மேலும் அறிய

அரியலூர்: தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது - சிக்கியது எப்படி..?

அரியலூர், கடலூர் மாவட்ட கோயில்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 3 திருடர்கள் வாகன சோதனையில் சிக்கினர். அவர்களிடம் இருந்து நகை-பணம், இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஊருக்கு ஒதுக்குப்புறமான கிராம கோயில்களில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டு நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருடர்களை பிடிக்க, திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் உத்தரவின் பேரில், குற்றவாளிகளை பிடிக்க அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா மேற்பார்வையில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு கலைக்கதிரவன் ஆலோசனையின் பேரில், ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையில் போலீஸ் தனிப்படையும், குற்ற புலனாய்வு துறை போலீசார் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டன. போலீசார் தொடர்ந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இன்று குற்றவாளிகள் தொடர்பான ரகசிய தகவலின் அடிப்படையில் ஆண்டிமடம்- விருத்தாசலம் ரோட்டில் ராங்கியம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி நித்தியானந்தம் மகன் தமிழ்பாரதி(வயது 21), வேல்முருகன் மகன் விஜய் என்கிற விஜயகுமார் (20), சிறுகளத்தூர் சாமிநாதன் மகன் அன்புமணி(20) ஆகிய 3 பேரிடம் விசாரித்தபோது, அவர்கள் 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.


அரியலூர்: தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது - சிக்கியது எப்படி..?

இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் அழைத்து சென்று போலீஸ் நிலையத்தில் விசாரித்து வந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது ஆண்டிமடம் போலீஸ் சரகத்தில் 4 கோயில்களிலும், ஜெயங்கொண்டம் போலீஸ் சரகத்தில் 3 கோயில்களிலும், மீன்சுருட்டி போலீஸ் சரகத்தில் 1 கோயிலிலும், தளவாய் போலீஸ் சரகத்தில் 2 கோயில்களிலும் உண்டியலை உடைத்து பணம் மற்றும் சாமி சிலைகளில் இருந்த நகைகளை திருடியதையும் ஒப்புக் கொண்டனர். மேலும் குவாகம் போலீஸ் சரகத்தில் 2 இருசக்கர வாகனங்களையும், உடையார்பாளையம் போலீஸ் சரகத்தில் ஒரு இருசக்கர வாகனத்தையும், கடலூர் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் சரகத்தில் 2 கோயில்களில் உண்டியல் மற்றும் நகைகளை திருடியதையும் ஒப்புக்கெண்டனர். கடந்த சில மாதங்களில் ஒட்டுமொத்தமாக அரியலூர் மாவட்டத்தில் 13 திருட்டு சம்பவங்களிலும், கடலூர் மாவட்டத்தில் 2 திருட்டு சம்பவங்களிலும் இவர்கள் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.25 ஆயிரம், சாமி சிலைகளில் இருந்த தங்க தாலிகள் 52 கிராம் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.


அரியலூர்: தொடர் திருட்டு குற்றங்களில் ஈடுபட்ட 3 நபர்கள் கைது - சிக்கியது எப்படி..?

பின்னர் அவர்கள் 3 பேரையும் ஆண்டிமடம் போலீசார் கைது செய்து அரியலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தனிப்படை அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்த தனிப்படை போலீசாரை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.  இதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் குற்ற செயல்களை தடுக்க காவல்துறையினர் 24 மணி நேரமும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் பொதுமக்கள் தேவை இல்லாமல் அச்சப்படத் தேவையில்லை.  சந்தேகம்படும்படி நபர்கள் யாரேனும் உங்கள் பகுதியில் சுற்றி திரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.  மேலும் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடனும், தைரியமாகவும் செயல்பட வேண்டும். குறிப்பாக  வீட்டில் தனிமையாக இருப்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும், எந்த சூழ்நிலையிலும் உதவிகள் தேவைப்பட்டாலும் உடனடியாக  காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். 

தலைப்பு செய்திகள்

விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
தமிழகத்துக்கே முன்மாதிரி... திருடர்களுக்கு ‘செக்’:  ரூ.40 லட்சம் சொந்த நிதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொறுத்திய மக்கள்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 9.21 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதம்
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget