மேலும் அறிய

Trichy : பெரம்பலூர், அரியலூரில் நடந்த சிறப்பு முகாம்கள்..! 124 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிப்பு..!

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் மூலம் 124 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புளூ காய்ச்சல் என்று அழைக்கப்படும் எச்1.என்1. இன்புளூயன்சா காய்ச்சல் அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இந்த வகை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. மழை, வெயில் என மாறுபட்ட பருவநிலை காரணமாக இந்த காய்ச்சல் பரவல் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு சளியுடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டு வருவது அதிகரித்து வந்தது. மாவட்டங்களில் இதனை கட்டுப்படுத்தும் விதமாக அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் காய்ச்சல் ஏற்படும் பகுதிகள் மற்றும் அனைத்து பள்ளிகளிலும் காய்ச்சலுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் குழந்தைகள், மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு டாக்டர்கள் குழுவினரினால் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முகாமில் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் அறிகுறிகள் 3 தினங்களுக்கு மேல் இருக்கும் நிலையில் தேவைப்படும் நபர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. 


Trichy : பெரம்பலூர், அரியலூரில் நடந்த சிறப்பு முகாம்கள்..! 124 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிப்பு..!

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் நடந்த முகாம்களில் 20 ஆயிரத்து 971 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 72 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு முறையான சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. மேல் சிகிச்சை தேவைப்படும் 4 பேர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று நடந்த முகாம்களில் 3,539 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அதில் 52 பேருக்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. அதில் 6 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 10 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்திட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அனைத்து விதமான மருந்து மாத்திரைகளும் கையிருப்பில் வைக்கப்பட்டுள்ளது.


Trichy : பெரம்பலூர், அரியலூரில் நடந்த சிறப்பு முகாம்கள்..! 124 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு கண்டுபிடிப்பு..!

மேலும், இக்காய்ச்சல் பரவுவதை விரைந்து கட்டுப்படுத்த பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் குடிநீரை காய்ச்சி குடித்திடவும், உபயோகம் அற்ற பொருட்களை வீட்டைச் சுற்றி உள்ளதை அப்புறப்படுத்தவும், தேவையான பொருட்களை தண்ணீர் புகாமல் பாதுகாப்புடன் வைத்துக்கொள்ள வேண்டும். காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் பட்சத்தில் சுயமாக சிகிச்சை மேற்கொள்ளாமல் டாக்டரின் ஆலோசனையை பெற்று முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் தொடர்பான ஆலோசனை மற்றும் அவசரகால உதவிக்கு 104 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அலட்சியமாக இருக்க கூடாது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget