மேலும் அறிய

புதுக்கோட்டை: விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு - சீறிய காளைகள்: 50 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டில் 2,232 காளைகள் சீறிப்பாய்ந்தது. காளைகள் முட்டியதில் 50 பேர் காயமடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம்  ஓட்டக்குளத்தில் ஸ்ரீ காரண செல்ல அய்யனார், ஸ்ரீ செல்லாயி அம்மன் கோவிலில் 130-வது ஆண்டு குதிரை எடுப்பு திருவிழா கடந்த 13-ந் தேதி நடைபெற்றது. விழாவை தொடர்ந்து ஜல்லிக்கட்டு கோவில் அருகே இன்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டினை சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
 
இதனை தொடர்ந்து போட்டியில் பங்கேற்றவர்கள் உறுதிமொழி எடுத்தனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.  அதனை யாரும் பிடிக்கவில்லை. அதன்பின் காளைகள் ஒவ்வொன்றாக வரிசையாக டோக்கன் அடிப்படையில் அவிழ்த்துவிடப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமில்லாமல் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் காளைகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். மொத்தம் 776 காளைகள் களத்தில் சீறிப்பாய்ந்தன. இதனை மாடுபிடி வீரர்கள் போட்டிப்போட்டு அடக்கினர். மாடுபிடி வீரர்கள் பகுதி, பகுதியாக களத்தில் அனுமதிக்கப்பட்டனர். களத்தில் சில காளைகள் காளையர்களிடம் பிடிபடாமல் ஆட்டம் காட்டின. அதனை அடக்க முயன்றவர்களை கொம்பால் தூக்கி வீசியது காளைகள்.
 

புதுக்கோட்டை: விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு - சீறிய காளைகள்: 50 பேர் காயம்
 
மேலும்  சில காளைகளை வீரர்களும் துணிந்து திமிலை பிடித்து அடக்கினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், வீரர்கள் பிடியில் சிக்காத காளைகளுக்கு அதன் உரிமையாளர்களுக்கும் மின்விசிறி, குக்கர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.  காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. காளைகள், மாடுபிடி வீரர்கள் பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர், ஓட்டக்குளம் ஆயக்கட்டுதாரர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.  இதேபோல் பொன்னமராவதி அருகே அம்மன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து சென்ற 756 காளைகளை, 250 மாடுபிடி வீரர்கள் போட்டுப்போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் பிடிபட்டது. சில காளைகள் வீரர்களிடம் சிக்காமல் பாய்ந்து சென்றது. காளைகள் முட்டி தள்ளியதில் 20 வீரர்கள் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவினரால் தங்க, வெள்ளி நாணயங்கள், கட்டில், பீரோ உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.
 
 
புதுக்கோட்டை: விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு - சீறிய காளைகள்: 50 பேர் காயம்
 
இதனை தொடர்ந்து அறந்தாங்கி அருகே கோவில்பட்டி சக்தி விநாயகர் கோவில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 காளைகள் கலந்து கொண்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டுப்போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களிடம் சிக்காமல் மின்னல் வேகத்தில் சென்றன. காளைகள் முட்டி தள்ளியதில் 15 பேர் காயம் அடைந்தனர். ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க, வெள்ளி நாணயம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.  இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு கண்டு களித்தனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget