மேலும் அறிய

லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்கும் உரிமம் பெற்ற திருநங்கை சுப்ரியா

’’கனரக வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமத்தை பெற்ற மூன்றாவது திருநங்கை என்ற பெயரை பெற்றுள்ளார் சுப்ரியா’’

தூத்துக்குடியில் ஒலாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமத்தை திருநங்கை சுப்ரியா பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வருவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பேட்டரி வாகனத்தை இயக்கும் ஓட்டுநரகாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த திருநங்கை சுப்ரியா, பகுதி நேரமாக கனரக வாகனங்களை இயக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடந்த ஓட்டுநருக்கான சோதனையில் திருநங்கை சுப்ரியா தேர்ச்சி பெற்றுள்ளார். இதன் மூலம் கனரக வாகனங்களை இயக்கும் உரிமம் பெற்றுள்ள மூன்றாவது திருநங்கை என்ற பெயரை சுப்ரியா பெற்றுள்ளார். இதற்கான ஓட்டுநர் உரிமத்தை தூத்துக்குடி ஆட்சியர் செந்தில் ராஜிடம் காண்பித்து திருநங்கை சுப்ரியா வாழ்த்து பெற்றார்.
                                      லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்கும் உரிமம் பெற்ற திருநங்கை சுப்ரியா
 
                            
கனரக ஓட்டுநர் உரிமம் பெற்றது குறித்து திருநங்கை சுப்ரியா தெரிவிக்கையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் உதவியால் கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான பயிற்சியை கடந்த சில மாதங்களாக பெற்று வந்தேன். தற்போது கனரக வாகனங்களை இயக்கும் சோதனையில் தேர்ச்சி பெற்று உரிமம் பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு உறுதுணையாக இருந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வட்டார போக்குவரத்து அலுவலருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் என்போன்ற திருநங்கைகளுக்கு நான் ஒரு முன்னுதாரணமாக செயல்பட விரும்புகிறேன்.
 
லாரி, பஸ் உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்கும் உரிமம் பெற்ற திருநங்கை சுப்ரியா
 
எனவே,  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் நான்  செய்துவரும் ஓட்டுனர் பணியை நிரந்தர பணியாக மாற்றி தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்கனவே நான் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் கனிமொழி, சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோரிடமும் வலியுறுத்தி மனு அளித்துள்ளேன். அதன் பேரில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தற்போது நான் செய்துவரும் பணியை நிரந்தர பணியாக மாற்றித் தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார். தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரும், தற்போது தமிழக சுற்றுலாத்துறை இயக்குனருமான  சந்தீப் நந்தூரியால், கருணை அடிப்படையில் திருநங்கை மறுவாழ்வு திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராக பணியில் அமர்த்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget