மேலும் அறிய

ஆசை காட்டி மோசம்: திருச்சியில் பி.எஸ்.என்.எல். பெண் ஊழியரிடம் ரூ.7.35 லட்சம் அபேஸ்!

திருச்சி மாவட்டத்தில் பணம் இரட்டிப்பாகும் என ஆசைவார்த்தை கூறி மோசடி, 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரனை செய்து வருகின்றனர்.

திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டை விக்னேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஞானமூர்த்தி. இவரது மனைவி வளர்மதி (வயது 60). ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அலுவலர் ஆவார். இவர் பணியில் இருந்த போது, இவருடன் திருச்சி சோமரசம்பேட்டை நாடார் தெரு பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி (61) என்பவரும் அதே அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். அப்போது தனக்குத் தெரிந்த ஒரு நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் இரண்டே ஆண்டுகளில் பணம் இரட்டிப்பு ஆகிவிடும் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் இதை அவர் முதலில் நம்ப மறுத்தார். இந்தநிலையில் வேலுச்சாமி தனது மனைவி கலாதேவி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை அழைத்துக் கொண்டு வளர்மதி வீட்டுக்கு சென்றார். பின்னர் அவரிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் ஆசை வார்த்தை கூறி கடந்த 2018 ஏப்ரல் 11-ந்தேதி ரூ.7 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை பெற்றுக் கொண்டு சென்றனர். வளர்மதியும் இரண்டு ஆண்டுகளில் பணம் இரட்டிப்பு ஆகிவிடும் என்ற மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் குறிப்பிட்ட நாட்களை கடந்தும் பணம் இரட்டிப்பு ஆகவில்லை. அதைத்தொடர்ந்து வளர்மதி வேலுச்சாமி தொடர்பு கொண்டு பணம் குறித்து கேட்டபோது, கம்பெனி நஷ்டத்தில் சென்று விட்டது. அதனால் தாமதம் ஆகிறது. விரைவில் பணம் இரட்டிப்பு ஆகிவிடும் என கூறினார்.
 

ஆசை காட்டி மோசம்: திருச்சியில் பி.எஸ்.என்.எல். பெண் ஊழியரிடம் ரூ.7.35 லட்சம் அபேஸ்!
பின்னரும் மாதக்கணக்கில் காத்திருந்தும் பணம் இரட்டிப்பு ஆகவில்லை. கொடுத்த பணமும் திருப்பி வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட வளர்மதி இது தொடர்பாக ஜீயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். அலுவலர் வேலுச்சாமி அவரது மனைவி கலாதேவி மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய மூன்று பேர் மீதும் மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் காவல்துறை தரப்பில் கூறியது.. எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தாலும், மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் வங்கி மோசடிகள் குறையவில்லை. ஒவ்வொரு நாளும் புதுப்புது வகையான மோசடிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது லிங்க் மூலமாக மோசடி நடைபெறுவதாக தருவதாகவும், குறுஞ்செய்தியில் வரும் லிங்கை யாரும் பயன்படுத்த வேண்டாம். மேலும் பணம் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தை கூறி மோசடியும் நடைபெற்று வருகிறது ஆகையால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

 
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Embed widget