மேலும் அறிய

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு

திருச்சி - சென்னை தேசியநெடுஞ்சாலையில் கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வாய்க்கால் கரை தெருவை சேர்ந்த முனியப்பன் (48) நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது மனைவி கலைவாணி (40), இரண்டாவது மகள் ஹரிணி (13), மகன் கார்முகிலன் (5) ஆகியோருடன் சொந்த ஊரான கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு காரில் சென்றார். அங்கு முனியப்பன் குடும்பத்தினருடன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அங்குள்ள உறவினர்கள் வீடுகளுக்கு சென்றார். இதையடுத்து அவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் சகோதரி வீட்டில் உடல் நலக்குறைவுடன் வசித்து வந்த தனது தாய் பழனியம்மாளை (70) காரில் அழைத்துக்கொண்டு, குடும்பத்தினருடன் மீண்டும் சீர்காழிக்கு நேற்று அதிகாலை புறப்பட்டார். காரை முனியப்பன் ஓட்டினார். திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே அதிகாலை 4 மணியளவில் அந்த கார் வந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் டிரைவர் சுங்கச்சாவடியை பார்த்ததும் திடீரென்று பிரேக் பிடித்ததாக கூறப்படுகிறது.
 

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
 
இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில், முனியப்பன் ஓட்டி வந்த கார், அந்த லாரி மீது மோதியது. அப்போது பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி, அந்த கார் மீது பயங்கரமாக மோதியது. இதனால் கார் முன்னால் நின்ற லாரியின் அடியில் சிக்கியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கி உருக்குலைந்தது. காருக்குள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி படுகாயமடைந்த முனியப்பன், கலைவாணி, ஹரிணி, பழனியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் கார்முகிலன் மட்டும் படுகாயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனை கண்ட சுங்கச்சாவடி ஊழியர்கள் இதுகுறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசாரும், நெடுஞ்சாலை ரோந்து போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த கார்முகிலனை காரில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்த முனியப்பன், கலைவாணி, ஹரிணி, பழனியம்மாள் ஆகியோரின் உடல்களை காரில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து விபத்துக்குள்ளான காரை சாலையில் இருந்து காவல்துறையினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
 

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு
 
மேலும்  விபத்து குறித்து மங்களமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டிப்பர் லாரி டிரைவரான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பெருமாளை (42) கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்துக்குள்ளாகி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம், அவர்களது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த ஹரிணி ஒரு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்தார். படுகாயமடைந்த கார்முகிலன் 1-ம் வகுப்பு படித்து வருகிறான். முனியப்பனின் மூத்த மகள் வர்ஷினி (17) திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கியிருந்து பிளஸ்-2 படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நடந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். நேற்று நடந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Vs Amit Shah: “உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
“உங்கள் சங்கி படையையே கூட்டி வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது“; அமித் ஷாவிற்கு மு.க. ஸ்டாலின் சவால்
MK Stalin: உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
உதயநிதிக்கு பாராட்டு; பாஜகவிற்கு குட்டு; திருவண்ணாமலை மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேசியது என்ன.?
Udhayanidhi:
Udhayanidhi: "எதிரிகள் தப்புக்கணக்கை சுக்கு நூறாக்கும் கொள்கை கூட்டம் இது" ஆர்ப்பரித்த உதயநிதி
Udhayanidhi:
Udhayanidhi: "2026 தேர்தலில் இளைஞர்களுக்கு போட்டியிட அதிக வாய்ப்பு வழங்க வேண்டும்" - மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி கோரிக்கை
IND Vs SA 3rd T20: இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
இந்திய பவுலர்கள் ஆதிக்கம்; 3-வது டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி; 2-1 என தொடரில் முன்னிலை
Hero Vida Dirt.E K3: என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
என்னது, குழந்தைகளுக்கு இ-பைக்கா.?! அசத்தும் ஹீரோ நிறுவனம்; விடா டர்ட் இ பைக்கின் விலை என்ன.?
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
PM Modi Visit: பொங்கல் கொண்டாட தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி.. பாஜக போடும் ஸ்கெட்ச்!
New Kia Seltos vs Tata Sierra: புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
புதிய கியா செல்டோஸா.? டாடா சியராவா.? அதிக சிறப்பம்சங்களை கொண்டுள்ள SUV எது.?
Embed widget