மேலும் அறிய

டெல்லி புறப்பட்ட தமிழ்நாட்டு விவசாயிகள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை டெல்லியில் போராட்டம்

தமிழ்நாடு விவசாயிகள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, புதுடெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக திருச்சியில் இருந்து விவசாயிகள் ரெயிலில் புறப்பட்டு சென்றனர்.

 பல்வேறு கட்டமாக போராட்டங்கள் நடத்தியும் கண்டுகொள்ளாமல் இருப்பதாக மத்திய அரசை கண்டித்து புதுடெல்லி ஜந்தர்மந்தரில் நாளை (திங்கட்கிழமை) தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்த உள்ளனர். இதையொட்டி சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புதுடெல்லி செல்வதற்காக  திருச்சி ரெயில் நிலையம் வந்தனர். காலை 6.55 மணியளவில் திருச்சி ரெயில் நிலையத்தில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் மூலமாக சென்னை சென்றனர். பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணி அளவில் புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த விவசாயிகள் கூறியது.. ”கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, பா.ஜனதா கட்சி தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் அவர்கள் கூறியபடி வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ”
 

டெல்லி புறப்பட்ட தமிழ்நாட்டு விவசாயிகள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை டெல்லியில் போராட்டம்
 
”மேலும், 1974-ம் ஆண்டுக்கு முன்பு காவிரி ஆற்றில் இருந்து குறைந்தது 700 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வந்தது. 30 லட்சம் ஏக்கரில் விவசாயம் நடைபெற்றது. தற்போது, உச்ச நீதிமன்றமும், காவிரி மேலாண்மை வாரியமும் மாதம், மாதம் காவிரியில் தண்ணீர் திறந்து விட்டு வருடத்திற்கு 177 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனாலும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுக்கிறது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தண்ணீர் திறக்க வேண்டும். விவசாய விளைபொருட்களுக்கு 2 மடங்கு லாபம் வழங்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பிரதம மந்திரி ஓய்வூதிய திட்டத்தை எல்லா விவசாயிகளுக்கும் கொடுக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை புதுடெல்லியில் 10-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் நடைபெறும் போராட்டத்தில் வலியுறுத்துகிறோம்” கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த போராட்டம் நீடிக்கும் என தெரிவித்தனர். 
 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget