மேலும் அறிய

Crime: கொலை வழக்கு: சாமியார் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருச்சி அருகே தொழில் அதிபர், கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாமியார் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

திருச்சி கிராப்பட்டியை சேர்ந்தவர் துரைராஜ். தொழிலதிபரான இவருடைய கார் டிரைவர் சக்திவேல். இவர்கள் இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ந் தேதி திருச்சி-திண்டுக்கல் சாலையில் திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே காருடன் எரித்து கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தமிழக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆனால் கொலையாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணையில், துரைராஜூம், திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த வைர வியாபாரி தங்கவேலும் நண்பர்கள் என தெரியவந்தது. மேலும் தங்கவேல் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக நாமக்கல்லை சேர்ந்த ஜோதிடர் ஒருவரிடம் சென்று பரிகாரம் செய்வது தொடர்பாக கேட்டுள்ளார். அந்த ஜோதிடர் மூலமாக தங்கவேலுக்கு கண்ணன் என்ற சாமியார் என்பவர் அறிமுகமானார். இதன் மூலம் தங்கவேல் வீட்டுக்கு அடிக்கடி சாமியார் கண்ணன் வந்து சென்றுள்ளார். இதில் தங்கவேலின் மனைவி யமுனாவுக்கும், சாமியார் கண்ணனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.


Crime: கொலை வழக்கு: சாமியார் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மேலும் இதனை அறிந்த துரைராஜ் யமுனாவை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்த சாமியார் கண்ணன், கள்ளக்காதலி யமுனாவுடன் சேர்ந்து திட்டமிட்டு துரைராஜையும், அவரது கார் டிரைவர் சக்திவேலையும் எரித்து கொன்றது தெரியவந்தது. இது தொடர்பாக சாமியார் கண்ணன், அவரது கள்ளக்காதலி யமுனா, யமுனாவின் தாயார் சீதாலெட்சுமி ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கு திருச்சி 2-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வயது முதிர்வு காரணமாக திருச்சி காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த யமுனாவின் தாய் சீதாலெட்சுமி மரணம் அடைந்தார். மற்ற 2 பேர் மீதும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்தது. அவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். மேலும், இந்த கொலை வழக்கு தொடர்பாக 100-க் கும் மேற்பட்ட ஆவணங்கள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் 50-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டு இருந்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்கள். இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு மலைச்சாமி, கிராமநிர்வாக அதிகாரி மற்றும் அரசு டாக்டர் ஆகியோர் முக்கியமான சாட்சிகளாவர்.


Crime: கொலை வழக்கு: சாமியார் உள்பட 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை - திருச்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இந்த வழக்கில் சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டு, வக்கீல்கள் விவாதமும் நடைபெற்று முடிந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது. தீர்ப்பையொட்டி திருச்சி மத்திய சிறையில் இருந்த சாமியார் கண்ணன், திருச்சி மகளிர் சிறையில் இருந்த யமுனா ஆகியோர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கில் நீதிபதி கே.ஜெயக்குமார் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், குற்றம்சாட்டப்பட்ட சாமியார் கண்ணன், யமுனா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இதையடுத்து சாமியார் கண்ணன், யமுனா ஆகிய 2 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்த வழக்கில் அரசு சார்பில் வக்கீல் ராஜேந்திரன் ஆஜரானார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

