மேலும் அறிய

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.36 லட்சம் மோசடி - அரியலூரில் கணவன், மனைவி கைது

அரியலூர் மாவட்டத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.36 லட்சம் மோசடி செய்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகா, கண்டமங்கலம் அருகே குமிளங்காட்டு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 43). இவரது மனைவியின் உறவினர்கள் அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் தாலுகா, விழபள்ளம் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ் (42) மற்றும் அவரது மனைவி மதியழகி (35). சம்பவத்தன்று பிரகாசும் அவரது மனைவி மதியழகியும் பிரபாகரன் வீட்டிற்கு வந்துள்ளனர். அவர்கள் பிரபாகரனுக்கு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் கேட்டுள்ளனர். அதனை நம்பிய பிரபாகரன் வங்கி பரிவர்த்தனை மூலமாகவும், ரொக்கமாகவும் ரூ.8 லட்சத்து 90 ஆயிரம் கொடுத்துள்ளார். மேலும் அவர்கள், பணம் கொடுத்தால் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக பிரபாகரனிடம் கூறியுள்ளனர்.  இதையடுத்து அவர்களிடம் அதே ஊரை சேர்ந்த பிரேம்குமார், முருகன், ரகுபதி, சண்முகசுந்தரம், கவிமணி, கதிரவன் மற்றும் இருகையூரை சேர்ந்த குருதேவன் ஆகியோரை பிரபாகரன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அவர்களிடமும் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பிரகாஷ் மற்றும் மதியழகி தம்பதியினர் ரூ.27 லட்சத்து 10 ஆயிரம் பெற்றுள்ளனர். இதனைதொடர்ந்து அவர்கள் பிரபாகரனுக்கும், கவிமணிக்கும் அஞ்சல்துறையில் பணி நியமன ஆணையை வழங்கியுள்ளனர். ஆனால் விசாரித்து பார்த்தபோது அந்த பணி நியமன ஆணை போலியானது என தெரியவந்தது.


அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.36 லட்சம் மோசடி - அரியலூரில் கணவன், மனைவி கைது

இதுகுறித்து தம்பதியிடம் கேட்டபோது அவர்கள் பணத்தை தர மறுத்துள்ளனர். மேலும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுபற்றி கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ந் தேதி பிரபாகரன் புகார் அளித்தார். அதன்பேரில் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்தநிலையில் அரியலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் பிரகாஷ் மற்றும் மதியழகியை நேற்று முன்தினம் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், 60 கிராம் தங்க நகைகள், ரூ.56 ஆயிரம், போலி பணி நியமன ஆணை கடிதம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் காவல்துறை தரப்பில் கூறியதாவது: எவ்வளவு கட்டுப்பாடுகள் விதித்தாலும், மோசடி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும்  மோசடிகள் குறையவில்லை. ஒவ்வொரு நாளும் புதுப்புது வகையான மோசடிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது லிங்க் மூலமாக மோசடி நடைபெறுவதாக தருவதாகவும், குறுஞ்செய்தியில் வரும் லிங்கை யாரும் பயன்படுத்த வேண்டாம். மேலும் பணம் இரட்டிப்பாகும் என ஆசை வார்த்தை கூறி மோசடியும் நடைபெற்று வருகிறது. அதேச்மயம் அரசு வேலை வாங்கி தருவதாக பல இடங்களில் மோசடியில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள்.  ஆகையால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget