மேலும் அறிய

Trichy : பெரம்பலூர், அரியலூரில் நடந்த சிறப்பு முகாம்கள்..! 124 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிப்பு..!

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் 124 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புளூ காய்ச்சல் என்று அழைக்கப்படும் எச்1.என்1. இன்புளூயன்சா காய்ச்சல் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மழை, வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக இந்த காய்ச்சல் பரவல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு சளியுடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டு வருவது அதிகரித்து வந்தது. மாவட்டங்களில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் ஏற்படும் பகுதிகள் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் குழந்தைகள், மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு டாக்டர்கள் குழுவினரினால் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகாமில் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் அறிகுறிகள் 3 தினங்களுக்கு மேல் இருக்கும் நிலையில் தேவைப்படும் நபர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. 


Trichy : பெரம்பலூர், அரியலூரில் நடந்த சிறப்பு முகாம்கள்..! 124 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிப்பு..!

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் நடந்த முகாம்களில் 20 ஆயிரத்து 971 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 72 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு முறையான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சை தேவைப்படும் 4 பேர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த முகாம்களில் 3,539 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 52 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அதில் 6 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்திட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனைத்து விதமான மருந்து மாத்திரைகளும் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.


Trichy : பெரம்பலூர், அரியலூரில் நடந்த சிறப்பு முகாம்கள்..! 124 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிப்பு..!

மேலும், இக்காய்ச்சல் பரவுவதை விரைந்து கட்டுப்படுத்த பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் குடிநீரை காய்ச்சி குடித்திடவும், உபயோகம் அற்ற பொருட்களை வீட்டைச் சுற்றி உள்ளதை அப்புறப்படுத்தவும், தேவையான பொருட்களை தண்ணீர் புகாமல் பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் பட்சத்தில் சுயமாக சிகிச்சை மேற்கொள்ளாமல் டாக்டரின் ஆலோசனையை பெற்று முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் தொடர்பான ஆலோசனை மற்றும் அவசரகால உதவிக்கு 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அலட்சியமாக இருக்க கூடாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
Tamannaah: ரியல் எஸ்டேடில் முதலீடு செய்யும் பிரபலங்கள்... சொந்த வீட்டை அடமானம் வைத்த தமன்னா
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
TRP Rating 26th Week: புது சீரியலுக்கு அடித்தது ஜாக்பாட்! கயலை தள்ளிவிட்டு  சிங்கநடை போட்ட சிங்கப்பெண்ணே! - இந்த வார டிஆர்பி நிலவரம்
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
Embed widget