மேலும் அறிய

ஆலமரம் வேரூன்றி அரசு அலுவலக கட்டிடம் பழுது - கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் வட்டாட்சியர்

அரசு அலுவலக கட்டிடம் பராமரிப்பு செய்யப்படாததால் ஆலமரம் வேரூன்றி கட்டிடம் பழுதாகி இருப்பதை கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் வட்டாட்சியர்

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தின் மேல் ஆலமரம் வேரூன்றி சுவற்றை துலையிட்டு வெளியே வந்து தொங்கும் நிலையில் நூறு ஆண்டு பழமை வாய்ந்த கட்டிடம் பழுதடைந்து விரிசல் ஏற்படும் நிலை உள்ளதால் வட்டாட்சியர் உடனடியாக ஆலமரத்தை அகற்றி கட்டிடத்தை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பிரிட்டிஷ் காரர்கள் காலகட்டத்தில் 1898 ஆம் ஆண்டு திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்ட நிலையில், ஒருங்கிணைந்த வட ஆற்காடு மாவட்டமாக செயல்பட்டு வந்தது. பின்னர் 1989-ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டமாக பிரிக்கப்பட்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பிரிட்டிஷ் காரர்கள் காலகட்டத்தில் கட்டப்பட்ட வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2001-ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டதால் மீண்டும் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. தற்போது நூறு ஆண்டுகள் பழமையான கட்டிடத்தின் மேல் ஆலமரம் வேரூன்றி துளையிட்டு தரையில் ஊன்றும் அவல நிலை நீடித்து வருகிறது.

 


ஆலமரம் வேரூன்றி அரசு அலுவலக கட்டிடம் பழுது - கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் வட்டாட்சியர்

அதோடு மட்டுமில்லாமல் வட்டாட்சியர் அலுவலக கட்டிடம் பிரிட்டிஷ் காலகட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால்  இதன் மேல் ஆலமரம் வளர்ந்து ஆலமரத்தின் வேர்கள் கட்டிடத்தில் பல இடங்களில் படர்ந்து கட்டிடத்தின் உள்பகுதியிலும், வெளிப்பக்கத்திலும் வேரூன்றி இருப்பதால் கட்டிடம் சிதலம் ஏற்பட்டு நிலை உள்ளது.  திமுக ஆட்சியில் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக செயல்பட்டு வரும் எ.வ.வேலு தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பல கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தேவையில்லாத கட்டிடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டு வரும் நிலையில் அமைச்சரின் சொந்த தொகுதியில் உள்ள திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு 100 ஆண்டுகள் பழமையான நிலையில் புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்காமல் இருக்கும் சம்பவம் சமூக ஆர்வலர்களிடமும், அரசு அலுவலர்களிடமும், பொது மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


ஆலமரம் வேரூன்றி அரசு அலுவலக கட்டிடம் பழுது - கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்க்கும் வட்டாட்சியர்

இதுகுறித்து சமூக ஆர்வலர் வினித்குமாரிடம் பேசுகையில்:

திருவண்ணாமலை தாலுக்கா அலுவலகமாக உள்ள கட்டிடம் பிரிட்டிஸ் காலகட்டத்தில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் சிறைச்சாலை , குழந்தைகள் நீதிமன்றம் போன்ற அரசின்  முக்கிய அலுவலகமாக பயன்பாட்டில் உள்ளது. இந்த கட்டிடத்தில் சரியான பராமரிப்பு செய்யாததால் இந்த பழங்கால கட்டிடத்தில் ஆலமரம் வேரூன்றி அதனுடைய விழுதுகள் கட்டிடத்தின் கீழே வரையில் பரவி உள்ளது. இதனால் கட்டிடத்தின் உறுதி தன்மை போய்விடும், தற்போது கட்டப்படும் கட்டிடங்கள் அனைத்தும் 20 வருடங்கள் மட்டுமே உறுதியாக உள்ளது.அதன்பிறகு கட்டிடத்தின் உறுதிதன்மை இல்லாமல் சிதிலமடைந்து விடுகிறது. இதனால் மிகவும் பழமையான கட்டிடமாக  பிரிட்டிஸ் காலகட்டத்தில் கட்டப்பட்ட கட்டிடம் தற்போது வரையில் உறுதியோடு உள்ளது. அதன் உறுதி இல்லாமல் ஆவதற்கு கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் அரசு அதிகாரிகளின் அலட்சியம் தான் காரணம் என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
‘கிறிஸ்துமஸ் விழாவை கையிலெடுத்த திமுக’ விழிப்பிதுங்கி நிற்கும் த.வெ.க..!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்து மூடி மறைப்பதா? எச்சரித்த அன்புமணி!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
பிரதமர் மோடியுடன் நீங்களும் நேரில் பேசலாம்; பரிக்ஷா பே சர்ச்சாவுக்கு 36 லட்சம்+ விண்ணப்பம் - பதிவு செய்வது எப்படி? முழு விவரங்கள்!
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
IPL Auction 2026: ஐபிஎல் ஏலம்.. ஒவ்வொரு அணிக்கும் என்ன தேவை? ஹிட்லிஸ்டில் உள்ள வீரர்கள் - CSK, KKR சம்பவம்?
Chennai Power Cut: சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில் டிசம்பர் 17-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Lemon Pepper Chicken: வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் லெமன் பெப்பர் சிக்கன் செய்வது எப்படி? காரசாரமான சுவையில் அசத்துங்க!
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
Bus Accident: 4 பேர் எரிந்து பலி - கடும் மூடுபனி, அடுத்தடுத்து மோதிய பேருந்துகள் - டெல்லி அருகே நேர்ந்த சோகம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
IPL Auction 2026: யாருக்கு ஜாக்பாட்? 10 அணிகள், 77 இடங்கள், 350 வீரர்கள், ரூ.237.55 கோடி - இன்று ஐபிஎல் மினி ஏலம்
Embed widget