மேலும் அறிய

திருச்சி இலங்கை தமிழர் சிறப்பு முகாமை மூடுங்கள் - சீமான் ஆவேசம்

வட இந்தியர்களுக்கு குரல் கொடுப்பவர்கள் ஏன் தமிழர்கள், மீனவர்களுக்கு குரல் கொடுக்கவில்லை - சீமான் பேட்டி

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள நான்கு இலங்கை தமிழர்களை உடனடியாக விடுவிக்க கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில்,  காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தற்போது கண்டன பொதுக்கூட்டமாக நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “4 இலங்கை தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது தான் நமது கோரிக்கை, உறுதியான நிலைபாடு ஆகும். மேலும் திருச்சி இலங்கை தமிழர் சிறப்பு முகாம் என்பது புழல் சிறை போலவோ, இல்லை மற்ற சிறைகள் போலோ அல்ல, இயற்கையான  மரங்கள் இல்லை, நடைபயிற்ச்சி செய்ய வசதி இல்லை. இதுபோன்று  பல சிரமங்களுக்கு அங்கே உள்ளவர்கள் ஆளாகிறார்கள். சிறைக்குள் 32 ஆண்டுகள் இருந்த பின்னரும் தற்போது சிறப்பு முகாமில் அவர்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். கேரளாவில் 7 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெற்றவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு சட்ட வடிவை  கொண்டு வந்தார். இந்த சட்டம் கொண்டு வர காரணம் என்னவென்றால் அம்மையார் லீலாவதி கொலை வழக்கில் அவர்களது கட்சிக்காரர்கள் உடன்பட்டு இருந்ததால், அவர்களை காப்பாற்றுவதற்காக கொண்டு வந்தார். ஆனால் அந்த சட்டம் ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு பொருந்தாது என்று கொண்டு வந்தார். 


திருச்சி இலங்கை தமிழர் சிறப்பு முகாமை மூடுங்கள் - சீமான் ஆவேசம்

மேலும் ஒருவேளை தூக்கு தண்டனை எங்கள் 4 பேருக்கும் கொடுத்தால் எங்களது உடலை சீமானிடம் ஒப்படைங்கள் என்று எனது தம்பிகள் கடிதம் எழுதினார்கள். அரசாங்கத்தை நாம் எதிர்த்துப் போராடுகிறோம், என்று அரசாங்கம் நினைக்க வேண்டாம். நாம் அன்பாக தான் கோரிக்கையை முன் வைக்கின்றோம். 4 தமிழர்கள் விடுதலையில் காங்கிரஸ் கட்சிக்கு நீங்கள் பயப்படுகிறீர்கள், ஆகையால்  நீங்கள் துணிந்து முடிவெடுங்கள் நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக  இருக்கிறோம்.  காங்கிரசை கழட்டி விட்டால் ஒரு தொகுதியில் கூட கட்டுத்தொகை வாங்காது.  அப்புறம் எதற்காக  இப்படி பயப்பட வேண்டும். இந்த ஆட்சியாளர்கள் நம் இன மக்களுக்கு எண்ணற்ற துரோகங்களை செய்து விட்டார்கள். குறிப்பாக  திபத்தியர்களுக்கு இந்த நாட்டில் குடியுரிமை கொடுத்திருக்கிறீர்கள், ஆனால் ஈழத்தமிழர்களுக்கு கொடுப்பதில்லை ஏன் என்று கேள்வி எழுப்பினார். 


திருச்சி இலங்கை தமிழர் சிறப்பு முகாமை மூடுங்கள் - சீமான் ஆவேசம்

குறிப்பாக முருகன்,சாந்தன், ராபார்ட் பயாஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட 4 பேரையும் தயவு செய்து விடுதலை செய்யுங்கள். அப்படி இல்லை என்றால் உங்களிடம் கெஞ்சி கேட்கிறேன் மீண்டும் அவர்களை பொது சிறையில் அடைத்து விடுங்கள். எல்லா அரசியல் கட்சியினருக்கும் தெரியும் இலங்கை தமிழர் சிறப்பு முகாமில் இருப்பவர்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் எந்த கட்சியினரும் பேசுவதற்கு முன் வரவில்லை. தற்போது வட இந்தியர்களுக்காக ஐயோ பாவம் என்று குரல் கொடுப்பவர்கள், ஏன் மீனவர்கள் வயிற்று பிழப்பிற்காக சென்று கைது செய்யும் போது குரல் கொடுக்கவில்லை. காவல்துறை நமக்கு நெருக்கடி கொடுப்பது எல்லாம் ரசிக்க பழகிக் கொள்ள வேண்டும். மேலும் மக்கள் இன்னும் திமுகவை நம்புகிறதா?? இதனை கேட்கும் போது - எப்புட்றா என்பது தான் நியாபகம் வருகிறது. காலம் மேலதிக கீழாகும் கீழது மேலாகும் என்று நாங்கள் வீதியில் இருக்கிறோம், ஒரு நாள் மேலே வருவோம் நீங்கள் ஒரு நாள் வீதிக்கு வருவீர்கள்” என தெரிவித்தார்.  மேலும், எங்களது கோரிக்கை ஒன்றுதான் இலங்கை தமிழர் சிறப்பு முகாமை மூடுங்கள் என்றும் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget