Ashwin on IPL: அந்த நாளுக்காக காத்திருக்கிறேன்... எதைப் பற்றி கூறினார் அஸ்வின்.?
இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில், சிஎஸ்கே அணிக்காக விளையாடும் அஸ்வின், அந்த நாளுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அது எந்த நாள்.?

தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில், சிஎஸ்கே அணிக்காக விளையாட உள்ளார். இந்நிலையில், அது குறித்து அவர் என்ன பேசியிருக்கிறார் என்று பார்க்கலாம்.
சிஎஸ்கே அணியில் மீண்டும் இடம்பிடித்த அஸ்வின்
கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியபோது, சிஎஸ்கே அணியில் இடம்பெற்றிருந்த அஸ்வின், 2015-ம் ஆண்டு வரை அதே அணிக்காக விளையாடினார். அதன்பிறகு பல்வேறு அணிகளுக்கு விளையாடிய அஸ்வின், சில ஆண்டுகள் பஞ்சாப் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். இந்த நிலையில், 10 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, சிஎஸ்கே அணி அவரை 9.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்து, தன் வசமாக்கியுள்ளது. இதையடுத்து, தற்போது சென்னையில் நடைபெற்றுவரும் சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளார்.
அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் - அஸ்வின்
இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பின் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் அஸ்வின், உண்மையிலேயே இது வித்தியாசமான உணர்வுகளை கொடுப்பதாக தெரிவித்துள்ளார். சிஎஸ்கேவிலிருந்து வெளியேறி பல ஆண்டுகள் வேறு அணிக்கு விளையாடிவிட்டு, மீண்டும் திரும்பியுள்ளதால் வித்தியாசமாக உணர்வதாக தெரிவித்துள்ள அவர், அதே சமயம் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியுள்ளார். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, இந்த சீசனுக்காக வெறித்தனமாக பயிற்சி எடுத்து வருவதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார். நீண்ட நாளைக்குப்பின் சிஎஸ்கேவிற்கு திரும்பியுள்ளதால், மிகவும் சீனியர் வீரர் போல் உணர்வதாகவும் அஸ்வின் கூறியிருக்கிறார்.
மேலும், மீண்டும் சிஎஸ்கே அணிக்காக சொந்த மண்ணில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடும் அந்த நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பதாக அவர் நெகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார்.
2025-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன், வரும் 22-ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர், மே மாதம் 25-ம் தேதி வரை நடைபெறுகிறது. கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன.
முன்னாள் சாம்பியனான சிஎஸ்கே அணி, வரும் 23-ம் தேதி, தனது முதல் லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த தொடரில், தல தோனியும் விளையாடுவதால், ரசிக்ரகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

