மேலும் அறிய

ஆலமரம் வேரூன்றி அரசு அலுவலக கட்டிடம் பழுது - கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் வட்டாட்சியர்

அரசு அலுவலக கட்டிடம் பராமரிப்பு செய்யப்படாததால் ஆலமரம் வேரூன்றி கட்டிடம் பழுதாகி இருப்பதை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் வட்டாட்சியர்

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தின் மேல் ஆலமரம் வேரூன்றி சுவற்றை துலையிட்டு வெளியே வந்து தொங்கும் நிலையில் நூறு ஆண்டு பழமை வாய்ந்த கட்டிடம் பழுதடைந்து விரிசல் ஏற்படும் நிலை உள்ளதால் வட்டாட்சியர் உடனடியாக ஆலமரத்தை அகற்றி கட்டிடத்தை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பிரிட்டிஷ் காரர்கள் காலகட்டத்தில் 1898 ஆம் ஆண்டு திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டமாக செயல்பட்டு வந்தது. பின்னர் 1989-ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டமாக பிரிக்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பிரிட்டிஷ் காரர்கள் காலகட்டத்தில் கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2001-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டதால் மீண்டும் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. தற்போது நூறு ஆண்டுகள் பழமையான கட்டிடத்தின் மேல் ஆலமரம் வேரூன்றி துளையிட்டு தரையில் ஊன்றும் அவல நிலை நீடித்து வருகிறது.

 


ஆலமரம் வேரூன்றி அரசு அலுவலக கட்டிடம் பழுது - கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் வட்டாட்சியர்

அதோடு மட்டுமில்லாமல் வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் பிரிட்டிஷ் காலகட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால்  இதன் மேல் ஆலமரம் வளர்ந்து ஆலமரத்தின் வேர்கள் கட்டிடத்தில் பல இடங்களில் படர்ந்து கட்டிடத்தின் உள்பகுதியிலும், வெளிப்பக்கத்திலும் வேரூன்றி இருப்பதால் கட்டிடம் சிதலம் ஏற்பட்டு நிலை உள்ளது.  திமுக ஆட்சியில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் எ.வ.வேலு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தேவையில்லாத கட்டிடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வரும் நிலையில் அமைச்சரின் சொந்த தொகுதியில் உள்ள திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் பழமையான நிலையில் புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்காமல் இருக்கும் சம்பவம் சமூக ஆர்வலர்களிடமும், அரசு அலுவலர்களிடமும், பொது மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


ஆலமரம் வேரூன்றி அரசு அலுவலக கட்டிடம் பழுது - கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் வட்டாட்சியர்

இதுகுறித்து சமூக ஆர்வலர் வினித்குமாரிடம் பேசுகையில்:

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகமாக உள்ள கட்டிடம் பிரிட்டிஸ் காலகட்டத்தில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் சிறைச்சாலை , குழந்தைகள் நீதிமன்றம் போன்ற அரசின்  முக்கிய அலுவலகமாக பயன்பாட்டில் உள்ளது. இந்த கட்டிடத்தில் சரியான பராமரிப்பு செய்யாததால் இந்த பழங்கால கட்டிடத்தில் ஆலமரம் வேரூன்றி அதனுடைய விழுதுகள் கட்டிடத்தின் கீழே வரையில் பரவி உள்ளது. இதனால் கட்டிடத்தின் உறுதி தன்மை போய்விடும், தற்போது கட்டப்படும் கட்டிடங்கள் அனைத்தும் 20 வருடங்கள் மட்டுமே உறுதியாக உள்ளது.அதன்பிறகு கட்டிடத்தின் உறுதிதன்மை இல்லாமல் சிதிலமடைந்து விடுகிறது. இதனால் மிகவும் பழமையான கட்டிடமாக  பிரிட்டிஸ் காலகட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடம் தற்போது வரையில் உறுதியோடு உள்ளது. அதன் உறுதி இல்லாமல் ஆவதற்கு கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் அரசு அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget