மேலும் அறிய

அண்ணாமலை பற்றி பேசினால் வெளியில் வர கால் இருக்காது, பேச நாக்கு இருக்காது - சசிகலா புஷ்பா

பாராளுமன்ற தேர்தலில் தாமரை மலர்ந்தே தீரும் உங்கள் கனிமொழி இந்த பாராளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வ போறது உறுதி.

தமிழக பாஜக  தலைவர் அண்ணாமலையை பற்றி அனாவசியமாக பேசினால் வெளியில் வர கால் இருக்காது பேச நாக்கு இறுக்காது என்று அமைச்சர் கீதாஜீவனுக்கு,  சசிகலா புஷ்பா தூத்துக்குடியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பேசும்போது எச்சரிக்கை விடுத்துள்ளார்.


அண்ணாமலை பற்றி பேசினால் வெளியில் வர கால் இருக்காது, பேச நாக்கு இருக்காது  - சசிகலா புஷ்பா

தூத்துக்குடியில் பாரதிய ஜனதா கட்சி தெற்கு மாவட்டம் சிறுபான்மை அணியினர் சார்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நெல்லை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் மாவட்ட தலைவர் மற்றும் மாநில பொதுச்செயலாளர் பொன் பால கணபதி மற்றும் மாநில துணைத் தலைவர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


அண்ணாமலை பற்றி பேசினால் வெளியில் வர கால் இருக்காது, பேச நாக்கு இருக்காது  - சசிகலா புஷ்பா

இதில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா பேசுகையில், “தமிழகத்தின் சமூக நலத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய கீதாஜீவன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமல பற்றி தேவையில்லாமல் பேசி வருகின்றார். அண்ணாமலை படித்து மெரிட்டில் பாஸ் செய்து ஐ.பி.எஸ் அதிகாரி ஆனவர். அவர் தவறு செய்த குற்றவாளிகளை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜராக்குவது தான் வழக்கம். உங்களை போல  குற்றவாளியாக நீதிமன்றத்தில் நின்றது கிடையாது. எனவே எங்கள் தலைவர் அண்ணாமலையை பற்றி பேச உங்களுக்கு தகுதி கிடையாது. எங்கள் தலைவர் ஒன்றும் உங்கள் தலைவர் போல் கிடையாது அதனை மனதில் வைத்து பேசுங்கள்.


அண்ணாமலை பற்றி பேசினால் வெளியில் வர கால் இருக்காது, பேச நாக்கு இருக்காது  - சசிகலா புஷ்பா

நீங்கள் முட்டையில் ஊழல் செய்தீர்கள் அதனை எங்கள் தலைவர் சுட்டி காட்டினார். அதற்கு, ‘அவன் இவன்’ என்று அனாவசியமாக பேசுவது தவறு எங்களுக்கும் பேச தெரியும் ஆனால் எங்கள் கட்சியில் அப்படி எங்களுக்கு சொல்லிதரவில்லை.சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்து தூத்துக்குடி மக்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளீர்கள். ஸ்மார்ட் சிட்டி பணிகள் முடிவடையவில்லை, பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்பட்டவில்லை என்னதான் தொகுதி மக்களுக்கு செய்தீர்கள்.


அண்ணாமலை பற்றி பேசினால் வெளியில் வர கால் இருக்காது, பேச நாக்கு இருக்காது  - சசிகலா புஷ்பா

உங்கள் வேலைகளை பார்க்காமல் உங்கள் தவறுகளை சுட்டி காட்டும் எங்கள் தலைவர் அண்ணாமலையை தேவையில்லாமல் பேசினால். வெளியில் வர கால்கள் இருக்காது, பேச நாக்கு இருக்காது” என்று திமுக அமைச்சர் கீதாஜீவனுக்கு சசிகலா புஷ்பா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியின் போது தூத்துக்குடியை சேர்ந்த சுமார் 30 திமுக பெண் உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர் அவர்களுக்கு வரவேற்பு அளித்த பாஜக முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா அவர்களுக்கு உறுப்பினர் கார்டுகளை வழங்கினார்.


அண்ணாமலை பற்றி பேசினால் வெளியில் வர கால் இருக்காது, பேச நாக்கு இருக்காது  - சசிகலா புஷ்பா

கடந்த சில தினங்களுக்கு முன்பாக கோவில்பட்டியில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன், எதிலும் நாங்க துணிந்து நிற்போம், நான் தெற்கத்தி பொண்ணு என்றும், முதல்வர், அமைச்சர்களை பற்றி பொய் பேசுவதை அண்ணாமலை நிறுத்தி கொள்ள வேண்டும். இல்லை என்றால் மேடைக்கு நாங்கள் ஏறுவோம். சூடு, சொரணை இருந்தால் அண்ணாமலை நிறுத்திக்கொள்ள வேண்டும்த்துடன் அண்ணாமலை முடித்து கொள்ள வேண்டும், இல்லை என்றால் நாங்கள் எதிர்த்து நிற்போம். ஊருக்குள் வந்து பேச முடியாது என சவால் விடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
TN Rain: 18 மாவட்டங்களில் மழைதான்! அடுத்த 3 மணி நேரத்திற்கு முன்னெச்சரிக்கையாக இருங்க மக்களே!
Breaking News LIVE, July 7 :  ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
Breaking News LIVE, July 7 : ஆம்ஸ்ட்ராங் இறுதி ஊர்வலம்: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
யாரோ துரத்துவதுபோல கனவு வருகிறா?ஜோதிடம் சொல்லும் காரணம் என்ன?
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
Amstrong : பூர்வகுடிகளின் நாயகன் ஆம்ஸ்ட்ராங்... நடிகர் சாய் தீனா அஞ்சலி
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்.. நீதிமன்றம் அனுமதி!
ஆம்ஸ்ட்ராங்க் உடல் பொத்தூரில் அடக்கம்.. பெரம்பூர் கட்சி அலுவலக இடத்தில் நினைவிடம்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
பைக்கில் சென்ற தம்பதி.. மோதிய BMW கார்.. வாகனத்தில் சிக்கி 100 மீட்டருக்கு இழுத்து செல்லப்பட்ட பெண்!
Embed widget