மேலும் அறிய

திருச்சி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிடம் கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரிக்கை

கர்நாடக மாநிலத்தில் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக அங்குள்ள அணைகள் மீண்டும் நிரம்பி உபரிநீர் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. இதனால் மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் மீண்டும் ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மேட்டூர் அணைக்கு வந்த உபரிநீர் முழுவதும் தற்போது காவிரியில் திறந்து விடப்படுகிறது. இடையில் பவானி ஆறு, அமராவதி ஆற்றில் வரும் தண்ணீரும் கரூர் மாவட்டம் அருகேயுள்ள திருமுக்கூடலூரில் சேர்ந்து மாயனூர் கதவணைக்கு வந்தது. இதில் நேற்று மாலை நிலவரப்படி மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு 71 ஆயிரத்து 704 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் மாயனூர் கதவணையில் இருந்து காவிரியில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 784 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கதவணையில் இருந்து பிரியும் 4 பாசன வாய்க்கால்களில் 920 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 


திருச்சி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - ஆட்சியர்  அறிவிப்பு

இந்நிலையில் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி முக்கொம்பு மேலணைக்கு அதிகபட்சமாக 1 லட்சத்து 37 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த வெள்ள நீர் முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் பிரித்து வெளியேற்றப்பட்டது. உபரி நீர் வடிகாலாக விளங்கும் கொள்ளிடம் ஆற்றில் 95 ஆயிரம் கன அடியும், காவிரியில் 42 ஆயிரம் கன அடியும் வெள்ள நீர் திறக்கப்பட்டது. இதனால் கடந்த பல வாரங்களுக்கு பின்பு காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசித்தவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இன்று காலை 6 மணி நிலவரபடி முக்கொம்பு மேலணைக்கு அதிகபட்சமாக 1 லட்சத்து 90 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இந்த வெள்ள நீர் முக்கொம்பில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் பிரித்து வெளியேற்றப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் 1 லட்சம் 28  ஆயிரம் கன அடியும், காவிரியில் 62 ஆயிரம் கன அடியும் வெள்ள நீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோரம் உள்ள மக்கள் மிகவும் பாதுக்காப்பாக இருக்க வேண்டும். முக்கொம்பு, காவேரி பகுதிகளுக்கு செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார். 


திருச்சி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - ஆட்சியர்  அறிவிப்பு

இந்தநிலையில் காவிரியில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, முக்கொம்புவில் இருந்து காவிரி மற்றும் கொள்ளிடத்தில் நீர் வெளியேற்றப்பட்டதையும், மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார்  நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புடன் பணியாற்ற அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார். பின்னர், காவிரி ஆற்றின் அய்யாளம்மன் படித்துறை, அம்மா மண்டபம் படித்துறை பகுதியை அவர் நேரில் பார்வையிட்டார். அப்போது, காவிரி ஆற்றில் யாரும் இறங்கி குளிப்பதை தவிர்க்கும் வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து  திருச்சி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தார். இந்த ஆய்வின்போது, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முருகானந்தம் மற்றும் நீர்வளத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iranian President Raisi: ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? என்ன ஆச்சு அவருக்கு? அமெரிக்கா அவசர ஆலோசனை..
ஈரான் அதிபர் உயிருடன் இருக்கிறாரா? அமெரிக்கா அவசர ஆலோசனை..
Breaking News LIVE: நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
நேபாளம்: பிரதமர் பிரசண்டா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு..!
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு -  49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Lok Sabha Election Phase 5 Polling: இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு - 49 தொகுதிகள், ராகுல் காந்தி டூ ஸ்மிருதி இரானி - பலத்த பாதுகாப்பு
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
Thalaimai Seyalagam Review : முதல்வரின் உயிர்.. ஜார்க்கண்ட் கொலை.. தலைமைச் செயலகம் சீரீஸ் விமர்சனம்
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
குற்றால அருவியில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த சிறுவன்.. என்னது! வ.உ.சி-யின் கொள்ளுப்பேரனா..?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
HBD Balu Mahendra: ஏ.ஆர்.ரஹ்மானுக்காக நண்பன் இளையராஜாவையே விட்டுக்கொடுத்த பாலுமகேந்திரா - ஏன்?
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Embed widget