மேலும் அறிய

ஆரணி: ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சடலத்தை கொண்டு செல்லும் அவலம்.! எப்போது தீர்வு?

ஆரணி அருகே சடலத்தை கொண்டு செல்ல வழியில்லாமல் நாகநதி ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சடலத்தை கொண்டு சென்று அடக்கம் செய்யும் பொதுமக்கள் சுடுகாட்டுக்கு பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் சடலங்களை சுமந்து செல்லும் பொதுமக்கள் இந்த நிகழுவு அங்கு தொடர்கதையாக உள்ளது. இதற்க்கு நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்  

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த  கமண்டலாபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி குள்ளன்(எ) பிரகாஷ் என்பவர் இன்று விடியற்காலையில் இயற்கை எய்தினார். சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையில் இறந்தவர்களின் சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல சரியான பாதை இல்லாததால் ஆற்றைக் கடந்து சடலத்தைக் கொண்டு சென்று அடக்கம் செய்யும் நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்தநிலையில் தமிழ் நாட்டின் வடகிழக்கு பருவமழை காரணமாக   திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில் தொடர்ந்து கனமழை காரணமாக மலையின் கீழ் உள்ள செண்பக தோப்பு அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் செண்பகத்தோப்பு  அணை முழு கொள்ளவு 57 அடியை நீர்மட்டம்  எட்டியதால் செண்பக தோப்பு அணையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆரணி கமண்டல நாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  


ஆரணி: ஆற்றில் இடுப்பளவு  தண்ணீரில் இறங்கி சடலத்தை கொண்டு செல்லும் அவலம்.! எப்போது தீர்வு?

உயிருக்கு ஆபத்தான நிலையில் சடலத்தை ஆற்றில் சுமந்து செல்லும் மக்கள் 

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட முழுவதும் தொடர் மழையின் காரணமாக அணைகள், ஏரிகள் போன்றவைகள் நிரம்பியுள்ளது. இதனால் மழை நீர் நிரம்பி வழிந்தோடுவதால் இறந்தவரின் சடலத்தை எடுத்துச் செல்ல வழி இல்லாமல்  சடலத்தை சுமந்து சென்று சடலத்துடன் கூடிய பாடையை தண்ணீர் ஓடும் ஆற்றில் இடுப்பளவு  தண்ணிர்  வழியாக அடுத்த கரைக்கு சுமந்து கொண்டு ஆபத்தான  நிலையில் எடுத்து சென்று  அடக்கம் செய்யும் நிலைமைக்கு கிராம மக்கள் ஆளாகி வருகின்றனர். சுடுகாடு பாதை முழுவதுமாக ஆற்று சூழப்பட்டு சடலத்தை சுமந்தவாறு ஆபத்தான நிலையில் தண்ணிரில் எடுத்து  செல்லும் பாதிப்புக்குள்ளான கிராம மக்கள் ஒன்றுகூடி, மாவட்ட நிர்வாகத்திடமும், அரசாங்கத்திடமும் தண்ணிரால் சூழப்பட்ட சுடுகாட்டு பாதையில் பாலம் ஒன்றை கட்டி தருமாறு கோரிக்கை வைத்தனர். 

 


ஆரணி: ஆற்றில் இடுப்பளவு  தண்ணீரில் இறங்கி சடலத்தை கொண்டு செல்லும் அவலம்.! எப்போது தீர்வு?

இது குறித்து அப்பகுதி பொதுமக்களிடம் பேசுகையில்;

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கமண்டலபுர கிராமத்தில் வசிக்கிறோம் எங்கள்  கிராமத்தின் பொதுமக்களின் கோரிக்கை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றவில்லை இறந்தவர்களின் சடலத்தை நாகநதி ஆற்றில் இறங்கி கொண்டு செல்ல அவலமும் தொடர்கதையாக உள்ளோம்.  தற்போது கமண்டல நதி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இறந்தவரின்  சடலத்தை கொண்டு செல்ல வழியில்லாமல் வெள்ள பெருக்கெடுத்து ஓடும் கமண்டல நதி ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் ஆபத்தான முறையில் சடலத்தை பொதுமக்கள் சுமந்து சென்று சுடுகாட்டில் சடங்கு நடத்தி புதைகிறோம். இறந்தவர்களின் சடலத்தை கொண்டு செல்ல வழியில்லாமல் உள்ளதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீட்டு மயான பாதையை அமைத்து தர வேண்டி கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE
Smriti Mandhana Marriage Postponed | தந்தைக்கு மாரடைப்பு!நின்றுபோன ஸ்மிருதி திருமணம்|Palash Muchchal
விஜய்க்கு NO CHANCE! ”திமுகவுடன் தான் கூட்டணி” ஆட்டத்தை ஆரம்பித்த ராகுல்
இறைநிலை அடைந்த AR ரஹ்மான் SUFISM என்றால் என்ன? ஆன்மிகம், இசை SUFI பயணம் | AR Rahman Sufi Concert
பொம்மை முதல்வர் நிதிஷ்குமார்?முக்கிய துறைகளை தூக்கிய பாஜக பரபரக்கும் பீகார் அரசியல் | Nitish kumar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
தமிழகத்தில் வாக்களிக்க இத்தனை வெளிமாநில வாக்காளர்கள் விண்ணப்பமா.? தேர்தல் அதிகாரி முக்கிய தகவல்
TN Orange Alert: சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
சென்னை உட்பட 7 மாவட்டங்கள்; வெளுக்கப் போகும் மழை; ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்ட தேதிகள் என்ன.?
Apple Distributors Warning: இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
இந்திய சில்லறை விற்பனையாளர்கள், கடைகளுக்கு ஆப்பிள் விநியோகஸ்தர்கள் எச்சரிக்கை; எதுக்கு தெரியுமா.?
MK Stalin Slams EPS: “சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
“சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணியா.?“ இபிஎஸ்-க்கு முதல்வர் கேள்வி
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
New Labour Codes: இனி ஒரே வருடத்தில் க்ராட்சுவிட்டி, WFH தாராளம், ஊதியம் ஏராளம் - புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தெரியுமா?
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(25-11-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.. முழு விவரம்
Coimbatore Power Shutdown: கோவை மின் தடை: நாளை(25-11-25) இந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது.. முழு விவரம்
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
டிசம்பர் 1ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.! குஷியில் மாணவர்கள்
விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
விஜய் சேதுபதி,  பூரி ஜெகன்னாத் இணையும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!
Embed widget