DMK Statement: “எதிரிகளின் பயமே நமது வெற்றி“; ஓரணியில் தமிழ்நாடு - அதிமுகவை விமர்சித்து திமுக ‘நச்‘ அறிக்கை
“எதிரிகளின் பயமே நமது வெற்றி“; ஓரணியில் தமிழ்நாடு - அதிமுகவை விமர்சித்து திமுக ‘நச்‘ அறிக்கை
Trump Vs Iran: தேவைப்பட்டா மறுபடியும் தயாரிப்போம் - ஈரான்; தேவைப்பட்டா மறுபடியும் அடிப்போம் - ட்ரம்ப்
தேவைப்பட்டா மறுபடியும் தயாரிப்போம் - ஈரான்; தேவைப்பட்டா மறுபடியும் அடிப்போம் - ட்ரம்ப்
Aadhav Arjuna :  ‘அதிமுகவில் யாருமில்லை – TVK ல் இணைந்துவிட்டனர்’ ஆதவ் அர்ஜூனா புது உருட்டு..!
‘அதிமுகவில் யாருமில்லை – TVK ல் இணைந்துவிட்டனர்’ ஆதவ் அர்ஜூனா உருட்டு..!
Guest Lecturer: அரசு கலை, அறிவியல் கல்லூரி; 574 கவுரவ விரிவுரையாளர் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- தகுதி, வழிமுறை இதோ!
Guest Lecturer: அரசு கலை, அறிவியல் கல்லூரி; 574 கவுரவ விரிவுரையாளர் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- தகுதி, வழிமுறை இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Meets Rahul Gandhi | ராகுலை சந்திக்க திட்டம் தவெக காங்கிரஸ் கூட்டணி? விஜய் போடும் கணக்கு
Ponmudi vs Lakshmanan| CV சண்முகத்துடன் DEAL?லட்சுமணனுக்கு எதிராக ஸ்கெட்ச் ஆட்டத்தை தொடங்கிய பொன்முடி
ADMK BJP Alliance  | ”கூட்டணி வேண்டுமா வேண்டாமா?” தடாலடியாய் சொன்ன இபிஎஸ்! குழப்பத்தில் NDA கூட்டணி
“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Statement: “எதிரிகளின் பயமே நமது வெற்றி“; ஓரணியில் தமிழ்நாடு - அதிமுகவை விமர்சித்து திமுக ‘நச்‘ அறிக்கை
“எதிரிகளின் பயமே நமது வெற்றி“; ஓரணியில் தமிழ்நாடு - அதிமுகவை விமர்சித்து திமுக ‘நச்‘ அறிக்கை
Trump Vs Iran: தேவைப்பட்டா மறுபடியும் தயாரிப்போம் - ஈரான்; தேவைப்பட்டா மறுபடியும் அடிப்போம் - ட்ரம்ப்
தேவைப்பட்டா மறுபடியும் தயாரிப்போம் - ஈரான்; தேவைப்பட்டா மறுபடியும் அடிப்போம் - ட்ரம்ப்
Aadhav Arjuna :  ‘அதிமுகவில் யாருமில்லை – TVK ல் இணைந்துவிட்டனர்’ ஆதவ் அர்ஜூனா புது உருட்டு..!
‘அதிமுகவில் யாருமில்லை – TVK ல் இணைந்துவிட்டனர்’ ஆதவ் அர்ஜூனா உருட்டு..!
Guest Lecturer: அரசு கலை, அறிவியல் கல்லூரி; 574 கவுரவ விரிவுரையாளர் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- தகுதி, வழிமுறை இதோ!
Guest Lecturer: அரசு கலை, அறிவியல் கல்லூரி; 574 கவுரவ விரிவுரையாளர் இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- தகுதி, வழிமுறை இதோ!
’Bye, Bye ஸ்டாலினை திடீரென தவிர்த்த எடப்பாடி பழனிசாமி’ இதுதான் காரணமா..?
’Bye, Bye ஸ்டாலினை திடீரென தவிர்த்த எடப்பாடி பழனிசாமி’ இதுதான் காரணமா..?
ஏங்க.. 800 கி.மீட்டர் மைலேஜ்.. ரூ.50 லட்சம் முதல் 5 கோடி வரை! சந்தைக்கு வரும் சொகுசு கார்கள்
ஏங்க.. 800 கி.மீட்டர் மைலேஜ்.. ரூ.50 லட்சம் முதல் 5 கோடி வரை! சந்தைக்கு வரும் சொகுசு கார்கள்
Chennai Power Cut: சென்னையில ஜூலை 23-ம் தேதி(நாளை) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.?
சென்னையில ஜூலை 23-ம் தேதி(நாளை) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.?
TNPSC Group 4: பல லட்சம் பேரின் கனவோடு விளையாடுவதா? டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ரத்து செய்க- விளாசித் தள்ளிய ஈபிஎஸ்!
TNPSC Group 4: பல லட்சம் பேரின் கனவோடு விளையாடுவதா? டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை ரத்து செய்க- விளாசித் தள்ளிய ஈபிஎஸ்!
Embed widget