மேலும் அறிய

திருச்சி மத்திய சிறை முன்பு முற்றுகை போராட்டம்.. 64 பேர் கைது

திருச்சி மத்திய சிறையில் 40 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் இலங்கை தமிழர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்பினர் போராட்டம்.

திருச்சி சிரப்பு முகாமில் இலங்கை தமிழரகள், நாங்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை அனுபவித்து வருகிறோம். எங்களை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் விடுதலை செய்ய வேண்டும், என்றனர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனிடையே இலங்கை தமிழர்கள் 4 பேர் திடீரென மரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோஷமிட்டபடி சிறிதுநேரம் மரத்தில் அமர்ந்திருந்த அவர்கள், பின்னர் கீழே இறங்கினார்கள். இந்நிலையில்  இலங்கை தமிழர் உமா ரமணன் (வயது 41) என்பவர் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சிறப்பு முகாம் வளாகத்தில் இருந்த வர்ணம் தீட்ட வைத்திருந்த வார்னீசை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் அவரது உடல் மற்றும் முகத்தில் தீப்பற்றிக்கொண்டது. உடனே முகாமில் இருந்தவர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் ஓடிவந்து தீயை அணைத்தனர். பின்பு அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கபட்டார். இதனை தொடர்ந்து திருச்சி மாவட்ட  ஆட்சியர் நேரில் சென்று ஈழத்தமிழர்களிடம் தவறான செயலில் யாரும் ஈடுபடவேண்டாம், உங்களின் கோரிக்கைகளை மாநில அரசிடம் தெரிவித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். 
திருச்சி மத்திய சிறை முன்பு முற்றுகை போராட்டம்.. 64 பேர் கைது

இந்நிலையில் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள முகாம் சிறையை உடனடியாக இழுத்து மூட வேண்டும், 40 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஈழத்தமிழர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். போராட்டத்தில் தீக்குளித்த ஈழத் தமிழர் உமா ரமணன் என்பவருக்கு உரிய நீதி வழங்கிட வேண்டும்.

தமிழ்நாட்டை நம்பி வந்த தொப்புள் கொடி உறவுகள் மீதான அடக்குமுறையை நிறுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மே 17 இயக்கம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் புலிகள் கட்சி, தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்பட்டது.


திருச்சி மத்திய சிறை முன்பு முற்றுகை போராட்டம்.. 64 பேர் கைது

இந்த போராட்டத்தில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.ஷரீப், தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன், தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இளமாறன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

போராட்டத்தின்போது இவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் திருச்சி மத்திய சிறை முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு அமைப்புகளை சார்ந்த 64 பேரை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

தலைப்பு செய்திகள்

கழிவுநீரால் மூச்சுத்திணறும் வரலாற்றுச் சின்னம்… உய்யக்கொண்டான் கால்வாய் மீட்கப்படுமா? திருச்சி மக்கள் எதிர்பார்ப்பு!
கழிவுநீரால் மூச்சுத்திணறும் வரலாற்றுச் சின்னம்… உய்யக்கொண்டான் கால்வாய் மீட்கப்படுமா? திருச்சி மக்கள் எதிர்பார்ப்பு!
இறந்தவர்களுக்கும் இருள்தானா? திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் அதிர்ச்சி கொடுக்கும் அவலம்!
இறந்தவர்களுக்கும் இருள்தானா? திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் அதிர்ச்சி கொடுக்கும் அவலம்!
KN Nehru Raid: அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை
அதிர்ந்த அறிவாலயம்..! கே.என். நேரு வீட்டில் இறங்கிய லஞ்ச ஒழிப்புத்துறை படை - தீவிர சோதனை
திருச்சி மின்வாரியத்தில் ‘ஷாக்’! ரூ.24 லட்சம் லஞ்சப் பணம்... 12 பேர் சிக்கினர்!
திருச்சி மின்வாரியத்தில் ‘ஷாக்’! ரூ.24 லட்சம் லஞ்சப் பணம்... 12 பேர் சிக்கினர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KN Nehru: கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
கே. என். நேருவை மடக்க அவிநாசியில் ஸ்கெட்ச்..! சிக்கிய நிறுவனம்? ரூ.1020 கோடி ஊழல்? DVAC அதிரடி
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
பிரதமர் மோடி ஆசிரியர்களுக்கு அறிவுரை: மொபைல், போதைப்பொருள் விழிப்புணர்வு அவசியம்!
US Iran War: கார்க் தீவு அருகே கலவரம்.! ஈரானிய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; அதிகரிக்கும் பதற்றம்
கார்க் தீவு அருகே கலவரம்.! ஈரானிய எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல்; அதிகரிக்கும் பதற்றம்
CM Vijay: CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
CM விஜயின் புது அமைச்சரவை லிஸ்ட்..! ராஜ்மோகன் காட்டில் அடைமழை - பறிபோகும் இலாகாக்கள், யாருக்கு நஷ்டம்?
கம்மி பட்ஜெட், 34 கி.மீ. மைலேஜ்; ஆல்டோ K10 காருக்கு ரூ.62,500 அதிரடி சலுகை அறிவித்த மாருதி!
கம்மி பட்ஜெட், 34 கி.மீ. மைலேஜ்; ஆல்டோ K10 காருக்கு ரூ.62,500 அதிரடி சலுகை அறிவித்த மாருதி!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
சாதிகள் பட்டியலை இணைத்தே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும்: அன்புமணி கண்டனம்!
Hyundai Compact EV Launch: டியாகோ, காமெட்டுக்கு சங்கு.! க்யூட்டான, மலிவான EV காரை களமிறக்கும் ஹூண்டாய்; எப்போ அறிமுகம்.?
டியாகோ, காமெட்டுக்கு சங்கு.! க்யூட்டான, மலிவான EV காரை களமிறக்கும் ஹூண்டாய்; எப்போ அறிமுகம்.?
Chennai Power Cut: சென்னைல ஞாயிற்றுக்கிழமை (06.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு பாருங்க
சென்னைல ஞாயிற்றுக்கிழமை (06.09.2026) எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு பாருங்க
Embed widget