மேலும் அறிய
கன்னியாகுமரியில் 13 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது
குமார் என்ற கூலி தொழிலாளி அடிக்கடி வீட்டிற்கு வருவதில் பழக்கம் ஏற்பட்டதாகவும் ஒருநாள் பாட்டி இல்லாத நிலையில் வீட்டிற்கு வந்த குமார் தனிமையில் இருந்த தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குமார்
கன்னியாகுமரி மாவட்டம் பரப்பற்று பகுதியில் 7-ம் வகுப்பு சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் - சிறுமி 3-மத கர்ப்பிணி ஆன நிலையில் கர்ப்பத்திற்கு காரணமான கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த குளச்சல் அனைத்து மகளிர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த தம்பதியர் அப்பகுதியில் கூலி தொழில் செய்து வருகின்றனர் இவர்களுக்கு 13-வயதில் பெண் குழந்தை உள்ளது .13-வயதான அந்த சிறுமியை மண்டைக்காட்டை அடுத்த பரப்பற்று பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி அங்குள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.13-வயதான அந்த சிறுமி கடந்த சில தினங்களாக சோர்வடைந்து காணப்பட்ட நிலையில் பெற்றோர் சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.அங்கு அந்த சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமுற்று இருப்பதை கண்டு அதிர்ந்து போயினர் மேலும் உடனடியாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கு இது தொடர்பாக தகவல் அளித்தனர்.

விரைந்து வந்த குழந்தைகள் நல அதிகாரிகள் அந்த சிறுமியை மீட்டு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிட்சைக்கா கன்னியாகுமரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த சிறுமி 3-மாத கர்ப்பமாக இருப்பதாக குழந்தைகள் நல அதிகாரிகைளிடம் தெரிவித்த நிலையில் அதிகாரிகள் தொடர்ந்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர் இதில் பக்கத்து வீட்டை சேர்ந்த 28 வயதான குமார் என்ற கூலி தொழிலாளி அடிக்கடி வீட்டிற்கு வருவதில் பழக்கம் ஏற்பட்டதாகவும் ஒருநாள் பாட்டி இல்லாத நிலையில் வீட்டிற்கு வந்த குமார் தனிமையில் இருந்த தன்னை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அன்று முதல் தான் தனிமையில் வீட்டில் இருக்கும் போது வீட்டிற்கு வரும் குமார் தனது ஆசைக்கு இணங்கவில்லை என்றால் உன்னையும் குடும்பத்தாரயும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி பலாத்காரம் செய்து வந்ததாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

இதனை அடுத்து சிறுமி கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் குமார் மீது போக்ச்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பின்னர் போலீசார் அவனை கைது செய்து நாகர்கோவில் மகிழா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமி ஒருவரை கூலி தொழிலாளி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement