மேலும் அறிய

Cyber crime: ஆன்லைன் மூலம் ரூ.6¼ லட்சம் மோசடி வழக்கில் டெல்லி வாலிபர் கைது

கார் பரிசாக விழுந்திருப்பதாக வாலிபரிடம் ஆன்லைன் மூலம் ரூ.6¼ லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த டெல்லி வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, தொண்டமாந்துறையை சேர்ந்த ராஜாவின் மகன் அனந்தகுமார்(வயது 20). இவருக்கு கடந்த 15.7.2021 அன்று செல்போன் மூலம் ஒரு அழைப்பு வந்தது. நீங்கள் ஆன்லைன் தளம் மூலம் 6.8.2020 அன்று வாங்கிய ஸ்மார்ட் வாட்சுக்கு கார் பரிசு விழுந்துள்ளது. அந்த காரை பெற்றுக்கொள்ள வரி தொகையாக ரூ.6 லட்சத்து 34 ஆயிரத்தை செலுத்த வேண்டும் என கூறி 8 வங்கி கணக்கு எண்களை வழங்கியுள்ளனர். அந்த வங்கி கணக்குகளுக்கு அனந்தகுமார் பணத்தை செலுத்தியுள்ளார். ஆனால், ஓராண்டாகியும் பரிசு விழுந்ததாக கூறப்பட்ட கார் அனந்தகுமாருக்கு வந்து சேரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அனந்தகுமார் இதுகுறித்து கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ந் தேதி பெரம்பலூர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய சைபர் கிரைம் தனிப்படை போலீசார் டெல்லியில் உள்ள ரோகினி என்ற பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளான உத்தரபிரதேசம் மாநிலம், காசியாபாத் மாவட்டம், பிம் நகர் பகுதியை சேர்ந்த கிஷான்(32), காசியாபாத், விஜய நகரை சேர்ந்த ரோஹித் பால்(29), அரியானா மாநிலம், சோனிபட் மாவட்டம், ஆர்யா நகரை சேர்ந்த அங்கித் பன்சால்(30) ஆகிய 3 பேரை கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Cyber crime: ஆன்லைன் மூலம் ரூ.6¼ லட்சம் மோசடி வழக்கில் டெல்லி வாலிபர் கைது

மேலும் அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் மற்றும் மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாகி இருந்த டெல்லி மாநிலம், நாகர்பூரை சேர்ந்த மோகன் திவாரியின் மகன் பாதல் என்கிற சுஜித்குமார் திவாரியை (28) பிடிக்க பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்பேரில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், போலீசார் சதீஷ்குமார், திலீப்குமார், முத்துசாமி ஆகியோர் கொண்ட சைபர் கிரைம் தனிப்படை போலீசார் கடந்த 21-ந் தேதி டெல்லி புறப்பட்டனர். டெல்லி ரோகினி என்ற பகுதியில் தலைமறைவாக இருந்த சுஜித்குமார் திவாரியை கடந்த 26-ந்தேதி சைபர் கிரைம் தனிப்படை போலீசார் கைது செய்து அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று பெரம்பலூர் அழைத்து வந்தனர். பின்னர் சுஜித்குமார் திவாரியை போலீசார் பெரம்பலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த சைபர் கிரைம் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார். மேலும் அவர் இணையவழி மூலம் பணமோசடி புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள் "1930" என்ற இலவச அழைப்பு எண்ணை அழைத்து புகார் தெரிவிக்கவும். சைபர் குற்றங்களுக்கு www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவிடவும், என்று தெரிவித்தார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget