மேலும் அறிய

ஆன்லைன் பண மோசடி: பணத்தை மீட்ட புதுக்கோட்டை சைபர் க்ரைம் போலீசார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் மோசடி செய்தவர்களிடம் இருந்து இதுவரை ரூ.6 லட்சத்து 14 ஆயிரத்தை சைபர் கிரைம் போலீசார் மீட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது செல்போன் எண்ணுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து அனுப்பியதை போல் போலியான குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனை உண்மையான என நம்பி குறுஞ்செய்தியில் உள்ள லிங்கை கிளிக் செய்து தனது வங்கி கணக்கு மற்றும் ரகசிய குறியீடு எண்ணை உள்ளீடு செய்துள்ளார். இதில் இருந்து மர்ம ஆசாமிகள் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்தை எடுத்துவிட்டனர்.
 
பணம் மோசடி செய்தது தொடர்பாக புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பிரபாகரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மர்ம ஆசாமியின் வங்கி கணக்கு எண்ணை வைத்து விசாரித்தனர். இதனை தொடர்ந்து போலீசாரின் விசாரணையில் அந்த எண்ணில் இருந்து ஆன்லைன் நிறுவனத்தில் மடிக்கணினி, செல்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் பல ஆர்டர் செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக ஆன்லைன் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து அந்த பணத்தை முடக்கம் செய்தனர். மேலும் ரூ.98 ஆயிரத்தை மீட்டனர். அந்த பணத்தை பாதிக்கப்பட்ட பிரபாகரனின் வங்கி கணக்கில் செலுத்தினர். மேலும் ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 
 

ஆன்லைன் பண மோசடி: பணத்தை மீட்ட புதுக்கோட்டை சைபர் க்ரைம் போலீசார்
 
 
இந்த நிலையில் பணம் மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டது தொடர்பான ஆவணத்தை பிரபாகரனிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் வழங்கினார். அப்போது சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம்,  இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் உடன் இருந்தனர். குறிப்பாக ஆன்லைன் மூலம் மோசடி செய்தவர்களிடம் இருந்து இதுவரை ரூ.6 லட்சத்து 13 ஆயிரத்து 909-ஐ புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. சைபர் குற்றங்களால் பொதுமக்கள் யாரேனும் பாதிக்கப்பட்டால் பதட்டம் அடையாமல் உதவி மைய தொலைபேசி எண் 1930-ஐ தொடர்பு கொண்டு விவரங்களை அளிக்கும் பட்சத்தில் உடனடியாக எதிரியின் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவரின் இழந்த பணம் மீட்கப்படும் எனவும், சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர் நேரடியாக காவல் நிலையத்திற்கு வராமல் www.cybercrime.gov.in என்ற வலைதளம் மூலமாக புகார் அளிக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர்.
 

ஆன்லைன் பண மோசடி: பணத்தை மீட்ட புதுக்கோட்டை சைபர் க்ரைம் போலீசார்
 
மேலும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆன்லைன் மூலமாக பணத்தை கொள்ளை அடிக்கும் மர்ம நபர்கள் அதிகரித்து வருகிறார்கள். இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பொதுமக்கள் தங்களது தொலைப்பேசி எண்ணிற்கு வரும் குறுஞ்செய்தியை நம்பவேண்டாம், எனவும் மேலும் தவறுகள் நடக்கும் பட்சத்தில் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget