மேலும் அறிய

திருச்சி இலங்கை தமிழர் சிறப்பு முகாமை மூடுங்கள் - சீமான் ஆவேசம்

வட இந்தியர்களுக்கு குரல் கொடுப்பவர்கள் ஏன் தமிழர்கள், மீனவர்களுக்கு குரல் கொடுக்கவில்லை - சீமான் பேட்டி

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள நான்கு இலங்கை தமிழர்களை உடனடியாக விடுவிக்க கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில்,  காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தற்போது கண்டன பொதுக்கூட்டமாக நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “4 இலங்கை தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை, உறுதியான நிலைபாடு ஆகும். மேலும் திருச்சி இலங்கை தமிழர் சிறப்பு முகாம் என்பது புழல் சிறை போலவோ, இல்லை மற்ற சிறைகள் போலோ அல்ல, இயற்கையான  மரங்கள் இல்லை, நடைபயிற்ச்சி செய்ய வசதி இல்லை. இதுபோன்று  பல சிரமங்களுக்கு அங்கே உள்ளவர்கள் ஆளாகிறார்கள். சிறைக்குள் 32 ஆண்டுகள் இருந்த பின்னரும் தற்போது சிறப்பு முகாமில் அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரளாவில் 7 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு சட்ட வடிவை  கொண்டு வந்தார். இந்த சட்டம் கொண்டு வர காரணம் என்னவென்றால் அம்மையார் லீலாவதி கொலை வழக்கில் அவர்களது கட்சிக்காரர்கள் உடன்பட்டு இருந்ததால், அவர்களை காப்பாற்றுவதற்காக கொண்டு வந்தார். ஆனால் அந்த சட்டம் ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு பொருந்தாது என்று கொண்டு வந்தார். 


திருச்சி இலங்கை தமிழர் சிறப்பு முகாமை மூடுங்கள் - சீமான் ஆவேசம்

மேலும் ஒருவேளை தூக்கு தண்டனை எங்கள் 4 பேருக்கும் கொடுத்தால் எங்களது உடலை சீமானிடம் ஒப்படைங்கள் என்று எனது தம்பிகள் கடிதம் எழுதினார்கள். அரசாங்கத்தை நாம் எதிர்த்துப் போராடுகிறோம், என்று அரசாங்கம் நினைக்க வேண்டாம். நாம் அன்பாக தான் கோரிக்கையை முன் வைக்கின்றோம். 4 தமிழர்கள் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் பயப்படுகிறீர்கள், ஆகையால்  நீங்கள் துணிந்து முடிவெடுங்கள் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக  இருக்கிறோம்.  காங்கிரசை கழட்டி விட்டால் ஒரு தொகுதியில் கூட கட்டுத்தொகை வாங்காது.  அப்புறம் எதற்காக  இப்படி பயப்பட வேண்டும். இந்த ஆட்சியாளர்கள் நம் இன மக்களுக்கு எண்ணற்ற துரோகங்களை செய்து விட்டார்கள். குறிப்பாக  திபத்தியர்களுக்கு இந்த நாட்டில் குடியுரிமை கொடுத்திருக்கிறீர்கள், ஆனால் ஈழத்தமிழர்களுக்கு கொடுப்பதில்லை ஏன் என்று கேள்வி எழுப்பினார். 


திருச்சி இலங்கை தமிழர் சிறப்பு முகாமை மூடுங்கள் - சீமான் ஆவேசம்

குறிப்பாக முருகன்,சாந்தன், ராபார்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 4 பேரையும் தயவு செய்து விடுதலை செய்யுங்கள். அப்படி இல்லை என்றால் உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன் மீண்டும் அவர்களை பொது சிறையில் அடைத்து விடுங்கள். எல்லா அரசியல் கட்சியினருக்கும் தெரியும் இலங்கை தமிழர் சிறப்பு முகாமில் இருப்பவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் எந்த கட்சியினரும் பேசுவதற்கு முன் வரவில்லை. தற்போது வட இந்தியர்களுக்காக ஐயோ பாவம் என்று குரல் கொடுப்பவர்கள், ஏன் மீனவர்கள் வயிற்று பிழப்பிற்காக சென்று கைது செய்யும் போது குரல் கொடுக்கவில்லை. காவல்துறை நமக்கு நெருக்கடி கொடுப்பது எல்லாம் ரசிக்க பழகிக் கொள்ள வேண்டும். மேலும் மக்கள் இன்னும் திமுகவை நம்புகிறதா?? இதனை கேட்கும் போது - எப்புட்றா என்பது தான் நியாபகம் வருகிறது. காலம் மேலதிக கீழாகும் கீழது மேலாகும் என்று நாங்கள் வீதியில் இருக்கிறோம், ஒரு நாள் மேலே வருவோம் நீங்கள் ஒரு நாள் வீதிக்கு வருவீர்கள்” என தெரிவித்தார்.  மேலும், எங்களது கோரிக்கை ஒன்றுதான் இலங்கை தமிழர் சிறப்பு முகாமை மூடுங்கள் என்றும் கூறினார்.

தலைப்பு செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
மத ஒற்றுமையை வெளிப்படுத்திய பிரார்த்தனை: மழை வேண்டி கண்ணீர் மல்க சிறப்புத் தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 
பராமரிப்பில்லாத சாலையால் வேதனை... இருள் சூழ்ந்த கிரிவலப்பாதையால் பக்தர்கள் அச்சம்? எங்கு தெரியுங்களா? 

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Embed widget