மேலும் அறிய

ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நிறுத்தம்; கண்டுகொள்ளாத திமுக எம்எல்ஏ - பொதுமக்கள் குற்றச்சாட்டு

ஸ்ரீரங்கம் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள்தொடங்குமா? இல்லை அறிவிப்பு மட்டும் தானா? பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உலக பிரசித்தி பெற்ற ரெங்கநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த புண்ணிய ஸ்தலத்திற்கு வருகை தரும் சுற்றுலா வாகனங்கள் மற்றும் பஸ்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லை. மேலும் வழிநெடுகிலும் சாலைகளில் பஸ்களை நிறுத்தி விடுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தில் ஒரு பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் தீர்க்கப்படாமல் இருக்கும் அடிமனை பிரச்சனைக்கும் தீர்வு காண வேண்டும் என குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நீண்ட நாள் கோரிக்கையான ஸ்ரீரங்கம் பேருந்து நிலைய பிரச்சினைக்கு விடிவு காலம் பிறந்து இந்தது. தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தது. தற்போதை சட்டமன்ற உறுப்பினர் எம்.பழனியாண்டியும் புதிய பேருந்து நிலையத்துக்கு சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார். இதையடுத்து தமிழக பட்ஜெட்டிலும் ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இதனை தொடர்ந்து  தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் மா.பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையாளர் வைத்திநாதன் ஆகியோர் ஸ்ரீரங்கம் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகாமையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பழைய கிளப் இடத்தை பார்வையிட்டனர். சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் அந்த இடம் அமைந்துள்ளது. அதில் பேருந்து நிலையம் அமைக்கலாம் என அமைச்சர் நேரு தெரிவித்தார்.


ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி நிறுத்தம்; கண்டுகொள்ளாத  திமுக  எம்எல்ஏ - பொதுமக்கள் குற்றச்சாட்டு

இதனை தொடர்ந்து பணிகள் தொடங்கிய சில மாதங்கள் கழித்து அனைத்து நிறுத்தி வைக்கபட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்யவில்லை என கூறினர். மேலும் நிதி வந்தால் மட்டுமே பணிகளை தொடங்க முடியும் என தெரிவித்தனர். மேலும் ஸ்ரீரங்கம் பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது, ஸ்ரீரங்கம் பகுதிக்கு பல்வேறு திட்டங்களை செய்து கொடுக்கிறேன், குறிப்பாக சாலை வசதி, குடிநீர், மின்சாரம், குப்பைகளை உடனடியாக அகற்றுவது, உள்ளிட்ட பல்வேறு முக்கியமான  கோரிக்கைகளை நிச்சயம் நிறைவேற்றி தருவேன் என்று தற்போது எம்.எல்.ஏ பழனியாண்டி வாக்கு கேட்டார். ஆனால் வெற்றி பெற்ற பிறகு இதுவரை மக்களை நேரில் சந்தித்து குறைக்களை கேட்கவில்லை, எந்த திட்டமும் முறையாக செய்து தரவில்லை என குற்றம்சாட்டினர். குறிப்பாக ஸ்ரீரங்கம் மக்களின்  நீண்ட நாள் கனவாக இருந்த புதிய பேருந்து நிலையம் கட்டி தரப்படும் என அறிவிப்பு வெளியிட்டு பணிகளை தொடங்கினர். ஆனால் தொடங்கிய வேகத்தில் பணிகள் நிறுத்தபட்டது. கிட்டதட்ட 1 ஆண்டு காலமாக பணிகள் நடக்காமல் உள்ளது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை, மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் மட்டுமே மக்கள், அரசியல் வாதிகள் கண்களுக்கு தெரிவார்கள்,  ஸ்ரீரங்கம் மக்களின் கனவு,  கனவாகவே உள்ளது என வேதனையுடன் தெரிவித்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  திரைப்படத்தாலேயே எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு பரவியுள்ளது - சந்திர சைதன்யா
ABP Southern Rising Summit 2025 LIVE: திரைப்படத்தாலேயே எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு பரவியுள்ளது - சந்திர சைதன்யா
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து  ஆச்சரியம்  மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து ஆச்சரியம் மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  திரைப்படத்தாலேயே எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு பரவியுள்ளது - சந்திர சைதன்யா
ABP Southern Rising Summit 2025 LIVE: திரைப்படத்தாலேயே எட்டயபுரம் அரசர் மீது தவறான வரலாறு பரவியுள்ளது - சந்திர சைதன்யா
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து  ஆச்சரியம்  மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து ஆச்சரியம் மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: 4 மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்- சென்னை, சென்யார் புயல் நிலவரம்: தமிழக வானிலை அறிக்கை
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
Chennai Hyderabad Bullet Train: சென்னை-ஹைதராபாத் புல்லட் ரயில் அதிவேகப் பாதை திட்டம்! 2:30 மணி நேரத்தில் பயணம்! முழு விவரம் இதோ!
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
நாட்டையே உலுக்கிய அதிமுக முன்னாள் எம்எல்ஏ கொலை வழக்கு: 20 ஆண்டுக்குப் பின் பவாரியா கொள்ளையர்களுக்கு கிடைத்த தண்டனை - அதிர்ச்சி தீர்ப்பு
Embed widget