மேலும் அறிய

திருச்சி : ஊரடங்கு விதிமீறல் : ஒரு நாளில் ரூ. 4 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் வசூலித்தது காவல்துறை

கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை..

தமிழகத்தில் கொரோனா தொற்றின்  எண்ணிக்கை கடந்த சில  நாட்களாக மாவட்டங்களில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை  அதிகரித்து வருவதால் அவற்றை தடுக்கும் பொருட்டு மாவட்ட நிர்வாகங்கள் மிகுந்த கண்காணிப்பிலும், தடுப்பு நடவடிக்கையிலும், ஈடுபட வேண்டும் என மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவியபோது மாநில முழுவது பல்வேறு கட்டுப்பாட்டுகளை  விதித்து ஊரடங்கு அரசு பிறப்பித்தது. தொற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கிய பிறகு  மக்களின் நலனை கருதி பல்வேறு தளங்களுடன் ஊரடங்கை மாநில அரசு பிறப்பித்து உத்தரவிட்டது. மேலும் மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முகக்கவசங்கள் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது என மக்கள்  கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக சில மாவட்டங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.


திருச்சி : ஊரடங்கு விதிமீறல் : ஒரு நாளில் ரூ. 4 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் வசூலித்தது காவல்துறை

குறிப்பாக திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை கடந்த ஒரு வாரகாலமாக தினந்தோறும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்றை  கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் மக்கள் விழிப்புணர்வுடன் இல்லாமலும், சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை ,முகக்கவசம் அணிவது இல்லை ஆகியவற்றை  பார்க்கும்போது தொற்றின்  எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது ,என்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி மாவட்டத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களான சிறு, குறு, கடைகள், மற்றும் வணிக வளாகங்கள், பெரிய அளவிலான கடைகள், பஜார் பகுதி, காய்கறி மார்க்கெட் ,போன்ற பகுதிகளில் தொடர்ந்து அதிகாரிகள் கண்காணிப்பில் உள்ளனர், அரசு கூறும் விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


திருச்சி : ஊரடங்கு விதிமீறல் : ஒரு நாளில் ரூ. 4 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் வசூலித்தது காவல்துறை

 திருச்சி மாவட்டம் முழுவதும் மக்களுக்கு கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகின்றன. மக்கள் அனைவரும் அரசு கூறிய விதிமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதேபோன்று காவல்துறை சார்பாக கொரோனா விதிமுறைகளை மீறியவர்கள் மீது அபதாரம் விதித்து வருகிறார்கள். திருச்சி மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட 32  இடங்களில் மக்கள் அதிகமாக கூடுகிறார்கள், அரசு கூறிய  விதிகளை பின்பற்றாமல் இருக்கிறார்கள் என கண்டறியப்பட்டு ஆங்காங்கே  சிறப்பு சோதனை மையம் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் முகக்கவசங்கள் அணியாமல், சுற்றித்திரிந்த 875 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 4 லட்சத்து 75 ஆயிரம்  வசூல் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருச்சி : ஊரடங்கு விதிமீறல் : ஒரு நாளில் ரூ. 4 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் வசூலித்தது காவல்துறை

மேலும் திருச்சியில் அண்ணாதுரை சிலை ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம், மாம்பழச்சாலை, மேலப்புதூர் ,காந்தி மார்க்கெட் உள்ளிட்ட 32 இடங்களில் நேற்று காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் தடை உத்தரவை மீறி முகக்கவசங்கள் அணியாமல், சுற்றித்திரிந்த வாகன ஓட்டிகள்  875 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.மெலும்  வருங்காலங்களில் மாநகரப் பகுதியில் வருபவர்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும், அத்தியாவசியப் பொருட்களை வாங்க செல்லும்போது சமூக இடைவெளிகளை கடைபிடிக்கவேண்டும், இவற்றை அனைத்தையும் கடைபிடிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

கொரோனா  மூன்றாவது அலை மற்ற மாநிலங்களில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தை பொறுத்தவரை 2 கோடி பேர்களுக்கு மேல் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர்.மேலும் இந்த தொற்றின் தாக்கம் மாநிலத்தில் ஏற்படாமல் இருக்கும் வேண்டுமென்றால், அனைவரும் கட்டாயமாக தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும், என மாநில அரசு பொதுமக்களுக்கு  வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget