மேலும் அறிய

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

திருச்சி - சென்னை தேசியநெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வாய்க்கால் கரை தெருவை சேர்ந்த முனியப்பன் (48) நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி கலைவாணி (40), இரண்டாவது மகள் ஹரிணி (13), மகன் கார்முகிலன் (5) ஆகியோருடன் சொந்த ஊரான கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு காரில் சென்றார். அங்கு முனியப்பன் குடும்பத்தினருடன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அங்குள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்றார். இதையடுத்து அவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் சகோதரி வீட்டில் உடல் நலக்குறைவுடன் வசித்து வந்த தனது தாய் பழனியம்மாளை (70) காரில் அழைத்துக்கொண்டு, குடும்பத்தினருடன் மீண்டும் சீர்காழிக்கு நேற்று அதிகாலை புறப்பட்டார். காரை முனியப்பன் ஓட்டினார். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே அதிகாலை 4 மணியளவில் அந்த கார் வந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் டிரைவர் சுங்கச்சாவடியை பார்த்ததும் திடீரென்று பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது.
 

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
 
இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில், முனியப்பன் ஓட்டி வந்த கார், அந்த லாரி மீது மோதியது. அப்போது பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி, அந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதனால் கார் முன்னால் நின்ற லாரியின் அடியில் சிக்கியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி உருக்குலைந்தது. காருக்குள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்த முனியப்பன், கலைவாணி, ஹரிணி, பழனியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் கார்முகிலன் மட்டும் படுகாயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனை கண்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் இதுகுறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசாரும், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த கார்முகிலனை காரில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்த முனியப்பன், கலைவாணி, ஹரிணி, பழனியம்மாள் ஆகியோரின் உடல்களை காரில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்துக்குள்ளான காரை சாலையில் இருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
 

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
 
மேலும்  விபத்து குறித்து மங்களமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெருமாளை (42) கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்துக்குள்ளாகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம், அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த ஹரிணி ஒரு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். படுகாயமடைந்த கார்முகிலன் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். முனியப்பனின் மூத்த மகள் வர்ஷினி (17) திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்து பிளஸ்-2 படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். நேற்று நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"TVK தலைவருக்கு ‘Y' பிரிவு பாதுகாப்பு” மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!
Valentine's day : காதலில் வெற்றி பெற இந்த கோவிலுக்கு போனால் போதும்! இது உங்களுக்காக தான் !
Valentine's day : காதலில் வெற்றி பெற இந்த கோவிலுக்கு போனால் போதும்! இது உங்களுக்காக தான் !
மணிப்பூர்: திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய சிஆர்பிஎஃப் வீரர்! 2 வீரர்கள் பலி - 8 பேர் காயம்: நடந்தது என்ன?
மணிப்பூர்: திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய சிஆர்பிஎஃப் வீரர்! 2 வீரர்கள் பலி - 8 பேர் காயம்: நடந்தது என்ன?
Valentines Day Wishes for Singles: இன்னும் சிங்கிள் பசங்களா நீங்க? அப்போ உங்களுக்குத்தான் இந்த காதலர் தின வாழ்த்து!
Valentines Day Wishes for Singles: இன்னும் சிங்கிள் பசங்களா நீங்க? அப்போ உங்களுக்குத்தான் இந்த காதலர் தின வாழ்த்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | “என்னை LOVE பண்ணு, இல்லனா”மிரட்டிய தவெக நிர்வாகி 8ஆம் வகுப்பு சிறுமி தற்கொலை! | GingeeChiranjeevi Controversy | TVK Transgender Issue | ”9-ஆடா நாங்க?...இன்னும் எத்தனை நாளைக்கு..” SURRENDER ஆன தவெக! | Vijayதிமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"TVK தலைவருக்கு ‘Y' பிரிவு பாதுகாப்பு” மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!
Valentine's day : காதலில் வெற்றி பெற இந்த கோவிலுக்கு போனால் போதும்! இது உங்களுக்காக தான் !
Valentine's day : காதலில் வெற்றி பெற இந்த கோவிலுக்கு போனால் போதும்! இது உங்களுக்காக தான் !
மணிப்பூர்: திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய சிஆர்பிஎஃப் வீரர்! 2 வீரர்கள் பலி - 8 பேர் காயம்: நடந்தது என்ன?
மணிப்பூர்: திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய சிஆர்பிஎஃப் வீரர்! 2 வீரர்கள் பலி - 8 பேர் காயம்: நடந்தது என்ன?
Valentines Day Wishes for Singles: இன்னும் சிங்கிள் பசங்களா நீங்க? அப்போ உங்களுக்குத்தான் இந்த காதலர் தின வாழ்த்து!
Valentines Day Wishes for Singles: இன்னும் சிங்கிள் பசங்களா நீங்க? அப்போ உங்களுக்குத்தான் இந்த காதலர் தின வாழ்த்து!
பெங்களூரு டிராஃபிக்கிற்கு குட் பாய்.! வருகிறது டபுள் டக்கர் பாலம்...
பெங்களூரு டிராஃபிக்கிற்கு குட் பாய்.! வருகிறது டபுள் டக்கர் பாலம்...
Manipur President's Rule: கவிழ்ந்தது பாஜக ஆட்சி! மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.! நடந்தது என்ன?
கவிழ்ந்தது பாஜக ஆட்சி! மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்.! நடந்தது என்ன?
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!
King Maker Vijay: கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
கூட்டணி வைக்காவிட்டால் பாஜக, அதிமுக கோவிந்தா.!! கிங் மேக்கராகும் விஜய் - கருத்துக்கணிப்பு
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.