மேலும் அறிய

"முதல்வர் விஜய் எங்கள் வயிற்றில் அடித்துள்ளார்" - பால் உற்பத்தியாளர்கள் கொந்தளிப்பு; ஆவின் பால் நிறுத்தம்?

கொள்முதல் விலையை உயர்த்த வில்லை என்றால் 24ஆம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்க மாட்டோம் - பால் உற்பத்தியாளர்கள்

பிச்சைக்காரர்களுக்கு கூட ஐந்து ரூபாய் பத்து ரூபாய் கொடுக்கும் நிலையில் பால் உற்பத்தியாளர்களுக்கு ஒரு ரூபாய் உயர்த்தி கொடுத்து எங்கள் வயிற்றில் முதலமைச்சர் அடித்துள்ளார் என்று பால் உற்பத்தியாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். கொள்முதல் விலையை உயர்த்த வில்லை என்றால் வரும் 24ஆம் தேதி முதல் ஆவினுக்கு பால் வழங்க மாட்டோம் எனவும் பால் உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதலுக்கு நிலையாக மூன்று ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் எனவும் அதில் ஒரு ரூபாய் கொள்முதல் விலையாகவும் இரண்டு ரூபாய் ஊக்கத்தொகையாகவும் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் நேற்று சட்டசபையில் அறிவித்தார். ஆனால் தேர்தல் வாக்குறுதியில் கொள்முதல் விலையாக 44 ரூபாய் அறிவிக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் தற்போது கொள்முதல் விலை ஒரு ரூபாய் மட்டுமே முயற்சி வழங்கியிருப்பது பால் உற்பத்தியாளர்களிடம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

 

இதுகுறித்து பால் உற்பத்தியாளர் சங்கத்தை சேர்ந்தவர்கள் இன்று திருச்சி ஆவின் நிறுவனத்திற்கு வந்து அங்கு ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “முதலமைச்சர் விஜய் தேர்தல் வாக்குறுதியாக பால் கொள்முதலுக்கு 44 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் தற்பொழுது ஒரு ரூபாய் மட்டுமே உயர்த்தி வழங்கி உள்ளார். இது எங்களுக்கு போதாது தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதலுக்கு 45 ரூபாய் வழங்குகிறார்கள். நாங்கள் அவர்களுக்கு அவர்களிடம் செல்லாமல் ஆவின் நிறுவனத்திற்கு பாலை வழங்கி வருகிறோம். ஆனால் பால் கொள்முதல் விலையை உயர்த்தாமல் இருந்தால் நாங்களும் தனியார் நிறுவனத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். எங்கள் பாலை எப்படி விரட்ட வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாக தெரியும். அப்படி நாங்கள் பெற்றுக் கொள்வோம். அரசு இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்கவில்லை என்றால் வரும் 24ஆம் தேதி முதல் நாங்கள் ஆவின் நிறுவனத்திற்கு பால் விற்பனை செய்ய மாட்டோம்.


படிப்படியாக ஆவினில் பால் தட்டுப்பாடு கடுமையாக ஏற்படும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. அரசாங்கமே பொறுப்பு எனவே அந்த நிலை உருவாகாமல் இருக்க பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும். குறிப்பாக 50 ரூபாய் வரை உயர்த்தி தந்தால் தான் எங்களுடைய வாழ்வாதாரத்தை காத்துக் கொள்ள முடியும். பிச்சைக்காரர்களுக்கே 5 ரூபாய் பத்து ரூபாய் என பிச்சை போடுகிறோம். ஆனால் முதலமைச்சர் விஜய் பால் உற்பத்தியாளர்களுக்கு வெறும் ஒரு ரூபாய் உயர்த்தி வழங்கியுள்ளார். இதன் மூலம் முதலமைச்சர் எங்கள் வயிற்றில் அடித்துள்ளார். கொள்முதல் விலையை ரூ.50-க்காக உயர்த்தி வழங்க வேண்டும்” என கேட்டுக்கொண்டனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

"முதல்வர் விஜய் எங்கள் வயிற்றில் அடித்துள்ளார்" - பால் உற்பத்தியாளர்கள் கொந்தளிப்பு; ஆவின் பால் நிறுத்தம்?
GST Highway Smart Lighting: தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
தாம்பரம்–திண்டிவனம் சாலையில் புதிய மாற்றம்! இரவு பயணிகளுக்கு வரப்போகும் ஸ்மார்ட் வசதி! IOT அதிசயம்!
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
இரும்பு உத்தரங்கள் வந்தாச்சு... பணிகள் ஸ்பீடு பிடிச்சாச்சு:திருச்சி கோட்டை மேம்பாலம் ஜனவரிக்குள் திறக்க நடவடிக்கை?
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
Embed widget