மேலும் அறிய

திருவண்ணாமலை அரசுப் பள்ளி மாணவியின் தேடலில் கி.மு.6000 புதிய கற்கால கைக்கோடரிகள் கண்டெடுப்பு

தண்டராம்பட்டு அடுத்த மேல்முத்தானூர் அரசு உயர்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவியின் தேடலில் 8000 ஆண்டுகள் பழமையான புதிய கற்கால கைக்கோடரிகள் இரண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த மேல்முத்தானூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும், தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தில் பள்ளி மாணவர்களுக்கு பழமையான கல்வெட்டுகள், நாணயங்கள், பானை ஓடுகள், கற்கருவிகள், வரலாற்றுச் சின்னங்கள் ஆகியவற்றை அடையாளம் காண, மன்றச் செயலரும், சமூக அறிவியல் ஆசிரியருமான ரா. ரேவதி பயிற்சி கொடுத்து வருகிறார். இதனால் மாணவர்கள் தங்கள் பகுதிகளில் தொல்லியல் தேடலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் காவிரிபட்டினம் என்ற ஊரைச் சேர்ந்த மு.சௌந்தர்யா என்ற மாணவி தங்கள் நிலத்தில் மேற்கொண்ட விவசாயப் பணியின் போது, புதிய கற்காலத்தைச் சேர்ந்த கல்லால் ஆன இரண்டு கைக்கோடரிகளைக் கண்டெடுத்து ஆசிரியர் ரா.ரேவதியிடம் கொடுத்தார். இவற்றை ஆய்வு செய்தார். 


திருவண்ணாமலை அரசுப் பள்ளி மாணவியின் தேடலில் கி.மு.6000 புதிய கற்கால கைக்கோடரிகள் கண்டெடுப்பு

இதுகுறித்து  ஆசிரியர் ரேவதி இதுபற்றிக் கூறியதாவது; 

காவிரிபட்டினத்தில் கிடைத்த செல்ட் வகை கைக்கோடரிகள் புதிய கற்காலத்தைச் சேர்ந்தவை. புதிய அகழாய்வுகள் மூலம் தமிழ்நாட்டின் புதிய கற்காலம் கி.மு.6000 முதல் கி.மு.2200 வரையிலானது என தமிழ்நாடு தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மனிதன் நாடோடி வாழ்க்கையில் இருந்து நிலையான வாழ்க்கைக்கு மாறிய இக்காலகட்டத்தில் வழுவழுப்பான கற்கருவிகள், கையாலும், சக்கரத்தாலும் செய்யப்பட்ட மட்பாண்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தியுள்ளான். 10 செ.மீ. நீளம் 4.5 செ.மீ. அகலம், 8 செ.மீ நீளம் 4 செ.மீ அகலம் ஆகிய அளவுகளில் இக்கருவிகள் உள்ளன. இவை சுமார் 8000 ஆண்டுகள் பழமையானவை. கருங்கல்லால் ஆன இவற்றை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றியுள்ளனர். இவற்றின் அகன்ற பகுதி கூர்மையானதாகவும், குறுகிய பகுதி பட்டையாகவும் உள்ளன. மரத்தாலான தடியில் கட்டி இவற்றை ஆயுதமாகவும், நிலத்தைக் கொத்துவதற்கும், கீறுவதற்கும் பயன்படுத்தியுள்ளார்கள். 


திருவண்ணாமலை அரசுப் பள்ளி மாணவியின் தேடலில் கி.மு.6000 புதிய கற்கால கைக்கோடரிகள் கண்டெடுப்பு

தென்பெண்ணை ஆற்றுப் படுகைகளில் புதிய கற்கால மக்கள் பரவி இருந்திருப்பதை காணலாம் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த பகுதிகளாக ஜவ்வாது மலையில் கீழையூர், பாதிரி, நாச்சாமலை போன்ற இடங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது கைக்கோடரி கிடைத்த காவிரிபட்டினம் கல்வராயன் மலைத்தொடர் பகுதியைச் சேர்ந்ததாகும். பீமாரப்பட்டி பகுதியில் உருவாகி தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் ஒரு ஆறு இப்பகுதியில் ஓடுகிறது.  மலையின் சமவெளிகளில் வாழத்தொடங்கிய புதிய கற்கால மனிதன், மலையடிவாரங்களிலும் பின்னர் தன் குடியேற்றங்களை அமைத்தான். ஜவ்வாது, கல்வராயன் மலைப் பகுதிகளிலிருந்து தென்பெண்ணை ஆற்றுப் படுகைகளில் புதிய கற்கால மக்கள் பரவி இருந்திருப்பதை இங்கு கிடைத்த கைக்கோடரிகள் மூலம் ஊகிக்கலாம் இவ்வாறு அவர் கூறினார். மாணவி சௌந்தர்யாவை தலைமை ஆசிரியர் கு.கொளந்தை மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இந்த கண்டுபிடிப்பு மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
ABP Premium

வீடியோ

Viluppuram Mobile Theft CCTV |நள்ளிரவில் கைவரிசை!COOL ஆக திருடிய திருடன்அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்
Kanimozhi 2026 election | தேர்தலில் கனிமொழி போட்டி? லிஸ்ட்டில் 4 தொகுதிகள்! மாநில அரசியலுக்கு RETURNS?
Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
அரசியல் கட்சிகளுக்கு செக்.. பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கான புதிய விதிகள்! பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
sabarimalai temple : பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு! 10 மணி நேர காத்திருப்பு! பாதுகாப்பு பணியில் போலீசார் தீவிரம்!
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
ஆட்சியில் பங்கில்லை, ஆனால் கூடுதல் இடங்கள் கேட்போம்: மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேட்டி..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்... மயிலாடுதுறை சுப்பிரமணியன் கோயில் கோபுரத்தில் தீபம் ஏற்றிய பாஜகவினர்..
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
மதுரையில் ட்ரோன் பறக்க தடை... பாதுகாப்பு காரணங்களுக்காக அதிரடி உத்தரவு - காரணம் என்ன ?
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
Rohit Sharma: 2027 வரைக்கும் வடா பாவ் வேண்டாம்.. ஃபிட்னஸ்சில் கறார் காட்டும் ரோகித்.. வைரல் வீடியோ
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
NEET 2026 Application: நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ரெடியா? முக்கிய அறிவிப்பு வெளியீடு! தவறினால் வாய்ப்பு மிஸ்!
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
Embed widget