மேலும் அறிய

திருச்சி அருகே நகைகள் கொள்ளை சம்பவத்தில் 12 பேர் கைது... 97 சதவீத நகைகள் மீட்பு

மிளகாய்பொடியை நகைக்கடை ஊழியர்கள் மீது தூவி அவர்கள் கொண்டு வந்திருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது.

தஞ்சாவூர்: திருச்சி அருகே மிளகாய் பொடி தூவி 10 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் 97 சதவீத நகைகள் மீட்கப்பட்டுள்ளது என்று திருச்சி மாவட்ட எஸ்.பி., செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

திருச்சி, சமயபுரம் அருகே  சென்னையை சேர்ந்த நகைக்கடை ஊழியர்கள் சென்ற காரை ஒரு கும்பல் வழிமறித்தது. தொடர்ந்து தாங்கள் வைத்திருந்த  மிளகாய்பொடியை நகைக்கடை ஊழியர்கள் மீது தூவி அவர்கள் கொண்டு வந்திருந்த ரூ.10 கோடி மதிப்புள்ள 10 கிலோ நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றது. திருச்சி மாவட்டத்தை பெரிதும் பரபரப்பாக்கியது இந்த கொள்ளை சம்பவம். 

இதுகுறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் கார் டிரைவர் பிரதீப் (24) இந்த கொள்ளை சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்தது. கார் டிரைவர் பிரதீப் மற்றும் அவருடைய நண்பர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அனுமன்ராம் (21), கைலாஷ் (20), வினோத் என்ற பன்னாராம்(31), முகமது சோகைல் (21), மனோகர்ராம் (27), மணீஸ்சிரோகி (19), மங்கிலால் கனாராம் (22) மற்றும் விக்ரம் ராம்நிவாஸ் ஜாட் (18) ஆகியோர் கூட்டாக சேர்ந்து 10 கிலோ நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவம் நடந்த உடனேயே தங்க நகைகளுடன் மங்கிலால் கனாராம், விக்ரம் ராம்நிவாஸ் ஜாட் ஆகியோர் மும்பைக்கு தப்பி சென்று விட்டனர். போலீசாரின் தீவிர விசாரணையில் இந்த தகவல்கள் தெரிய வந்தது. தொடர்ந்து இவர்களில் 7 பேரை தமிழக காவல்துறையினர் கைது செய்தனர். ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேரை மத்திய பிரதேச போலீசார் கைது செய்து நகைகளை கைப்பற்றினர்.

மேலும், வட மாநிலத்தைச் சேர்ந்த கணவன்- மனைவி உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இவ்வாறு இந்த கொள்ளை சம்பவத்தில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை நடந்த சில நாட்களிலேயே துரித விசாரணையில் குற்றவாளிகளும், நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்ட எஸ்.பி., செல்வ நாகரத்தினம் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தக் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கார் ஓட்டுநர் பிரதீப் தான். இந்த வழக்கில் மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து 9.9 கிலோ நகைகள் மற்றும் பணத்தை மீட்டுள்ளோம். கொள்ளையடிக்கப்பட்டதில் 97 சதவீதம் நகை மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது தமிழ்நாட்டில் வேறு வழக்குகள் இல்லை.

ஐந்து பேர் மீது வட மாநிலங்களில் வழக்கு நிலுவையில் உள்ளது. மிகவும் துரிதமாக இந்த வழக்கில் பணியாற்றி குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சிறப்பாக பணியாற்றி போலீசாருக்கு பாராட்டுக்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Chennai Metro: சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
சென்னை மக்களுக்கு குஷி... கொளத்தூரில் சுரங்கப்பணியில் அசத்தல்- மெட்ரோ ரயில் சூப்பர் அறிவிப்பு
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Embed widget