicine: எமர்ஜென்சி மருந்து பற்றி தெரியுமா? வீட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய மாத்திரைகள் என்ன?
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி: எச்.ராஜா திட்டவட்டம்!
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே தமிழ்நாட்டுக்கு நிதி: எச்.ராஜா திட்டவட்டம்!
அரசியலில் கால்பதிக்க தயாராகும் விவசாயிகள் - காரணம் இதுதான் 
TVK Vijay Maanadu: தவெக மாநாடு தேதி மாற்றம்? புதிய அறிவிப்பு எப்போது ?
TVK Vijay Maanadu: தவெக மாநாடு தேதி மாற்றம்? புதிய அறிவிப்பு எப்போது ?
Embed widget