மேலும் அறிய

சாதி குறித்த கேள்வி சம்பந்தமாக அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொல்.திருமாவளவன்

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி குறித்த கேள்வி சம்பந்தமாக அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள அங்கனூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தந்தை தொல்காப்பியனின் 12-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் திருமாவளவன் கலந்து கொண்டு அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது  அவர் கூறுகையில், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இதைத் தான் பேசவேண்டும். இதை பேசக்கூடாது என்று வரையறை வகுத்து உள்ளதை பா.ஜ.க. அரசு உடனடியாக திரும்ப பெறவேண்டும். மேலும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்து சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. இங்கு நிரந்தர பதிவாளர், நிரந்தர தேர்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் நிரந்தர துறைத் தலைவர்கள் யாரும் இல்லை. இதனால் பொறுப்பு பதவிகளுக்கு மட்டும் நியமனம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள்.  இந்நிலையில் புதிதாக ஒரு சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தில்  எம்.ஏ முதுகலை பட்ட மேற்படிப்பிற்கு வரலாற்று பாடப் பிரிவுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் கேட்கப்பட்ட கேள்விகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, தமிழகத்தில் மிகவும் தாழ்த்தப்பட்ட சாதி என்னவென்று கேட்கப்பட்டுள்ளது என்பது கண்டிக்கதக்கது என்றார். 


சாதி குறித்த கேள்வி சம்பந்தமாக அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொல்.திருமாவளவன்

மேலும் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தாழ்ந்த சாதி என்ற கேள்விக்கு அதில் உள்ள 4 பதில்களில் எந்த சாதியை குறிப்பிடுகிறது என்ற பிரச்சினை இல்லை. ஆனால் தாழ்ந்த சாதி இன்னும் இருக்கிறது என்ற கருத்தை மாணவர்களிடம்‌ திணிக்கிறார்கள். நினைவு படுத்துகிறார்கள் என்றால் இது அப்பட்டமான சாதி வெறியர்களின் இழிவு செயல். அதுவும் பெரியார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் கேள்வி என்பது திட்டமிட்டே இடம் பெற செய்துள்ளனர்.  இதற்கு பொறுப்பேற்று துணை வேந்தர் பதவி விலகவேண்டும். இதில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக கவர்னர் மாநில அரசுக்கு எதிராக செயல்படுகிறார் என்பதை விட ஒட்டு மொத்த தேசத்திற்கு எதிராக செயல்படுகிறார். அவர் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகியாக இருந்து செயல்பட்டும், கவர்னராக இருந்து செயல்படும் இந்த போக்கு கண்டிக்கத்தக்கது. இந்தியாவில் நாம் நுகர்கிற அனைத்து பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பார்கள்.  இதனால் இலங்கையைப் போன்று இந்தியாவிலும் பொருளாதார சரிவு விரைவில் வரும். சிங்களர்களுக்காக ஆட்சி நடத்துகிறோம் என்று  இலங்கையில் ஆட்சி செய்த ராஜபக்சே குடும்பத்தை அதே சிங்கள மக்கள் அவர்களது அரண்மனைக்கு உள்ளேயே சென்று விரட்டி அடித்தது போல இந்தியாவில் இந்துக்களுக்காக ஆட்சி நடத்துகிறோம் என்று கூறும் பா.ஜ.கவை இந்து சமூகம் விரட்டி அடிக்கும் காலம் வரும் என்றார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

Voter shouts at Hema malini | ”நீ மட்டும் வந்ததும் VOTE போடுவியா” சண்டை போட்ட முதியவர்! முகம் மாறிய ஹேமமாலினி
TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?
திமுக ஏன் அமைதியா இருக்காங்க? ராகுல் காரில் ஆ. ராசா நடந்தது என்ன? | Congress | Rahul Gandhi On DMK
”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
வேங்கைவயலுக்கு முதலமைச்சர் போயிருந்தால் என்னவாகியிருக்கும்? ஆ.ராசா கேள்வி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
உழவுக்காக உழைப்பவர்களை மேடையேற்றி விருது வழங்கி  கெளரவித்த நடிகர் கார்த்தி
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
Vijay: விஜய் பாவம்.. நடிகை மீனா ஏன் அப்படி சொன்னாரு தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
TVK Vijay: கடைசி வரை நிறைவேறாமல் போன விஜய்யின் ஆசை.. என்ன தெரியுமா?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Sivakarthikeyan: சுதா கொங்கராவின் 'துரோகி'யாக முயற்சித்த சிவகார்த்திகேயன் - நடந்தது என்ன?
Trump Gaza Board of Peace: இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
இப்போவாவது போர் முழுமையா ஓயுமா.? காசா ‘அமைதி வாரியம்‘ அமைத்த அதிபர் ட்ரம்ப்; அது என்ன.?
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Donald Trump: அதிபர்னு பேரு..! சொந்தமா கார் கூட ஓட்ட முடியாது - ட்ரம்புக்கு இவ்ளோ கட்டுப்பாடுகளா? சட்டத்தின் லாக்
Top 5 Richest Actors India: இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
இந்தியாவின் டாப் 5 பணக்கார நடிகர்கள் யார் தெரியுமா.? தெற்குல இருந்து ஒரே ஒருத்தர் தான் இருக்கார்
Embed widget