மேலும் அறிய

மதுரை டூ தூத்துக்குடிக்கு டூ வீலரில் கஞ்சா கடத்தல் - டிப்டாப் வாலிபரிடம் 11 கிலோ கஞ்சா பறிமுதல்

’’தூத்துக்குடியில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 275 பேர் மீது 240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 28 லட்சம் மதிப்புள்ள 280 கிலோ கஞ்சா பறிமுதல்’’

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ள நிலையில் இதனை தடுக்க எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி தூத்துக்குடி நகர டிஎஸ்பி கணேஷ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு மற்றும் சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன் தூத்துக்குடியில் கஞ்சா பதுக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.                                   மதுரை டூ தூத்துக்குடிக்கு டூ வீலரில் கஞ்சா கடத்தல் - டிப்டாப் வாலிபரிடம் 11 கிலோ கஞ்சா பறிமுதல்
 
இந்நிலையில் மதுரையிலிருந்து வாலிபர் ஒருவர் இருசக்கர அடிக்கடி தூத்துக்குடிக்கு வருவதாகவும், அந்தநபர் இங்குள்ள நபர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வதாகவும் டவுன் டிஎஸ்பி கணேஷுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிசிடிவி காமிரா மூலம் அவரை கண்காணித்த அதிகாரிகள் அவரை மடக்கிப்பிடிக்க வியூகம் வகுத்து காத்திருந்தனர். இந்நிலையில் ‘‘டிப்-டாப்பாக’’ உடையணிந்த வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து கொண்டிருந்தார். அவர், தூத்துக்குடி வந்ததும் அவரை பின் தொடர்ந்து சென்ற டவுன் தனிப்படையினர் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர், மதுரை பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த மரகதவேல் மகன் மணிமாறன் (25) என்பது தெரியவந்தது. மேலும் அவர் வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்ததில் அதில் 11 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலிசார், கஞ்சா கடத்திய நபரையும் கைது செய்தனர். இதன் மதிப்பு 3.50 லட்சம் ஆகும்.
                               மதுரை டூ தூத்துக்குடிக்கு டூ வீலரில் கஞ்சா கடத்தல் - டிப்டாப் வாலிபரிடம் 11 கிலோ கஞ்சா பறிமுதல்
 
மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு இவர் யாருக்காக இந்த கஞ்சாவை கொண்டு வந்தார்? தூத்துக்குடியில் இவரது சங்கிலி தொடர்புகளாக யார் யார் உள்ளனர்? மணிமாறனுக்கு கஞ்சா சப்ளை செய்வது யார்? இவர் கஞ்சா கடத்தும் குருவியாக செயல்பட்டாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் தனிப்படையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். வெளியூர்களிலிருந்து தூத்துக்குடிக்கு இதுவரை கார், வேன், பஸ், ரயில் உள்ளிட்ட வாகனங்களில் நடந்து வந்த கஞ்சா கடத்தல் தற்போது இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்த தொடங்கியிருப்பது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஏற்கனவே கடந்த சில தினங்களுக்கு முன்பாக தூத்துக்குடி மாவட்டம் குரும்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி ஜெயகுமார்,  தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த ஆண்டு கடந்த 8 மாதங்களில் மட்டும் கஞ்சா போன்ற போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் என 240 வழக்குகள் பதிவு செய்து 275 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான 280 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.
                                     மதுரை டூ தூத்துக்குடிக்கு டூ வீலரில் கஞ்சா கடத்தல் - டிப்டாப் வாலிபரிடம் 11 கிலோ கஞ்சா பறிமுதல்
 
இருசக்கர வாகனத்தின் மூலம் கஞ்சா கடத்தப்படுவது குறித்து தூத்துக்குடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Rain Alert: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. 13 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை!
Embed widget