மேலும் அறிய

Crime : சொத்துக்காக பாட்டியை வெட்டிக் கொன்ற பேரன்..! பெரம்பலூரில் அதிர்ச்சி..

பெரம்பலூர் மாவட்டத்தில் சொத்துக்காக சொந்த பாட்டியையே பேரன் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மனைவி ஜானகி(வயது 65). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதில் 2-வது மகளான சகுந்தலா தனது கணவர் ரவிச்சந்திரன், மகன் மணிமாறன்(26) ஆகியோருடன் மேல உசேன் நகரம் கிராமத்தில் வசித்து வருகிறார்.

மணிமாறன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரெங்கநாதன் இறந்துவிட்டார். இதையடுத்து ஜானகி சொத்துகளை விற்று, அதில் கிடைத்த பணத்தை 5 பங்காக பிரித்து, ஒரு பங்கை தனக்கு வைத்துக்கொண்டு மற்ற பங்குகளை தனது மகள்கள் மற்றும் மகனுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இதில் தனது பெரியம்மாள் மற்றும் சித்திக்கு அதிக பங்கு கொடுத்ததாகவும், தனது தாய் சகுந்தலாவிடம் ஜானகி பாரபட்சமாக செயல்படுவதாகவும் மணிமாறன் கூறி, ஜானகியிடம் சொத்தில் பங்கு கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். இதனால் மணிமாறனை ஜானகி திட்டியதாக கூறப்படுகிறது.


Crime : சொத்துக்காக பாட்டியை வெட்டிக் கொன்ற பேரன்..! பெரம்பலூரில் அதிர்ச்சி..

இந்நிலையில் ஒரு ஏக்கர் நிலத்தை ஜானகி விற்க இருந்த நிலையில், தற்போதாவது பணம் கொடுக்குமாறு கேட்டு அவரை மணிமாறன் தொந்தரவு செய்துள்ளார். ஆனால் அவரது பேச்சை ஜானகி கேட்காததால் மணிமாறன் ஆத்திரம் அடைந்தார். மேலும் சொத்தில் பங்கு கேட்டு தனது நண்பர்களான அல்லி நகரத்தைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர்களான மதியழகனின் மகன் சம்பத்(27), செந்தில்குமாரின் மகன் ரமேஷ்(25), பெயிண்டரான கலைவாணன்(40) ஆகியோரை அழைத்துக் கொண்டு தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு மணிமாறன், தனது நண்பர்களை வாசலில் நிற்க வைத்துவிட்டு, வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு சொத்தில் பங்கு கேட்டு ஜானகியிடம் தகராறு செய்துள்ளார். ஆனால் அவர் சொத்தில் பங்கு தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மணிமாறன், ஜானகியின் தலையில் அரிவாளால் வெட்டினார். இதையடுத்து அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜானகி, அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து குன்னம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மணிமாறன், சம்பத் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று ரமேஷ், கலைவாணன் ஆகியோரை கைது செய்தனர்.


Crime : சொத்துக்காக பாட்டியை வெட்டிக் கொன்ற பேரன்..! பெரம்பலூரில் அதிர்ச்சி..

இந்நிலையில் போலீசாரிடம் மணிமாறன் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது;- மணிமாறன் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு புதிதாக டிராக்டரை வாங்கியுள்ளார். அதற்காக மாதம் ரூ.43 ஆயிரம் கடன் தொகையை செலுத்த வேண்டிய நிலை இருந்துள்ளது. அந்த கடன் தொகையை அவரது வருவாய் மூலம் செலுத்த முடியவில்லை. இதனால் தனது பாட்டி ஜானகியிடம் பணம் தந்து உதவுமாறு கேட்டுள்ளார். ஆனால் அந்த தொகையை தர ஜானகி மறுத்துள்ளார்.

இதனால் அவரிடம் எனது அம்மா சகுந்தலா உன் வயிற்றில் பிறக்கவில்லையா? பெரியம்மா, சின்னம்மாவிற்கு உதவி செய்வது போல எங்களுக்கு உதவி செய்யலாம் அல்லவா? என்று கூறி சொத்தில் பங்கு கேட்டுள்ளார். மேலும் மணிமாறன் ஜானகியிடம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். ஆனால் அவரை தகாத வார்த்தைகளால் ஜானகி திட்டியதால் ஆத்திரமடைந்த அவர், தான் வைத்திருந்த அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் 4 பேரையும் பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து நீதிபதி உத்தரவின்பேரில் 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
22 வயது காதலன்.. 45 வயது கணவனை போட்டு தள்ளிய மனைவி - ப்ளானில் விழுந்த ஓட்டை, சிக்கியது எப்படி?
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Embed widget