மேலும் அறிய

நெல்லை அருகே மழைநீரில் சிக்கிய அரசு பேருந்து..! அலட்சியமாக செயல்பட்ட ஓட்டுநர் சஸ்பெண்ட்..!

பேருந்தை ஓட்டியது நெல்லை போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் மாவட்டம் குளச்சல் பணிமனையைச் சேர்ந்த சசிகுமார் என்பதும் தெரியவந்தது,

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது கடந்த  சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாளை மறுநாள் முதல் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் பலத்த மழையானது பெய்தது. இதனால் நெல்லை மாநகர பகுதியில் உள்ள சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல வள்ளியூர் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழையானது கொட்டி தீர்த்தது. இதில் வள்ளியூரில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ரயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் சுமார் 4 அடி அளவிற்கு மழை நீர் தேங்கியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து திருச்செந்தூர் சென்ற அரசு பேருந்து ஒன்று மழை நீர் தேங்கி நின்ற பாலத்தை கடக்கும் முயன்றது. ஆனால் பாலத்தின் நடுப்பகுதியில் இடுப்பளவிற்கு தேங்கி இருந்த தண்ணீரில் சிக்கி பேருந்து பழுதானதால் பயணிகள் தவித்தனர். பேருந்துக்குள் தண்ணீர் சூழ்ந்த நிலையில் உடனே தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் பேருந்தில் இருந்த பொதுமக்களை தோலில் தூக்கி பாதுகாப்பாக மீட்டு வெளியே கொண்டு விட்டனர்.  இதற்கிடையில் பேருந்து தண்ணீரில் சிக்குவதற்கு முன்பு அங்கிருந்த இருவர் பேருந்து ஓட்டுநரை எச்சரிக்கின்றனர்.  இந்த பாலம் வழியாக போக வேண்டாம், நான்கு அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது என்று பேருந்து ஓட்டுநரை எச்சரித்தனர். ஆனால் அலட்சியத்தோடு ஓட்டுநர் பேருந்தை அதே வழியில் இயக்கியதால் மழைநீரில் பேருந்து செல்ல முடியாமல் சிக்கியது. இதனால் தான் பயணிகளுக்கு இந்த நிலை ஏற்பட்டது என  சமூக வலைதலங்களில் வெளியான வீடியோ மூலம் தெரிய வந்தது. 

இதைத்தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக நெல்லை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் துறை ரீதியான விசாரணை மேற்கொண்டனர். மேலும் அந்த பேருந்தை ஓட்டியது நெல்லை போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் மாவட்டம் குளச்சல் பணிமனையைச் சேர்ந்த சசிகுமார் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்களின் எச்சரிக்கையை மீறி அலட்சியத்தோடு பேருந்தை ஓட்டி பயணிகளை தண்ணீரில் சிக்க வைத்த ஓட்டுனர் சசிக்குமாரை போக்குவரத்து கழக அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget