மேலும் அறிய

7 ஆண்டு குழந்தை இல்லாமல் பெற்ற குழந்தைகள்; 4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி உயிரிழந்த சோகம்

ஆரணி அருகே 4 சிறுவர்கள் ஏரியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த அடையாளம் அண்ணா நகரில் வசிப்பவர் குப்பன். இவர் விவசாயக் கூலி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி அஞ்சலி மகன் மோகன்ராஜ் வயது (12), மகள் வர்ஷா வயது (9). அதே பகுதியில் வசிப்பவர் விநாயகம். இவர் கூலி தொழிலாளி, இவருடைய மனைவி செல்வி மகள்கள் கார்த்திகா வயது ( 8) , தனிஷ்கா வயது (5 ), இந்த நான்கு பேரும் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வந்தனர். இந்த நிலை.யில் பள்ளிக்கு விடுமுறை என்பதால் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு மேல் சிறுவன் மோகன் ராஜ் உட்பட நான்கு பேரும் அங்குள்ள ஓடந்தாங்கல் ஏரியில் குளிப்பதற்காக ஒரே சைக்கிளில் சென்றுள்ளனர். சைக்கிள் மற்றும் உடைகளை ஏரிக்கரையில் விட்டு விட்டு நான்கு பேரும் தண்ணீரில் இறங்கி உற்சாகமாக குளித்துள்ளனர். 

4 சிறுவர்கள் ஏரியில் மூழ்கி பலி 

மேலும் நீச்சல் அடித்தபடி தண்ணீரில் தொடர்ந்து சென்ற போது எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கிக் கொண்டனர். இதனால் எவ்வளவு முயன்றும் வெளியே வர முடியாமல் போன நிலையில் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இதற்கிடையே ஏறியில் குளிக்கச் சென்ற பிள்ளைகள் நான்கு பேரும் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பதற்றம் அடைந்து நான்கு பேரையும் தேடி ஏரிக்கு விரைந்தனர். அப்போது ஏரிக்கரையில் சைக்கிள் மற்றும் உடைகள் மற்றும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனை தொடர்ந்து இளைஞர்கள் சிலர் ஏரியில் இறங்கி நான்காபுரமும் தேடினர் நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் சிறுவன் மோகன்ராஜ் மற்றும் சிறுமிகள் வர்ஷா, கார்த்திகா, தனிஷ்கா ஆகியோர் உடல்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 

பிரேத பரிசோதனைக்கு உடல்களை தர மறுத்த பெற்றோர் மற்றும் உறவினர்

பின்னர் சிறுவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று கூடி காவல்துறைக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை செய்த பிறகு கொடுப்பார்கள். எனவே உடல்களை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டாம் என முடிவு செய்து நான்கு பேரின் உடல்களையும் அவர் வீட்டுக்கு கொண்டு சென்று விட்டனர். இது குறித்த தகவல் அறிந்து ஆரணி தாலுகா துணை ஆய்வாளர் மகாராணி உட்பட காவல்துறையினர் அங்கு சென்று நான்கு பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்சில் ஏற்றினார். இதனால் கிராம மக்கள் ஆத்திரமடைந்து ஆம்புலன்சை முற்றுகையிட்டதோடு உடல்களை கொண்டு செல்ல மறுத்து வழி விடாமல் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு ஆம்புலன்ஸுக்கு வழிவிடப்பட்டது. இதுகுறித்து ஆரணி தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் குளிக்க சென்ற மூன்று சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் என நான்கு பேர் பலியானதால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. குப்பன் அஞ்சலி இந்த தம்பதியினருக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லை. இதனால் இருவரும் பல கோயில்களுக்குச் சென்று மனம் உருகி வேண்டிய பிறகே மோகன் வர்ஷா ஆகியோர் பிறந்துள்ளனர். இந்த நிலையில் அவர்கள் இரண்டு பேரும் ஏரியில் மூழ்கி இறந்ததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
7154
Active
9556
Recovered
77
Deaths
Last Updated: Thu 12 June, 2025 at 11:37 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
"என்னால புரிஞ்சுக்க முடியல" கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்
டெல்டா மக்களுக்கு ஹேப்பி நியூஸ்... மேட்டூர் அணையில் இன்று தண்ணீர் திறப்பு.. மகிழ்ச்சியில் விவசாயிகள்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
"என்னால புரிஞ்சுக்க முடியல" கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்
AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!
7 மாவட்டங்கள்.. 3 மாநிலங்கள்.. 6405 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது புதிய ரயில் பாதைகள்
7 மாவட்டங்கள்.. 3 மாநிலங்கள்.. 6405 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது புதிய ரயில் பாதைகள்
Embed widget