மேலும் அறிய

Pak. Asim Munir: இந்தா தொடங்கிட்டார்ல; “இந்தியா மாயையில் இருக்கக் கூடாது“; அசிம் முனீரின் ஆத்திரமூட்டும் பேச்சு

பாகிஸ்தானின் முப்படைகளுக்கும் தலைமை தளபதியாக பதவி உயர்வு பெற்ற அசிம் முனீர், இந்தியாவின் ஆத்திரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார். அவர் என்ன கூறியுள்ளார் தெரியுமா.?

பாகிஸ்தானின் புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி(CDF) ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், இந்தியாவிற்கு எதிராக மற்றொரு தேவையற்ற ஆத்திரமூட்டும் பேச்சை வெளிப்படுத்தியுள்ளார். அவரது பதவி உயர்வை கௌரவிக்கும் விழாவில் பேசிய அவர், இந்தியாவை எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அசிம் முனீர் பேசியது என்ன.?

கடந்த வாரம் மூன்று பாதுகாப்புப் படைகளின் புதிய தலைவராக பொறுப்பேற்ற அசிம் முனீர், நாட்டின் முதல் சி.டி.எஃப் ஆக நியமிக்கப்பட்டதைக் கௌரவிக்கும் விழாவில் ஆயுதப்படை அதிகாரிகள் மத்தியில் பேசினார். அப்போது, எதிர்காலத்தில் ஏதேனும் ஆக்கிரமிப்பு ஏற்பட்டால், இன்னும் "விரைவான, கடுமையான மற்றும் தீவிரமான" பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

அதாவது, "எந்தவொரு ஆக்கிரமிப்பு ஏற்பட்டாலும் பாகிஸ்தானின் பதில் இன்னும் விரைவாகவும், தீவிரமாகவும் இருக்கும் என்பதால், இந்தியா எந்த மாயையிலும் இருக்கக்கூடாது," என்று அசிம் முனீர் கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தான் ஒரு அமைதியான நாடு என்றும், ஆனால் இஸ்லாமாபாத்தின் பிராந்திய ஒருமைப்பாடு அல்லது இறையாண்மையை யாரும் சோதிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.

இந்த விழாவின் போது, ​​பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் கடற்படை மற்றும் பாகிஸ்தான் விமானப்படை ஆகிய முப்படைகளின் படைப் பிரிவுகளும் பீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு மரியாதை செலுத்தின.

எதனால் அப்படி பேசினார்.?

பஹல்காமில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்பை குறிவைத்து, மே 7-ம் தேதி அன்று இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையைத் தொடங்கியது. இந்தத் தாக்குதல்கள் நான்கு நாட்கள் தீவிர மோதல்களாக வெடித்தது. பின்னபர், மே 10-ம் தேதியன்று, ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து ஒரு உடன்பாட்டுடன் மோதல் முடிவுக்கு வந்தது.

ஆனாலும், ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை என்றும், தேவை ஏற்பட்டால் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும் இந்தியா தெரிவித்தது. இதை மனதில் வைத்து தான், அசிம் முனீர் இத்தகைய ஒரு கூற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கும் எச்சரிக்கை

தொடர்ந்து, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் பதட்டங்கள் குறித்து பேசிய முனீர், காபூலில் உள்ள ஆப்கானிஸ்தான் தாலிபான் ஆட்சிக்கு தெளிவான செய்தி கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். "தாலிபான்களுக்கு ஃபிட்னா அல்-கவாரிஜ் [TTP] மற்றும் பாகிஸ்தான் இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை," என்று அவர் கூறினார். தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானை, அரசாங்கம் கடந்த ஆண்டு "ஃபிட்னா அல்-கவாரிஜ்" என்று அறிவித்தது. இது முந்தைய இஸ்லாமிய வரலாற்றில் வன்முறையில் ஈடுபட்ட ஒரு குழுவைக் குறிக்கிறது.

புதிதாக நிறுவப்பட்ட பாதுகாப்புப் படைத் தலைமையகம், வரலாற்றுச் சிறப்புமிக்க அடிப்படை மாற்றத்தின் அடையாளமாகும் என்று முனீர் கூறினார். "வளர்ந்து வரும் மற்றும் மாறிவரும் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, முப்படைகளின் ஒருங்கிணைந்த அமைப்பின் கீழ் பல-கள செயல்பாடுகளை மேலும் மேம்படுத்துவது அவசியம்," என்றும் அசிம் முனீர் கூறினார்.

இந்த நிகழ்வில் பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி, விமானப்படைத் தளபதி ஜாகீர் அகமது பாபர் சித்து, கடற்படைத் தளபதி அட்மிரல் நவீத் அஷ்ரஃப் மற்றும் முப்படைகளின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Embed widget