மேலும் அறிய

போக்குவரத்து விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் - அமைச்சர் எ.வ. வேலு எச்சரிக்கை

ஆட்டோக்களில் அதிக அளவில் மாணவர்களை ஏற்றி சென்றால் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். அமைச்சர் கே.என்.நேரு, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் (நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை) பிரதீப் யாதவ், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 
இன்னுயிர் காப்போம் திட்டம்:
 
இதனைத்தொடர்ந்து, கூட்டத்தில் அதிகாரிகள் மத்தியில் பேசிய அமைச்சர் வேலு கூறியது, இன்னுயிர் காப்போம் திட்டம் - நம்மை காக்கும் 48 திட்டத்தின் மூலம் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாட்டிலிருந்து வந்திருப்பவர்கள் எதிர்பாராத வகையில் விபத்தை சந்திக்க நேரிட்டாலும் அதற்கான மொத்த சிகிச்சை செலவையும் தமிழக அரசே ஏற்றுக் கொள்கிறது. அதன் அடிப்படையில் தற்போது வரை 237 அரசு மருத்துவமனைகள் மற்றும் 451 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 688 மருத்துவமனைகள் மூலம் 1 லட்சத்து 70 ஆயிரத்து 239 ேபர்களுக்கு ரூ.149 கோடியே 97 லட்சம் செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
 

போக்குவரத்து விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் - அமைச்சர் எ.வ. வேலு எச்சரிக்கை
கடும் நடவடிக்கை:
 
திருச்சி மாவட்டத்தில் 10 அரசு மருத்துவமனைகள், 23 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 33 மருத்துவமனைகள் மூலமாக 5,602 பேர்களுக்கு ரூ.5 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு பொதுமக்களின் உயிரை தமிழ்நாடு அரசு பாதுகாத்துள்ளது. விபத்து பகுதியில் (பிளிங்கர்) ஒளிரும் விளக்குகளை அமைக்க வேண்டும். வேகத்தடைகளை அடையாளப்படுத்த, அதற்குரிய ஒளிரும் பெயிண்ட் அடிக்க வேண்டும். செல்போனில் பேசிக் கொண்டே செல்வதை தடுக்க வேண்டும்.
 
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதை தடுக்க வேண்டும். மேலும் ஆட்டோக்களில் பள்ளி குழந்தைகளை அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்பவர்கள் மீதும், பஸ்களில் படியில் நின்று பயணம் செய்பவர்கள் மீதும் போலீசார் அதிக கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதை கட்டுப்படுத்த வேண்டும். சாலைகளில் கால்நடைகள் சுற்றினால் மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் விலங்குகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

போக்குவரத்து விதிகளை மீறினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் - அமைச்சர் எ.வ. வேலு எச்சரிக்கை
 
நிதின் கட்காரியிடம் நேரில் கோரிக்கை:
 
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வேலு பேசியது.. திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை முதல் துவாக்குடி வரை உயர்மட்ட பாலம் அல்லது சர்வீஸ் சாலை அல்லது இரண்டுமே அமைய உள்ளது. ஆனால், அங்குள்ள வியாபாரிகள், பல்வேறு சங்கங்கள் இணைந்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசு தான் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதால், நிதின் கட்காரியிடம் நேரில் சென்று கோரிக்கை வைத்தோம். அதற்கு அவர், பால்பண்ணை- துவாக்குடி சாலை அமைப்பதற்காக ஒரு குழுவை அமைத்து, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யச் சொல்வதாக தெரிவித்துள்ளார். திருச்சி மாநகரப் பகுதிகளில் 3 உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிக்கான ஆய்வுப் பணிகள் நிறைவுற்று, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்த நிலையில், திருச்சியில் மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான அறிவிப்பு வெளியானது. மெட்ரோ மற்றும் மாநில நெடுஞ்சாலைதுறை இணைந்து, கூட்டு முயற்சியில் இந்த பணிகளை செய்யும் என்றார்.
 
 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget